என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை தமிழர் முகாம்"
- விருதுநகர் அருகே இலங்கை தமிழர் முகாம்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
- சாவியினையும், வீட்டு உபயோக பொருட்களையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
விருதுநகர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் கட்டப்பட்டுள்ள ரூ.79.70 கோடி மதிப்பில் 1591 புதிய வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி செவலூரில் ரூ.3.11 கோடி மதிப்பில் 62 வீடுகள், அனுப்பன்குளம் மையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 வீடுகள், குல்லூர்சந்தை மையத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் என மொத்தம் ரூ.7.2 கோடி மதிப்பில் 140 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி சிவகாசி செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் புதிய வீடுகளை பார்வையிட்டு கலெக்டர் குத்துவிளக்கேற்றி னார். புதிய வீடுகளுக்கான சாவியினையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்க ளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஸ்வநாதன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
- 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிகளில் ரூ.11 கோடியே 54 லட்சத்து 44 ஆயிரம் செலவில் புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் திறப்பு விழாவும், ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவில் கலந்து கொண்டு முடிவுற்ற குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் நாசர் விழாவில் பங்கேற்று, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு திட்டப் பணிகளை வழங்கினார்.

பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாம் மற்றும் ராஜாக்கமங்கலம் பழவிளை முகாமில் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் 172 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1.23 கோடி கூடுதலாக நிதி ஓதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவு பெற்றுள்ளன.
ரூ.7 கோடியே 55 லட்சத்து 37ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள 90 வீடு களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாபு, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், அகஸ்தீசு வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, ஆர்.எஸ். பார்த்த சாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூ ராட்சி தலைவர் செல்வகனி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தி.மு.க. நிர்வாகி கள் தாமரை பிரதாப் தமிழன் ஜானி, பொன்ஜா ன்சன், வினோத், இலங்கை தமிழர் முகாம் நிர்வாகி ஞானமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.