என் மலர்
நீங்கள் தேடியது "33 சதவீத இட ஒதுக்கீடு"
- ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு பல இடங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
- கால தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றி இருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.
கால தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழகத்தை பொறுத்த வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு பல இடங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அதிகாரத்தை கொடுக்கும் பட்சத்தில் தவறுகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு 33 சதவீதம்
- மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும்
வேலூர்:
த.மா.கா. மகளிரணி துணை தலைவி வீ.கீதா தேச பக்தன் கூறியிருப்பதாவது:-
ஜவஹர்லால் நேரு, மொராஜ் தேசாய், வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வர முடியாத காலத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜியம் திட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கியும் பாராளுமன்ற ராஜசபையிலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பாராளுமன்ற அரங்கத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் சட்டத்தில் கொண்டு வந்து பெருமை சேர்த்து்ளார்.
மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும். உலக அரங்கில் பாரத நாடு பெருமை பெறும். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடிமீண்டும் பிரதமராக வரவேண்டும். இந்நாளில் தமிழ் மக்களின் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பாகவும் நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
- மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, தொகுதி வரையறை செய்யப்பட்டடு அமல்படுத்தப்படும்.
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது.
என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்ட பிறகே இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2029-க்கும் முன்னதாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை.
இந்த நிலையில் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இரண்டு மசோதாக்களை பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி 30 தொகுதிளை கொண்ட சட்டமன்றமாகும். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் மொத்தம் 114 தொகுதிகளை கொண்டதாகும். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் 24 தொகுதிகளும் அடங்கும். ஜம்மு-காஷ்மீரில் தொகுதி வரையறை முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.