search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை ரெயில்"

    • இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.
    • வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ெரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பார்வதிபுரம் பகுதியிலும் இரட்டை ெரயில் பாதை அமைப்பதற்கு மணல்கள் நிரப்பப்பட்டு தண்ட வாளங்கள் போடப்பட்டு வருகிறது.

    பார்வதிபுரம் ெரயில்வே மேம்பாலம் அருகில் தண்டவாளத்தின் அடியில் தண்ணீர் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு மடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.

    இதனால் மழை நேரங்க ளில் ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், மேயர் மகேசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை அந்த பகுதியை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக ெரயில்வே அதிகாரிகளுடன் பேசினார்.

    பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது

    ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குளங்களில் இருந்து வெளி யேறும் தண்ணீர் ெரயில்வே தண்டவா ளத்தின் கீழ் உள்ள மடை வழியாக அடுத்த பகுதிக்கு சென்றது. தற்பொழுது இரட்டை ரெயில்வே பாதை பணி நடைபெற்று வரும் நிலை யில் தண்டவாளத்திற்கு கீழ் மடை அமைக்கப்பட வில்லை. எனவே வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதிகாரி கள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளனர். நாகர்கோவில் நகரில் கழிவு நீர் ஒடைகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புத்தன்அணை யில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், திமுக மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், ஷேக் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இரட்டை ரெயில் பாதை இல்லாத தால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
    • ஆரல்வாய்மொழி-நாகர் கோவில் இடையே தண்ட வாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான குமரி மாவட்ட மக்கள் தங்கள் தேவைகளுக்காக மாநி லத்தின் தலைநகரமான சென்னைக்கும் பிற ஊர்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டி உள்ளது. இதற்கு ரெயில் சேவை மிக முக்கியமாக உள்ளது.

    ஆனாலும் இரட்டை ரெயில் பாதை இல்லாத தால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் இருக்கின்ற ரெயில்களும் கிராசிங்கிற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக செல்லும் நிலை நிலவுகிறது.

    இந்த நிலையை மாற்ற மதுரையிலிருந்து நாகர்கோ வில் வரையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது இதில் மதுரை-திருநெல்வேலி இடையேயான பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

    தொடர்ந்து திருநெல்வேலி- நாகர்கோவில் இடையேயான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக முதல் கட்ட மாக பாலங்கள் கட்டப் பட்டன.தொடர்ந்து தண்டவாளங்களை அமைப்ப தற்காக மண் சீர மைக்கப்பட்டு அதன் மீது ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகள் பெரும் பாலான இடங்களில் முடிந்து விட்டன. தற்போது ஆரல்வாய்மொழி-நாகர் கோவில் இடையே தண்ட வாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. மேலும் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணியும் இந்த பாதையில் நடந்து வருகிறது.

    தோவாளை- நாகர்கோ வில் சந்திப்பு ரெயில் நிலை யம் இடையே உள்ள பழை யாற்று பகுதியில் ஏற்கனவே ஒரு பாலம் இருந்த அளவில் தற்போது மேலும் மூன்று பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையிலும் மற்ற 2 பாலங்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யத்திற்கு ரெயில்கள் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் தற்போது கருங்கல் கொட்டப்பட்டு தண்ட வாளங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. மேலும் நாகர்கோவில் சந்திப்பு ெரயில் நிலையத்தில் இட நெருக்கடி உள்ளதால் நடைமேடை விஸ்தரிப்பு பணியும், முனைய விரி வாக்க பணியும் தொடங்க ப்பட இருக்கிறது.

    இந்த பணியை முழு வீச்சில் செய்து முடிக்க ெரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. திருநெல்வேலி வழித்தடத்தில் மேலும் 2 தண்டவாளங்கள் அமைந் தால் ெரயில்கள் தாமதம் இன்றி செல்ல வழி வகுக்கும். இதே போல் நாகர்கோவில் கன்னி யாகுமரி இடையேயான இரட்டை ெரயில் பாதை பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    சாமிதோப்பு, சுசீந்திரம், அகத்தீஸ்வரம், வடக்கு தாமரை குளம் போன்ற பகுதிகளிலும் ஜல்லிகள் கொட்டப்பட்டு தண்ட வாளங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெற்கு ெரயில்வே பொது மேலாளர் நேரில் ஆய்வு செய்தார். அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து இந்த பணிகள் மேலும் வேகம் எடுத்துள்ளன.

    இதனால் இரட்டை ெரயில் பாதை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே விரை வில் நாகர்கோவில்- கன்னியாகுமரி- திருநெல்வேலி இரட்டை ெரயில் பாதை பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ெரயில் சேவை தொடங்கும் பட்சத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயண நேரம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

    ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    ×