search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணாசி தொகுதி"

    • பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது.
    • மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.

    கோவை:

    இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? இந்தியாவை அடுத்து ஆளப்போகும் கட்சி எது என்பதை அறியும் 18-வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

    கடந்த 19-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்கள் முடிந்து விட்டன. பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    இதனையொட்டி இறுதி கட்ட தேர்தல் நடக்க உள்ள இடங்களில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி அங்கு இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். மகளிர் அணி சார்பில் பிரமாண்ட மாநாடும் நடத்தப்பட்டது.

    பிரதமருக்கு ஆதரவாக மத்திய, மாநில மந்திரிகள், கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்தும் பா.ஜ.க நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாரணாசி மட்டுமின்றி வடமாநிலங்கள் முழுவதும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மகளிர் அணியினர், பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் முகாமிட்டு, ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டினர். வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கு ஆதரவான அலைவீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மாலைமலர் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.


    அப்போது நாம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: வாரணாசி தொகுதி கள நிலவரம் எப்படி உள்ளது?

    பதில்: வாரணாசி தொகுதியின் களநிலவரம் நன்றாகவே உள்ளது. இங்கு பாரதிய ஜனதாவுக்கான ஆதரவு அலை அதிகமாக உள்ளது. பிரதமர் மோடியின் மீது அங்குள்ள மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லோருமே பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு பிரதமர் இந்த முறை சாதனை வெற்றியை பதிவு செய்வார்.

    கேள்வி: வாரணாசி தொகுதியில் உள்ள தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

    பதில்: வாரணாசியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக பண்டிட்கள், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் இங்கு உள்ளனர். 150 வருடத்திற்கும் மேலாக பாரம்பரியமாகவே இங்கும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி மீது இங்கு வாழ்ந்து வரக்கூடிய தமிழ் மக்கள் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கான ஆதரவே காணப்படுகிறது. அனைவரும் பா.ஜ.க.வுக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லி வருகிறார்கள்.

    கேள்வி: நீங்கள் வாரணாசியில் எத்தனை நாள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்?

    பதில்: வாரணாசியில் நான் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். வாரணாசி தெற்கு, வாரணாசி வடக்கு உள்பட வாரணாசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கான ஆதரவு அலையே காணப்பட்டது.

    இதுதவிர மகளிர் அணி சார்பில் தனியாக மாபெரும் மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைந்தது.

    கேள்வி: வேறு எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் நீங்கள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்? அங்கு பா.ஜ.கவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். இன்று இமாச்சல் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். நான் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்களிடம் பா.ஜ.கவுக்கு மகத்தான ஆதரவு உள்ளது. மக்கள் அனைவரும் பா.ஜ.க ஆட்சியை விரும்புகிறார்கள்.

    கேள்வி: தமிழ்நாட்டில் இருந்து வேறு தலைவர்கள் யாராவது வாரணாசி பிரசாரத்துக்கு வந்துள்ளனரா?

    தமிழகத்தில் இருந்து பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரதமருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரதமருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    கேள்வி: மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து?

    பதில்: ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் எப்போதும் பிரதமர் ஒரு இடத்திற்கு சென்று தியானம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தமிழகத்திற்கு வருகிறார். பிரதமர் தமிழகத்திற்கு வருவது சந்தோஷம். அதுவும் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வது சிறப்பு வாய்ந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாரணாசி முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு வாக்கு அளிக்குமாறு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
    • வாரணாசியில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் மோடியை வெற்றி பெற செய்ய முடியும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி களம் இறங்கி இருக்கிறார். கடந்த 14-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதன் பிறகு 2 தடவை அங்கு வாகன பேரணி நடத்தி பிரசாரம் செய்தார்.

    மீண்டும் ஒரு தடவை அவர் வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மீண்டும் அஜய்ராய் நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது.

    என்றாலும் வாரணாசியில் பிரதமர் மோடி எளிதாக வெற்றி பெறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவர் எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

    2014-ம் ஆண்டு முதல் முதலாக அவர் வாரணாசியில் களம் இறங்கிய போது 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை தோற்கடித்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர் ஷாலினி யாதவை 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    இந்த தடவை 5 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் பிரதமர் மோடியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வாரணாசி தொகுதி முழுக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஓசையின்றி பா.ஜ.க. தீவிர பிரசாரம் செய்து வருகிறது.


    தற்போது பிரசாரம் ஓய்வதற்கு 3 நாட்களே இருப்பதால் அங்கு பா.ஜ.க. வின் நட்சத்திர பேச்சாளர்கள் செல்ல தொடங்கி உள்ளனர். நேற்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி மோகன் யாதவ் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் சென்றனர்.

    இன்று மாலை மத்திய மந்திரி அமித் ஷா வாரணாசி செல்ல இருக்கிறார். நாளை பா.ஜ.க. தலைவர் நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் வாரணாசியில் களம் இறங்க உள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி தேர்தல் திருவிழாவை பிரதிபலிக்கும் வகையில் கோலாகலமாக மாறி உள்ளது.

    வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கண்டோன்மெண்ட், ரோஹானியா, சேவாபுரி ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளையும் பா.ஜ.க. நிர்வாகிகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அடுத்து வரும் கடைசி 2 நாட்களில் வாரணாசி முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு வாக்கு அளிக்குமாறு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

    வாரணாசி தொகுதியை பிரதமர் மோடி சொர்க்கலோகம் போல் மாற்றி இருக்கும் நிலையில் வளர்ச்சி திட்டப் பணிகளை மக்களுக்கு தெரிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் வாரணாசியில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் மோடியை வெற்றி பெற செய்ய முடியும் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

    • பிரதமர் மோடி இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தகவல்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருடன் காணப்பட்டனர்.

    பிரதமர் மோடியுடன் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, லால்சந்த் குஷ்வாஹா, பைஜ்நாத் படேல் மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகிய நான்கு பேர் முன்மொழிந்தனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2014ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

    பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

    பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது.

    பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன.

    கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை.
    • இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார்.

    இந்த சூழலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை.

    இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவிப்பது இல்லை. அகில இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தெரிவித்தார்.

    • வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
    • பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தின் போது, ​​கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தேசியக்கட்சிகள் தற்போது முதலே அதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து புனித தலத்துக்குச் சென்று 'மிஷன் -2024' என்ற ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசிக்கு வரக்கூடிய அவர், தனது பாராளுமன்றத் தொகுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் திங்கட்கிழமை கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.

    வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்றார்.

    அதேபோல் காசி தமிழ் சங்கமம், உலகின் மிகப் பழமையான கலாச்சார பாரம்பரியத்தின் வாழ்க்கைப் பிணைப்புகளை புதுப்பிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே போன்ற பிற துறைகளுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த காசி தமிழ்ச் சங்கமத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.

    காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்றார்.

    மேலும் பிரதமர் மோடி இந்த சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு சின்னங்களுக்கு இடையேயான விக்சி பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
    • அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

    வாரணாசி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆன்மீக சிறப்பு பெற்றது. பிரதமர் மோடியின் தொகுதியான இங்கு மற்றொரு சிறப்பு அம்சமாக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் உருவாக உள்ளது.

    வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகிற 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

    கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, பிளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், வி.ஐ.பி. ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் அமைய உள்ளது.

    இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் கூறுகையில், வருகிற 2025-ம் ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம் என்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த மைதானம் அமைய உள்ளது.

    அடிக்கல் நாட்டு விழாவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், கபில்தேவ், தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.120 கோடி வரையில் செலவு செய்துள்ளது.

    இந்த மைதானம் சிவனின் தலையில் சூடியிருக்கும் பிறை போலவும், நுழைவு பகுதி உடுக்கை போன்றும், மின் விளக்கு கம்பங்கள் சூலாயுதம் போலவும் அமைக்கப்பட உள்ளன.

    ×