என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுப்புடவை"

    • கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
    • கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோட்ட மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தார் சாலையில் ஓரமாக கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அந்தப் பையில் 3 பவுன் தங்கச் செயின் மற்றும் கவரிங் நகைகள் பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது இதுகுறித்து பாலு கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தார்.

    கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்து நகை இருந்த பை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து பாலு மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சாலையில் கண்டெடுத்த பையை ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (23) என்ற வாலிபர் வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டு வரும்பொழுது வேகத்தடையில் இருந்து பை கீழே விழுந்து தொலைந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்து தொலைந்து போன நகை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர் கீழே கிடந்த நகை உள்ளிட்ட பொருட்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாலு, ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து உரியவரிடம் உரிய ஆவணங்களை பெற்று 3 பவுன் நகை கவரிங் நகை பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர்.

    • ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது.
    • திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.

    பிரபல தொழில் அதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி-நீதா தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச் சண்ட் திருமணம்.

    மும்பையில் வருகிற ஜூலை 12-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி-நீதா செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீதாஅம்பானி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு தனது மகன் திருமண அழைப்பிதழை சாமியின் பாதத்தில் வைத்து தரிசனம் செய்தார்.

    நீதா அம்பானி, வாரணாசியில் உள்ள ஒரு தெருவுக்குள் நடந்து சென்று பட்டுச்சேலையினை வாங்கினார். அவர் பட்டுச் சேலைகளை பார்த்து கடை ஊழியர்களிடம் விசாரிக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லக்கா பூட்டி பனாரசி ரக சேலைகளை வாங்கினார்.

    • அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டுச் சென்றார்.
    • பெண்கள், குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    போர்ட் லூயிஸ்:

    மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தினவிழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் சென்றுள்ளார்.

    மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், இன்று மாலை மொரிஷியஸ் அதிபர் தரம் கோகூலின் மனைவிக்கு சடேலி பெட்டியில் பனாரசி பட்டுப் புடவையை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்தார்.

    வாரணாசியில் இருந்து வந்த பனாரசி புடவை, ஆடம்பர மற்றும் கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாகும். அதன் நேர்த்தியான பட்டு ஆடம்பரமான ஜரிகை வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.

    இந்த நேர்த்தியான புடவை வெள்ளி ஜரிகை மையக்கருக்கள், ஒரு பரந்த ஜரிகை பார்டர் மற்றும் ஒரு விரிவான பல்லு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது திருமணங்கள், திருவிழாக்கள் மற்றும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

    இந்தப் புடவைக்கு துணையாக குஜராத்தில் இருந்து வந்த சடேலி பெட்டி உள்ளது. இது விலைமதிப்பற்ற புடவைகள், நகைகள் அல்லது நினைவுப் பொருட்களை சேமிக்க வடிவமைக்கப்பட்ட சிக்கலான உள் வேலைப்பாடுகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×