search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்பகை"

    • டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பகை இருந்துள்ளது
    • லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

    டெல்லியில் மொபைல் போனால் துப்பாக்கிச்சூட்டில் இருந்து ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையால் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

    அன்றைய தினம் சாந்தி என்ற பெண் தனது மகன்கள் அர்ஜுன், கமல் மற்றும் உறவினர்களுடன் தங்களுக்கு பகையாய் உள்ள லில்லு என்ற சாத்நாம் வீட்டுக்கு சமாதானம் பேச சென்றுள்ளார். ஆனால் லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

    இந்த சம்பவத்தின்போது சாந்தியின் மகன் அர்ஜூன் தான் எடுத்துவந்த துப்பாக்கியால் சுட்டதில் லில்லுவின் பக்கம் இருந்த ரித்விக் என்பவரை நோக்கி குண்டு பாய்ந்தது. ஆனால் ரித்விக் அவரது டவுசரில் வைத்திருந்த மொபைல் போன் மீது துப்பாக்கிக்குண்டு பட்டுத் தெறித்தது.

    இதனால் போன் சுக்குநூறான நிலையில் குண்டு ரிதிவிக் உடலை துளைக்காததால் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

    • காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள பாம்பன் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வர்யா. இவர் அதே பகுதி யைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு கடு மை யான எதிர்ப்பு கிளம்பி யது. இருந்தபோதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.

    இதனால் இரண்டு குடும் பத்தில் உள்ள இளைஞர்கள் முன்பகையுடன் இருந்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த உறவின ரான ராஜ்கண்ணன் நேற்று மாலையில் வீட்டின் அருகில் வரும்பொழுது மற்றொரு தரப்பினர் வழிமறித்து அசிங்கமாக பேசி அரிவா ளால் கையில் வெட்டி காயப்படுத்தி மோதிக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து, பாம்பன் காவல் நிலையத்தில் நவீன்கு மார் அளித்த புகாரையடுத்து ராஜ்கண்ணன் (26), ராஜபாண்டி (23) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று ராஜ்கண்ணன் அளித்த புகாரையடுத்து அஸ்வீன் குமார் (23), நவின்குமார் (18), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×