என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஞ்சோலை எஸ்டேட்"

    • மாஞ்சோலை எஸ்டேட் நோக்கி நகர்கிறது
    • யானை கூட்டத்துடன் சேர்ந்து சுற்றித்திரிகிறது

    நாகர்கோவில் :

    தேனி மாவட்டம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பிடிபட்ட யானையை நெல்லை, குமரி மாவட்ட எல்லை பகுதியான முத்துகுளிவயல் பகுதியில் விட்டனர். விடப்பட்ட அரிசிகொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு யானையை தினமும் கண்காணித்து வந்தனர். யானையை விடப்பட்ட நாள் முதல் ஒரு மாத காலத்திற்கு அதே இடத்திலேயே வசித்து வந்தது.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து உலா வருவது போன்ற காட்சிகளும் வெளியானது. இருப்பினும் வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    அரிசி கொம்பன் யானை விடப்பட்ட நாள் முதல் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்காமல் காணப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக யானை தினமும் ஓய்வின்றி 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி திரிகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை சுற்றி திரிவது தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை விடப்பட்ட பகுதியில் இருந்து நாலுமூக்கு பகுதிக்கு வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது அரிசி கொம்பன் யானை அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை எஸ்டேட்டை நோக்கி நகர்ந்து வருவதா கவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலா ளர்கள் தங்கி உள்ளனர். அரிசி கொம்பன் யானை தற்போது அங்கு நகர்ந்து வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட வனஅதிகாரி இளையராஜா கூறுகையில், அரிசி கொம்பன் யானை விடப்பட்ட இடத்தில் தான் கடந்த சில மாதங்களாக சுற்றி திரிந்தது. முதலில் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்த யானை தற்போது 14 கிலோமீட்டர் தூரம் வரை தினமும் நடக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அது உலா வருகிறது. யானையை தினமும் வனத்துறையினர் கண் காணித்து வருகிறார்கள் என்றார்.

    • மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன்.
    • நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.

    நெல்லை:

    நெல்லைக்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று இரவு நெல்லை வந்தார்.

    தொடர்ந்து இன்று காலை மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு அவர்களுக்கு பல்வேறு உறுதியினை அளித்தார்.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தற்போது மாஞ்சோலை மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வந்திருக்கிறோம். தமிழக அரசு மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மக்களுக்கான 11 வகையான சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே 4 குடும்பத்தினருக்கு வீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள சிலருக்கு நெல்லை மாநகர பகுதியில் ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு கொடுக்கிறோம்.

    மக்கள் கேட்கும் இடத்தில் முதலமைச்சர் அனுமதி பெற்று கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டும் இல்லாமல் இங்கு உள்ள மக்கள் அனைவரும் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் சமத்துவபுரம் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

    மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவபுரம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க கூறியிருக்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தனியார் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து கூடுதல் நிதி பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்திற்கு முதலமைச்சர் வரும்போது அதற்கென ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறேன். மாஞ்சோலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து உதவியும் செய்யப்படும். மேலும் ஒரு சில மக்கள் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்துள்ளனர். தகுதி உள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டு அனைத்து தேவையான எல்லா வசதிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி சுகன்யா, உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை தலைவர் இசக்கி பாண்டி, யூனியன் சேர்மன் பரணி சேகர், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் பலர் கலந்த கொண்டனர்.

    • மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும்,.
    • உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தக் கோரிய கிருஷ்ணசாமியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    ×