என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்களுக்கு அனுமதி"

    • சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    • பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்.
    • இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    24-ந்தேதி பங்குனி மாத பவுர்ணமி அன்று விடுமுறை நாளாக இருப்பதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்த உள்ளனர். வருகிற 25-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது.
    • பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் அனுமதி.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கார்த்திகை மாத பிரதோஷம், அமா வாசையை முன்னிட்டு இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 1-ந் தேதி வரை மலையேற வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது.

    தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்களிடம் குழப்பம் நிலவியது.

    தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை இல்லை. மேலும் இந்த பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை.

    இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை இல்லை எனவும், மேற்கண்ட 4 நாட்களில் வானிலையை கருத்தில் கொண்டும் தினசரி மழைப்பொழிவை பொறுத்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இன்று காலை பக்தர்கள் மலை யேறிச்சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார் கள். காலை 7 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப் பட்டு பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர்.

    கனமழை எச்சரிக்கை மற்றும் அனுமதி வழங்கு வதில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற காரணங்களால் சதுரகிரிக்கு இன்று மிக மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை தந்திருந்த னர்.

    பிரதோஷ தினமான இன்று மாலை சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பாக அபிஷேக, ஆரா தனைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலு வலர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

    ×