search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளிவைப்பு"

    • சவுக்கு சங்கர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்
    • நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்

    சவுக்கு சங்கர் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

    சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்

    எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

    மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

    சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.
    • விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைப்பு.

    கோவை:

    பிரபல அரசியல் விமர்சகரான சவுக்குசங்கர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.

    மேலும் மகளிர் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். அதன்பேரில் சவுக்குசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்தனர்.

    இது தொடர்பாக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இதேபோல் இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் அவரது வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தனது கட்சிக்காரரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது இந்த வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே போலீசார் சவுக்குசங்கரிடம் அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.

    • அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
    • முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும். இதையொட்டி இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர் சார்பில் முடி திருத்தும் குத்தகை ஏலத்தை நேற்று நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்திருந்தார்கள்.

    உள்ளூரில் உள்ள முடி திருத்தும் தொழிலாளர்கள் பாரம்பரியமாக நாங்கள் செய்து வரும் முடி திருத்தும் வேலையை நாங்கள் தான் செய்வோம் என்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெண்டர் ஏலத்தை நடத்தக் கூடாது என்று முடி திருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, பேனர் வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த சமய அற நிலையத்துறை அதிகாரிகள் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்தார்கள். ஏலம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முடி திருத்தும் தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் இன்து முன்னணி அமைப்பினர்கள் ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    பாரம்பரியமாக முடி திருத்தும் தொழிலாளிகளுக்கே விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி முடிதிருத்தும் குத்தகை ஏலம் தள்ளி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

    முன்னெச்சரிக்கையாக கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்த பின் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×