search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிகுறிகள்"

    • டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
    • டைப் 2 நீரழிவுநோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும்.

    இந்தியாவில் வயது வித்தியாசமின்றி அதிகரித்து வரும் நீரழிவு நோய் பற்றிய போதுமான புரிதல் இல்லாதது நோயை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே நோயின் அறிகுறிகுறிகள் குறித்து முதலில் விழிப்புணர்வடைவது அவசியம்.

    உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும் அளவுக்கு இன்சுலின் சுரக்க முடியாது. இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

     

    டைப் 2 நீரழிவு நோய் வயதானவர்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது. சமீப காலமாக, உடல் பருமன் பிரச்சனை உள்ள குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடமும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. டைப் 1 நோய் மரபணு ரீதியாக அடுத்த தலைமுறைக்கு பரவும் நிலையில் டைப் 2 வாழ்க்கை முறைகளாலும் உணவுப் பழக்கத்தாலும் ஏற்படுகிறது.

    டைப் 2 நோயை ஒருவரின் மூச்சிலிருந்து கண்டறிய முடியும். உங்களது. உங்களது மூச்சில் பழத்த்தின் வாசனையை அடிக்கடி நேரிட்டால் அது டைப் 2 நீரழிவு நோய் இருப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

     

     ஆரம்பத்தில் கூறியபடி ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸை சமன் செய்ய கெடோஆசிடோசிஸ் (ketoacidosis) என்ற செயல்பாடு உடலில் நடப்பதால் மூச்சில் இந்த பழ வாசனை உருவாகிறது. இந்த டைப் 2 சர்க்கரை வியாதி இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும்.
    • நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது.

    கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு முன்பே சில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறியாக வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். உணவு சமைக்கும்போதும் லேசாக வெளிப்படும் நறுமணம் கூட அதிகமாக உணர முடியும்.

    சில வாசனைகள் பிடித்தாலும் சில வாசனைகள் குமட்டலை உண்டாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

    தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறி தான். பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும்.

    வழக்கத்தை விட அதிகமாக சோர்வு இருந்தால் அதற்கு காரணம் கருத்தரித்தலாக இருக்கலாம்.

    நாள் முழுவதும் பசி உணர்வு அதிகரிக்கும். ஆனால் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர மற்ற உணவுகள் சாப்பிட தோன்றும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

    வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர முடியும். இது அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர முடியும்.

    இந்த அறிகுறிகள் மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

    இந்த அறிகுறிகளை உணரும்போது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

    • குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
    • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.

    மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.

    குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

    அறிகுறிகள்:

    * மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.

    * மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.

    * குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

    * கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.

    * கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

    மலச்சிக்கல் உண்டாக காரணம்:

    * குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

    * தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    * திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

    * மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.

    • மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.
    • திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    மாரடைப்பில் என்ன நடக்கும்?

    உங்கள் இதயம் எடுத்துச் செல்லும் ஆக்ஸிஜனின் காரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. கொலஸ்ட்ரால், கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் கலவையான பிளேக் அடுக்கு, இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் மூலம் பரவும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது மாரடைப்பு ஏற்படலாம்.

    என்ன அறிகுறிகள் மாரடைப்பைக் குறிக்கின்றன?

    வழக்கமாக, மாரடைப்பு அறிகுறிகள் படிப்படியாக சில மணிநேரங்கள், நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே உருவாகத் தொடங்கி சில காலம் நீடிக்கும். மேலும், மாரடைப்பின் போது இரத்த விநியோகம் தடைபட்ட பின்னரும் இதயம் துடிப்பதை நிறுத்தாது. மேலும், மாரடைப்பின் அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களில் வேறுபடலாம்.

    மாரடைப்பின் போது சில குறிப்பிடத்தக்க அறிகுறிகள்:

    உங்கள் மார்பு அல்லது கைகளில் அழுத்தம், இறுக்கம், வலி, அழுத்துதல் அல்லது வலி உணர்வுகள், இது உங்கள் கழுத்து, தாடை அல்லது முதுகில் பரவக்கூடும்

    குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்

    மூச்சு விடுவதில் சிரமம், குளிர் வியர்வை, சோர்வு, திடீரென ஏற்படும் லேசான தலைச்சுற்றல்.


    மாரடைப்புக்குப் பிறகு உங்கள் இதயம் பாதிக்கப்படுகிறதா?

    இதயம் மிகவும் உறுதியான உறுப்பு. எனவே, தாக்குதலுக்கு ஆளான பிறகு, அதில் சில சேதம் அடைந்தாலும், மற்ற பாதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், உங்கள் இதயம் பலவீனமான நிலைக்கு வரலாம், அதற்குப் பிறகு அதிக கவனிப்பு தேவைப்படலாம்.

    கார்டியாக் அரெஸ்டில் என்ன நடக்கும்?

    திடீரென இதய செயலிழப்பு ஏற்படும் போது திடீர் கார்டியாக் அரெஸ்ட் (SCA) ஏற்படலாம். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியா) காரணமாக, பம்ப் செய்யும் செயல் தொந்தரவு செய்யப்படுகிறது, மேலும் இதயத்தால் மூளை, நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை வழங்க முடியவில்லை. சில நொடிகளில், அந்த நபர் துடிப்பு இல்லாமல் மயக்கமடைந்தார். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அத்தகைய நிலை மோசமடைந்து மரணத்திற்கு வழிவகுக்கிறது.

    இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், இருப்பினும் இது பெரும்பாலும் வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களிடமோ அல்லது இதய நோய் உள்ளவர்களிடமோ அடிக்கடி நிகழ்கிறது. இதயத் தடுப்புக்கு மிகவும் பொதுவான காரணம் வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் ஆகும், இது மின் தூண்டுதல்கள் உங்கள் இதயத்தைத் துடிக்கச் சொல்லும்போது நிகழ்கிறது.

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் மேலும் SCA அறிகுறிகள்:

    திடீர் இதயத் தடுப்பு அறிகுறிகள் உடனடி மற்றும் கடுமையானவை, உட்பட:


    எதிர்பாராத சரிவு, துடிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை, சுவாசம் இல்லை, மயக்கம், திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு வேறு சில அறிகுறிகளும் அறிகுறிகளும் தோன்றக்கூடும். இவை அடங்கும்:

    நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் காரணமாக பலவீனம்,

    படபடப்பு என்பது வேகமாக துடிக்கும், படபடக்கும் அல்லது இதயம் துடிக்கும் அறிகுறிகளாகும். இருப்பினும், திடீர் மாரடைப்பு அடிக்கடி எச்சரிக்கை இல்லாமல் ஏற்படுகிறது.

    SCAக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா?

    மருத்துவ ரீதியாக, கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே பரந்த வேறுபாடு இருந்தாலும் , இந்த இரண்டு நிபந்தனைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படையில், மாரடைப்பு என்பது மாரடைப்பின் தொடக்கமாக மாறக்கூடும், ஏனெனில் SCA மாரடைப்பிற்குப் பிறகு அல்லது ஒன்றிலிருந்து மீண்டு வரும்போது ஏற்படலாம். மாரடைப்பு என்பது மாரடைப்புக்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம் என்றும் நாம் கூறலாம்.

    மாரடைப்பு தவிர, தடித்த இதய தசை, அரித்மியா, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் மற்றும் நீண்ட க்யூடி சிண்ட்ரோம் ஆகியவை திடீர் கார்டியாக் அரெஸ்ட்க்கான காரணங்களாக இருக்கலாம்.

    மாரடைப்பு அல்லது மாரடைப்பின் போது நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

    கார்டியாக் அரெஸ்ட் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும் , அவசர சிகிச்சை நடவடிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம்:


    • அருகிலுள்ள மருத்துவ அவசரநிலையை அழைக்கவும்.

    • CPR ஐ உடனடியாக தொடங்கவும்.

    • நபருக்கு அருகில் படுக்க இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • நபரின் மார்பின் நடுவில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • குறைந்தது 100 முறை கீழ்நோக்கிய இயக்கத்தில் கடினமாகவும் வேகமாகவும் தள்ளுங்கள்.

    • பின்னர், மற்றொரு 100 சுருக்கங்களுக்கு கடினமாகவும் வேகமாகவும் அழுத்தவும்.

    • நீங்கள் தரையில் இருந்தால், அந்த நபரின் தலையை பின்னால் சாய்க்க அவரது தோளில் உங்கள் கைகளை வைக்கவும்.

    • தொழில்முறை அவசரநிலை வரும் வரை CPR செயல்முறையைத் தொடரவும்.

    வாழ்க்கை முறை மாற்றம், உணவு மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் மூலம், நோயாளிகள் நீண்ட காலமாக ஆரோக்கியமாக வாழலாம்.

    • பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள்.
    • ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம்.

    ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

    அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை.

    தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர்.

    ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.

    "முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது" என்கின்றனர் மருத்துவர்கள்.

    மேலும், "பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு 'நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை."

    ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும்.

     

    ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.

    ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.

    உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. 'எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்' என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

    உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். 'மெடிட்டரேனியன் டயட்' எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை.

    பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

    குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம்.

    "உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும்.

    அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது.

    இதுபோன்ற வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் இரத்த அழுத்ததினால் வரும் உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

    • நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

    கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும்.

    கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

    கோடைகாலங்களில் ரெயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

    அறிகுறிகள்:

    அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

    குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

    கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.

    அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

    மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

    உணவுமுறைகள்:

    * இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

    * கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    * 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

    மருந்துகள்:

    ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

    • ஸ்க்ரீனிங் சோதனைகள் கருவின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுகிறது.
    • கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது.

    30 வயதுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் 1000 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்பு உள்ளது. 35 வயதுக்கு மேல் கர்ப்பமாக இருந்தால் 400 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்புண்டு. 42 வயதில் கர்ப்பமாக இருந்தால் 60 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புண்டு. 49 வயதில் கர்ப்பமாக இருந்தால் 12 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புண்டு.

    டவுன் நோய்க்குறிக்கான ஸ்க்ரீனிங் சோதனைகள் கருவின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுகிறது. இதற்கு செலவு குறைவு கண்டறிவதும் எளிதாக இருக்கும். டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை கண்டறிய சோதனைகளை நடத்தலாமா என்பதை பெற்றோருக்கு தீர்மானிக்க இவை உதவுகின்றன.

    நுச்சல் ஒளி ஊடுருவல் சோதனை (என்.டி)

    இந்த பரிசோதனை பெண் கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. ஒரு அல்ட்ராசவுண்ட் வளரும் குழந்தையின் கழுத்தின் பின்னால் உள்ள திசுக்களின் மடிப்புகளில் தெளிவான இடத்தை அளவிடுகிறது.

    டவுன் சிண்ட்ரோம் குழந்தைக்கு இந்த இடத்தில் திரவம் அதிகமாக குவிந்திருக்கும். வழக்கத்தை காட்டிலும் இது பெரியதாக இருக்கும். இந்த பரிசோதனை தாய் வழி ரத்த பரிசோதனையை பின்பற்றி செய்யப்படுகிறது. அனுபவமிக்க நிபுணர்கள் இதை எளிதாக கண்டறிந்துவிட முடியும்.

     ட்ரிபிள் ஸ்க்ரீனிங் / நான்கு மடங்கு ஸ்க்ரினிங்

    பல மார்க்கர் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனை கர்ப்பத்தின் 15 முதல் 18 வாரங்களில் அதாவது 3 மாத கர்ப்பத்தின் முடிவில் இருந்து 5 மாத காலத்துக்குள் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் தாயின் ரத்தத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சாதாரணத்தன்மை கணக்கிடப்படுகிறது. 3 பரிசோதனைகளுக்காக மூன்று ஸ்க்ரீனிங் அல்லது நான்கு ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

    ஒருங்கிணைந்த பரிசோதனை

    இந்த பரிசோதனை முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் செய்யப்படுகிறது. இது நுச்சல் ஸ்கேன் போல் இல்லாமல் முதல் மூன்று மாதம் மற்றும் இரண்டாவது மூன்று மாத காலம் போன்றவற்றின் ரத்த சோதனை பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளை ஒருங்கிணைக்கிறது. இது பெற்றோருக்கு துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

    மரபணு அல்ட்ராசவுண்ட் சோதனை

    இந்த சோதனை 18 முதல் 20 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. டவுன் சிண்ட்ரோம் நோய்க்குறியுடன் தொடர்பு கொண்டுள்ள எந்தவொரு உடல் அறிகுறிகள் மற்றும் ரத்த பரிசோதனைகளுடன் விரிவான அல்ட்ராசவுண்ட் கருவை பரிசோதிக்கிறது.

    செல் இல்லாத டி.என்.ஏ

    இது ரத்த பரிசோதனையாகும். தாயின் ரத்தத்தில் காணப்படும் கரு டி.என்.ஏ வை பகுப்பாய்வு செய்கிறது. இது முதல் மூன்று மாதங்களில் செய்யப்படுகிறது. இந்த சோதனை ட்ரைசோமி 21 ஐ துல்லியமாக கண்டறீகிறது. டவுன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் குழந்தையை சுமக்கும் ஆபத்து கொண்ட பெண்களுக்கு இந்த சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

    • குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பார்கள்.
    • குரோமோசோம் எண்ணிக்கையில் கூடுதல் நகலுடன் பிறப்பதால் உண்டாவதாகும்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எதிர்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். ஒரு பெண் கர்ப்பமானதை உறுதி செய்யும் நாள் முதல் அவர் பிரசவ காலம் வரை அவர் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு உழைப்பு தர வேண்டும். போதுமான ஓய்வு வேண்டும். அவரது குடும்பத்தில் யாருக்கேனும் உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் இது குறித்து முன்னரே மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    டவுன் சிண்ட்ரோம் என்பது குழந்தை 21 குரோமோசோம் எண்ணிக்கையில் கூடுதல் நகலுடன் பிறப்பதால் உண்டாவதாகும். இது ட்ரைசோமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குறைபாடு இருந்தால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் தாமதங்கள் மற்றும் குறைபாட்டை உண்டாக்குகிறது.

    குழந்தையின் செல்கள் உருவாகும் போது ஒவ்வொரு கலமும் மொத்தம் 46 குரோமோசோம்கள் என 23 ஜோடிகளை பெற வேண்டும். இந்த குரோமோசோம்கள் பாதி தாயிடம் இருந்தும், பாதி தந்தையிடம் இருந்தும் பெறுகிறது. இது வழக்கமாக நடப்பது.

     அறிகுறிகள்

    கர்ப்ப காலத்தில் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை சுமக்கும் போது ஸ்க்ரினிங் பரிசோதனையின் மூலம் கண்டறிந்துவிடலாம்.

    * குழந்தையின் தலை சிறியதாக இருக்கும்

    * தட்டையான முகத்தை கொண்டிருப்பர்கள்

    * காதுகள் சிறியதாக வித்தியாசமாக இருக்கும்

    * கழுத்து வீக்கம் கொண்டிருப்பார்கள்.

    * நாக்கு மேல் நோக்கி, கண்கள் சாய்வான நிலையை கொண்டிருப்பார்கள்.

    * தசை மோசமாக இருக்கும்.

    * டவுன் சிண்ட்ரோம் நோய் தாக்கம் கொண்ட குழந்தை சாதாரண குழந்தை போல் பிறக்கும். ஆனால் அவர்கள் வளர்வது மிக மெதுவாக நடைபெறும்.

    இந்த நோய்க்குறி கொண்டிருக்கும் குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பார்கள், கற்றல் குறைபாட்டை கொண்டிருப்பார்கள், மனக்கிளர்ச்சியோடு இருப்பார்கள், குறுகிய கவனம் இருக்கும்.

    பிறவியிலேயே இதய குறைபாடுகள், காது கேட்பதில் சிக்கல், மோசமான பார்வை அதாவது கண்கள் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    இடுப்பு பிரச்சனைகள், லுகேமியா நாள் பட்ட மலச்சிக்கல், தூங்கும் போது மூச்சுத்திணறல், கவனம் கொள்வது, குறைந்த தைராய்டு சுரப்பு ஹைப்போதைராய்டிசம், உடல் பருமன், தாமதமாக பல் வளர்ச்சி பெறுதல், உணவை மென்று விழுங்குவதலில் சிக்கல் போன்றவற்றை உண்டாக்குகிறது.

    வயதான காலத்தில் வரக்கூடிய அல்சைமர் என்னும் மறதி நோய் டவுன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் குழந்தைகள் அவர்களது எதிர்காலத்தில் அனுபவிக்க வாய்ப்புண்டு.

    • கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு.
    • கரு முட்டை கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

    கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு. அதேநேரம் ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றதும் தங்களது கர்ப்பம் சரியானதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் கருவானது கருப்பைக்குள் வராமல் ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருந்தால் அது எப்போதும் கருப்பைக்குள் வராது. மேலும் அது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

    எக்டோபிக் கர்ப்பம் என்பது ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலில் இருந்து முற்றிலும் வேறானது. எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டையானது கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

    ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணைந்து தானாகவே கருப்பையின் சுவரில் இணைந்து விடும். எக்டோபிக் கர்ப்பத்தில் கருமுட்டை தவறான இடத்தில் வளரும். வெளிப்புற சுவரில் அமைந்துவிடும், ஃபெலோப்பியன் குழாய்களில் அமைந்துவிடும். மேலும் இது கருவறையின் வேறு பகுதிகளிலும் கூட அமைந்துவிடும். கர்ப்பப்பைக்குள் இல்லாமல் கருப்பை வாய் பகுதியில் அடிவயிற்றுக்குழிக்குள் என்று கருவானது வளரலாம்.

    ஏன் ஆபத்தானது?

    எக்டோபிக் கர்ப்பமானது தீவிர நிலை. இந்த நிலையில் இருக்கு பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தேவை. ஏனெனில் கருமுட்டையால் உயிர் பெற்று இருந்தாலும் கருப்பை தவிர்த்து எங்கு இருந்தாலும் அவற்றால் வளர முடியாது. மேலும் இது அப்பெண்ணின் உறுப்புகளை பாதிக்க செய்யும். இதனால் உட்புறத்தில் ரத்தக்கசிவு உண்டாகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். எக்டோபிக் கர்ப்பம் வந்தால் அந்த கருவை அகற்றுவது தான் சிறந்த வழி. 100 பெண்களில் 2 பேருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

     அறிகுறிகள்

    கருவுற்ற உடன் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், அசெளகரியங்கள் போன்றவையே குழப்பமாக இருக்கும் என்றாலும் இந்த எக்டோபிக் கர்ப்பம் அறிகுறிகள் தனியாக தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறி மாறுபடும். சிலருக்கு கருவுற்ற அறிகுறி போன்று இவையும் இருக்கும். எனினும் கருவுற்றதை உறுதி செய்த உடன் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    * யோனி ரத்தப்போக்கு (புள்ளிகளாக இல்லாமல் துளிகளாக வெளியேறுவது)

    * குமட்டல் மற்றும் வலியுடன் வாந்தி

    * வயிற்று வலி

    * தீவிரமான வயிற்றுப்பிடிப்புகள்

    * தலைச்சுற்றல் அல்லது பலவீனம்

    * தோள்பட்டை, கழுத்து அல்லது மலக்குடலில் வலி

    * ஃபெலோப்பியன் குழாய் சிதைந்தால் வலி மற்றும் இரத்தப்போக்கு கடுமையானதாக இருக்கும்.

    * அதிகப்படியான களைப்பு

    மேற்கண்ட அறிகுறிகள் கருவுற்ற அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்றாலும் அறிகுறிகளில் உண்டாகும் வித்தியாசத்தை நீங்கள் கண்டறிய வேண்டும்.

    கருமுட்டைகள் சரியான பாதையில் செல்ல கருப்பை தொடர்பான அனைத்து செயல்முறைகளும் அதன் பணிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை கருப்பைக்குள் வர முயற்சிக்கும் பாதையில் ஃபெலோப்பியன் குழாய்கள் சேதம் அடைந்தாலும் எக்டோபிக் கர்ப்பம் உண்டாகலாம். அப்போது கருமுட்டையானது வேறு ஏதேனும் இடத்தில் அமர்ந்துவிடலாம். இது இடம் மாறிய கர்ப்பம் என்று சொல்லப்படுகிறது.

    35 வயதுக்கு மேல் குறிப்பாக 40 வயதுக்கு மேல் கருவுறுபவர்கள், அடிக்கடி அபார்ஷன் செய்து கொண்டவர்கள், பெல்விக் டிசீஸ் கொண்டவர்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கும் எக்டோபிக் கர்ப்பம் சாத்தியமுண்டு.

    • தைராய்டு அளவை சரியாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல்.
    • அயோடின் குறைபாடு இல்லாமல் இருப்பது அவசியம்.

    1. ஆறு மாதங்களுக்கு முன்பே கர்ப்பத்தை திட்டமிடத் தொடங்குங்கள்

    முடிந்தவரை, நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் முன்பு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே கர்ப்பத்தை திட்டமிடத் தொடங்குங்கள். உங்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை பரிசோதிக்கவும், தைராய்டு அளவுகள் கருவுறுதலுக்கு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையை கேட்பது அவசியம்.

    2. தைராய்டு அளவை சரியாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல்

    கருவுறுதல் மற்றும் கர்ப்பத்திற்கு உங்கள் தைராய்டு அளவை சரியாக வைக்க வேண்டும். உங்கள் தைராய்டு- ஹார்மோன் (TSH) அளவு 2.5 mIU/L -க்கும் குறைவாக இருக்கும்.

    உங்கள் TSH அளவுகள் அதிகமாக இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் தைராய்டு ஹார்மோன் அளவை உயர்த்த மற்றும் உங்கள் TSH அளவு 2.5 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் வரை உங்கள் அளவை மீண்டும் சரிபார்பார்கள்.

    3. அயோடின் குறைபாடு இல்லாமல் இருப்பது அவசியம்

    அயோடின் குறைபாடு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அயோடின் தைராய்டு ஹார்மோனின் முக்கியமான அமைப்பு ஆகும், மேலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் அயோடின் தேவை அதிகமாக இருக்க வேண்டும். கருத்தரிப்பதற்கு முன் அயோடின் குறைபாட்டை பரிசோதிக்க வேண்டும். உங்களிடம் அயோடின் குறைவாக இருந்தால், மருத்துவர் சரியான அளவிலான அயோடின் சப்ளிமெண்ட்டை பரிந்துரைக்கலாம்.

    அயோடின் அளவு குறையவில்லை என்றால், குறைந்தபட்சம் 150 μg அயோடைனை உள்ளடக்கிய மல்டி வைட்டமின் அல்லது மகப்பேறுக்கு முன்னால் உள்ள வைட்டமினை எடுத்துக்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கின்றன.

    4. ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள்

    கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் ஃபோலிக் அமிலம் முக்கியமானது ஏனெனில், கர்ப்ப காலத்தில் குழந்தை ஆரம்பத்தில் வளரும் போது, ஃபோலிக் அமிலம் நரம்புக் குழாயை உருவாக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற சில பெரிய பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவும்.

    5. மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்

    உங்கள் கர்ப்பத்தை திட்டமிடுவதை பற்றி குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். ஆண்களுக்கும், பெண்களுக்கும், கர்ப்பத்திற்காக முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் உங்கள் மருந்து சிகிச்சையை மாற்ற வேண்டியிருக்கலாம். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் முன், உங்கள் உடல்நிலை சரியாக பரிசோதனை செய்து, நீங்கள் ஹார்மோனின் சரியான அளவை பெறுவதும் முக்கியம். இது கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தைராய்டு சப்ளிமெண்ட் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டாம்.

    • தைராய்டு சுரப்பி, குரல்வளை கீழே கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது.
    • கர்ப்பமாவதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

    பெண்கள் பல்வேறு காரணங்கலால் கர்ப்பமாவதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், சில சமயங்களில் அதற்கான சரியான காரணத்தை குறிப்பிடுவது கடினம். கருவுறுதல் பிரச்சனைகள் உள்ள பல பெண்கள் தங்களுக்கு தைராய்டு இருப்பதை கண்டறியாமல் இருப்பார்கள்.

     தைராய்டு என்றால் என்ன?

    தைராய்டு சுரப்பி, என்பது குரல்வளை கீழே கழுத்தின் முன்புறத்தில் அமைந்துள்ளது. இது பட்டாம்பூச்சி வடிவமானது மற்றும் மூச்சுக்குழாய் இருபுறமும் அமைந்துள்ள இரண்டு மடல்களைக் கொண்டுள்ளது. தைராய்டு சுரப்பி பொதுவாக வெளியில் தெரிவது இல்லை, கழுத்தில் விரல் கொண்டு அழுத்துவதால் அதை உணர முடியாது. தைராய்டு சுரப்பி உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதயம், தசை, செரிமான செயல்பாடு, மூளை வளர்ச்சி மற்றும் எலும்பு பராமரிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

    தைராய்டின் சரியான செயல்பாடு என்னவென்றால் நமது உணவில் இருந்து அயோடின் சத்தை பெறுவது. இந்த ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் செல்கள் ரத்தத்தில் இருந்து அயோடினை பிரித்தெடுத்து அதை தைராய்டு ஹார்மோன்களில் சேர்ப்பதில் முக்கிய வேலை ஆகும். தைராய்டு ஹார்மோன் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அது உங்கள் முழு உடலையும் பாதிக்கும்.

    உங்கள் உடல் தைராய்டு ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்தால், ஹைப்பர் தைராய்டிசம் என்ற நிலையை உருவாக்கலாம். உங்கள் உடல் தைராய்டு ஹார்மோனை குறைவாக உற்பத்தி செய்தால், அது ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளும் தீவிரமானவை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    (ஹைப்பர் தைராய்டிசம்) அறிகுறிகள்:

    எரிச்சல் மற்றும் பதட்டம் அனுபவிக்கிறது.

    தூங்குவதில் சிக்கல் ஏற்படும்

    உடல் எடை குறையும்.

    தசை பலவீனம் மற்றும் நடுக்கம்.

    ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை நிறுத்துதல்.

    உடலின் வெப்பத்தின் உணர்திறன் அதிகரிப்பது.

    பார்வை பிரச்சினைகள் அல்லது கண் எரிச்சல்.

    (ஹைப்போ தைராய்டிசம்) அறிகுறிகள்:

    உடல் சோர்வு

    எடை அதிகரித்தல்

    மறதி ஏற்படுதல்

    அடிக்கடி மற்றும் அதிகமான ரத்த போக்கு கொண்ட மாதவிடாய் ஏற்படுவது

    உடலில் வறண்ட மற்றும் அதிகமான முடி வளர்ச்சி

    கரகரப்பான குரல் கொண்டவர்

     கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

    ஆண்களில், ஹைப்பர் தைராய்டிசம் விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைப்பை ஏற்படுத்தும், இதன் விளைவாக கருவுறுதல் குறைகிறது. தைராய்டு நிலைக்கு சிகிச்சைய அளிக்கப்பட்டவுடன் விந்தணுக்களின் எண்ணிக்கை பொதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும். தைராய்டு எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெறும் ஆண்களுக்கு, குழந்தை பெறுவதில் எந்த ஆபத்தும் இல்லை. பெண்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கருவுறுதலையும், நீங்கள் கர்ப்பமாகிவிட்டால் குழந்தையையும் பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் உங்கள் தைராய்டு முக்கியமானது, ஏனெனில் தைராய்டு ஹார்மோன்கள் ட்ரையோடோதைரோனைன் (T3) மற்றும் தைராக்ஸின் (T4) உற்பத்தியை சரிசெய்கிறது, இவை இரண்டும் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்ப்ப காலத்தில் உங்களுக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் கர்ப்பம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

    உங்களுக்கு தைராய்டு நிலையின் அறிகுறிகள் இருந்தாலும், ஆனால் நீங்கள் கண்டறியப்படவில்லை என்றால், மருத்துவர் உங்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியம், இதன் மூலம் உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சரியாக சிகிச்சை பெறலாம்.

    நீங்கள் ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், கருத்தரித்தல் கடினமாகிறது, ஏனெனில் இந்த இரண்டு நிலைகளிலும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது, இது பெண்களுக்கு கருவுறுதல் ஏற்படுவதை நேரடியாக பாதிக்கிறது. மேலும், தைராய்டு கொண்ட கர்ப்பம் உங்கள் குழந்தைக்கு சில உடல்நல சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் ஆபத்துக்கள்:

    உடல் எடை குறைந்த குழந்தை பிறப்பு

    இதய செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய வேகமான இதயத் துடிப்பு

    குழந்தையின் மண்டை ஓட்டில் உள்ள மென்மையான இடத்தை முன்கூட்டியே மூடுவது

    மோசமான எடை அதிகரிப்பு

    கருச்சிதைவு

    ப்ரீ எக்லாம்சியா (Preeclampsia)

    குறைந்த IQ மெதுவான உடல் வளர்ச்சி

    முறையான சிகிச்சைக்குப் பிறகு, நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க திட்டமிட்டால், முதலில் உங்கள் தைராய்டு செயல்பாட்டை சரிபார்க்க ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.

    • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.
    • தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்க முடியும்.

    உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    ஹெச்பிவி என்றால் என்ன?

    ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.

    இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?

    ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?

    ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.

    தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.

    யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?

    ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

    இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.

    ×