search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்குவங்காளம்"

    • கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து கிளம்பிச் சென்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சி டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று மம்தாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து இரவில் போராடி வரும் டாக்டர்கள், மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.

    தனது வீட்டு வாசல் வரை வந்த டாக்டர்கள் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

    நீங்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வழங்கி உள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

    நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்றார்.

    வீடியோ பதிவு செய்வதை ஏற்காததால் பயிற்சி டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.

    • சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.
    • சஞ்சய் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை  பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

     

     

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

    சம்பவத்தன்று அதிகாலையில் அவன்  மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராயைப் பிடித்து விசாரித்த போது அவர் பெண் மருத்துவரைக் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண் டாக்டரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கால், வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப் பட்டுள்ளது.

     

    இந்நிலையில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்த பிறகு சஞ்சய் ராய் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று மறுநாள் காலை வெகுநேரம் வரை தூங்கி உள்ளான்.

    பின்னர் எழுந்ததும் தடயங்களை அழிக்க முடிவு செய்து, கொலை செய்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைத் துவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், சம்பவம் நடந்த அன்றைய இரவு பணியிலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்துக்களுக்கு ஆபத்து, எனவே மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது
    • 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்'

    வங்காள தேச அகதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க பக்கம் இருந்து அழுத்தம் வரத் தொடங்கியுள்ளது.

    கடந்தவாரம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின்போது பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வங்காளதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் எனவே அவர்கள் நுழையும் வழிகளாக உள்ள மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில்தான், நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு [attempt to divide the state] எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

    நேற்று இந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசிய மம்தா, 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.

     

    இதற்கிடையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஊடுருவல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் நேற்று பேசியிருந்தார். மேலும் மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வங்காள தேசத்திலிருந்து 1 கோடி இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் நுழைவார்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. 

    • நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
    • கருத்துக்கணிப்புகள் கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

    கொல்கத்தா:

    7 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அதன்பிறகு நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

    இதில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தன. இந்த கருத்துக்கணிப்புகளை மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் இதுவரை சரியாக இருக்கவில்லை.

    இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

    தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கிறார்கள் என்று தவறான தகவலை பரப்பியது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்று மம்தா பானர்ஜி கூறினார்.

    • அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.
    • பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    பார்வதிதேவி சிவலோகத்தில் இருந்து தன் பிறந்த வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சியாக

    மேற்கு வங்கத்தில் காளிபூஜை கொண்டாடப்படுகிறது.

    இந்த சமயத்தில் மேற்கு வங்காள பெண்கள் எத்தனை வயது உடையவராக இருந்தாலும்,

    அவரவர் பிறந்த வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    அவர்களை பெற்றோர் வரவேற்று புத்தாடை முதலானவை எடுத்து கொடுத்து உபசரிப்பார்கள்.

    தன் வீட்டில் இருக்கும் ஆபரணங்களையும், இனிப்பு வகைகளையும் மகள் மீது அள்ளி எறிந்து மகிழ்கின்றனர்.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பிறந்த வீட்டிற்கு வர முடியாமல் போனால்,

    பெற்றோரே நேரடியாக மகள் வீட்டிற்கு சென்று பரிசு பொருட்களை வழங்குவர்.

    இதனால் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டிற்கும் நல்லுறவை உண்டாகும் பாலமாக இந்த விழா திகழ்கிறது.

    • 250 ஆண்டுகள் பழமையான ஜமீந்தர் குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாகும்.
    • 1781-ம் ஆண்டில் மகாராஜா ஜாய்நாராயண் கோஷல் பகதூரால் கட்டப்பட்டது.

    காயத்ரி மந்திர், புகைலாஷ் என்பது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். அங்கு சுற்றிலும் ஏராளமான போஜ்புரி பேசும் மக்கள் வசிக்கும் இடம். புகைலாஷ் எஸ்டேட் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழமையான ஜமீந்தர் குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாகும். இது புகைலாஸ் ராஜ்பரி என்று அழைக்கப்படுகிறது. முழு பகுதியும் 100 பிகாஸ் நிலப்பரப்பில் பரவி இருந்தது, ஆனால் கிடர்போர் கப்பல்துறை விரிவாக்கம் காரணமாக சொத்து குறைக்கப்பட்டது.

    ஒரு குளத்தின் கரையில், ரக்தா-கமலேஷ்வர் மற்றும் கிருஷ்ணா-சந்திரேஷ்வர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரட்டை சிவன் கோயில்கள் 1781-ம் ஆண்டில் மகாராஜா ஜாய்நாராயண் கோஷல் பகதூரால் கட்டப்பட்டது. இரண்டு பெரிய சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் சுமார் 11 அடி உயரம் கொண்டவை. இங்குள்ள கோவில் அமைப்பு கடந்த காலத்தை நினைவுபடுத்தும் புகைலாஷ் ஜமீன்தார்களின் காலத்து கோயில் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகிறது. இது வங்காளத்தின் பொதுவான கோவில்களின் வடிவமைப்பே ஆகும்.

    ஜாய்நாராயண் கோஷல் (1752-1821) கோபிந்தபூரில் பிறந்தார் மற்றும் சமஸ்கிருதம், இந்தி, பெங்காலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். அவர் பாட்னா, முர்ஷிதாபாத், டாக்கா மற்றும் பர்த்வான் ஆகிய மாகாண சபைகளுக்கு சேவை செய்ய நவாப் முபாரக் தவுலத்தால் பரிந்துரைக்கப்பட்டார். அவர் டெல்லி பேரரசர் முகமது ஜஹந்தர் ஷாவிடமிருந்து அரச மானியம் பெற்றார் மற்றும் மகாராஜா பகதூர் என்ற பட்டத்தை வழங்கினார். அருகாமையில் உள்ள கல்வெட்டு படி, அவர் போலீஸ் சூப்பிரண்டு ஜான் ஷேக்ஸ்பியரின் காலத்தில் ஒரு கண்காணிப்பாளராகவும் இருந்தார் மற்றும் ராஜா ராம்மோகன் ராய் மற்றும் ஈஸ்வர்சந்திர வித்யாசாகர் ஆகியோருடன் இணைந்து நற்பணி செயல்களில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜமீந்தர் அரண்மனை சிதிலமடைந்து சில தூண்கள் மற்றும் உள் முற்றம் மற்றும் நஹபத்-கானா ஆகியவை கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றன. 1782-ம் ஆண்டு கட்டப்பட்ட துர்கா தேவியின் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள் முற்றத்தில் அமைந்துள்ளது.

    மேலும் சாதக் ராம்பிரசாத் இந்த கோவிலுக்கு விஜயம் செய்ததாக நம்பப்படுகிறது, மேலும் அவர்தான் புகைலாஷ் அல்லது பூமியில் உள்ள கடவுள்களின் இருப்பிடம் என்று பெயர் சூட்டினார். மறுசீரமைப்பு திட்டத்தில் இரண்டு கோயில்கள் மட்டுமின்றி, பெரிய குளம் மற்றும் சுற்றுப்புறமும் புனரமைக்கப்பட்டது. இரண்டு கோவில்களுக்கு இடையே பெரிய நந்தி காளை சிலை வைக்கப்பட்டது.

    தற்போது ஆட்சல சிவன் கோவில்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சிவலிங்கங்கள் உள்ளன. கிழக்கே உள்ள லிங்கத்திற்கு ரக்தகமலேஷ்வர் என்றும், மேற்கு லிங்கம் கிருஷ்ணசந்தனேசுவரர் என்றும் பெயர். இரண்டு கோயில்களும் உயர்ந்த சிவலிங்கங்கள், கிருஷ்ணசந்தனேசுவருடன், ரக்தகமலேஷ்வரரை விட சற்று உயரமாக உள்ளது. சிவலிங்கங்கள் இந்தியாவிலேயே மிக உயரமானவை என்று கோவில் தளத்தில் பலகை கூறுகிறது.

    கோவில் வளாகத்தின் பெரிய பகுதியில் சிவகங்கா என்ற பெரிய ஏரி உள்ளது. புதிதாக கட்டப்பட்ட சுவரில் பழைய மாத்திரைப் பெட்டிகளும், தெற்கே உள்ள குவிமாடப் பந்தல் ஜெய்நாராயண் கோசலின் சிலையும் உள்ளன. புகைலாஷ் ராஜ்பரி சாலையின் மறுபுறத்தில் அமைந்துள்ளது.

    தாழ்வாரத்தின் வழியாக நுழைவது இப்போது தடுக்கப்பட்டுள்ளது மற்றும் உட்புறங்களை ஒரு பக்க நுழைவாயில் வழியாக அணுகலாம். நுழைவாயில் பல கோயில்களுடன் வரிசையாக ஒரு பெரிய முற்றத்திற்கு செல்கிறது. இடதுபுறம் மிகப்பெரிய நடன மண்டபம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கூரை நீண்ட காலமாக இடிந்து விழுந்தது. இந்த வளாகத்தில் இரண்டு சிறிய பீரங்கிகளும் உள்ளன.

    வலதுபுறத்தில் கோசல் குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீ ஸ்ரீ பதிதா பபோனி துர்கா மந்திர் உள்ளார். மகிசாஷுர்மர்தினி தோரணையில் உள்ள துர்க்கை தெய்வம் மற்றும் எட்டு உலோகங்கள் (அஷ்டதாது) கலவையால் ஆனது. ஜெய்நாராயண் கோசால் கட்டப்பட்ட ராஜ்பரி வளாகம் 1782-ம் ஆண்டிற்கு முந்தையது மற்றும் அதன் சில பகுதிகள் இன்னும் கோசல் குடும்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் உட்புறச் சுவர்களில் ஒரு பெரிய செப்புப் தகடு ஜெய்நாராயண் கோசலின் வாழ்க்கைக் கதையை பாரசீக மற்றும் ஆங்கிலத்தில் விவரிக்கிறது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வங்காள மொழியில் ஒரு சிறிய கல்வெட்டு, கோவிலை நிறுவியவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைத் தருகிறது.

    ஆனால் இன்று ராஜ்பரி படப்பிடிப்பு நோக்கங்களுக்காக மற்றும் பல பெங்காலி தொடர்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு கொல்கத்தாவின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் அரிதாகவே வந்தாலும் உள்ளூர் மக்களை வெகுவாக ஈர்க்கிறது. சிவராத்திரியின் போது கோயில்களுக்கு உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    ×