என் மலர்
நீங்கள் தேடியது "கம்பீர்"
- பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான்.
- இவர் நடிப்பில் சமீபத்தில் 'ஜவான்' திரைப்படம் வெளியானது.
பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் அறிமுகமான இவர் படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு பாலிவுட்டில் கால்பதித்தார். 1992-ஆம் ஆண்டு 'தீவானா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருந்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானை முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், "ஷாருக்கான் பாலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல, அனைவர் மனதிலும் அவர் ராஜாதான். நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன். உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
- ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்
டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

- பெரும்பாலான வீரர்கள், குறிப்பாக ஒயிட் பால் வடிவத்தில் ஐபிஎல் அணிகளில் ஒரு பகுதியாக இருந்ததை அறிந்திருப்பார்.
- நீங்கள் முதிர்ச்சியடைந்தவர் என்று நினைத்தாலும், சில புதிய யோசனைகளிலிருந்து நீங்கள் பயனடையலாம்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர் குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-
கம்பீர் சமகாலத்தவர் (விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் விளையாடியவர்). அவர் ஐபிஎல்-லில் ஒரு சிறந்த சீசனைக் கொண்டிருந்தார் (2024 சீசனில் கேகேஆர் இவரது தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது). இளமையாக இருக்கும் அவருக்கு சரியான வயது என்று நான் நினைக்கிறேன். அவர் புதிய ஐடியாக்களுடன் வருவார்.
அவர் பெரும்பாலான வீரர்கள் குறிப்பாக ஒயிட் பால் வடிவத்தில் ஐபிஎல் அணிகளில் ஒரு பகுதியாக இருந்ததை அறிந்திருப்பார். எனவே இது புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
கம்பீரை எங்களுக்கு தெரியும். அவர் ஒரு முட்டாள்தனம் கொண்டவர் அல்ல. அவர் ஐடியாக்களை கொண்டிருப்பார். அவருக்கு நல்ல விஷயம் என்னவென்றால், அவர் ஒரு முதிர்ந்த அணியைப் பெற்றுள்ளார். அவர் ஒரு செட்டில் செய்யப்பட்ட அணி, ஒரு முதிர்ந்த அணியைப் பெற்றுள்ளார். நீங்கள் முதிர்ச்சியடைந்தவர் என்று நினைத்தாலும், சில புதிய யோசனைகளிலிருந்து நீங்கள் பயனடையலாம். எனவே இது சுவாரஸ்யமான நேரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
- அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கே.எல். ராகுல் ஓபனிங்.
- பும்ரா கேப்டனாக செயல்படுவார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுத் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கவுதம் கம்பீர் கூறியதாவது:-
தற்போது வரை ரோகித் சர்மா இடம் பெறுவாரா? இல்லையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் முதல் டெஸ்டில் இடம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ரோகித் சர்மா இல்லை என்றால் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் முடிவு எடுப்போம்.
கே.எல். ராகுல் உள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளார். சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்து விளையாட முயற்சிப்போம். பும்ரா தற்போது துணை கேப்டனாக உள்ளார். ரோகித் சர்மா இல்லை என்றால், பும்ரா கேப்டனாக செயல்படுவார்.
இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.
- பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
- ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த சில மாதங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை காலமாக இருந்தது. நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் அடைந்த தோல்வி என தோல்விகள் இந்திய அணியை சுழற்றி சுழற்றி அடித்தது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பெரிய புள்ளிகள் இந்த தொடர் தோல்விகளால் புழுங்கிக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மறுஆய்வுக் கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் , வீரர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தொடரில் இருந்து விலக இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இருதரப்பு தொடரில் [bilateral series] இனிமேல் வீரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு முடிவெடுக்க முடியாது
இருதரப்பு தொடர்களில் இருந்து விலக விரும்பினால், வீரர்கள் முறையான மருத்துவ காரணங்களை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

- சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை..
- சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 56.66 என்ற அட்டகாசமான சராசரி வைத்துள்ளார். 2023 டிசம்பரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அது இந்திய அணிக்கு தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதை போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் திறமையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.