search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்புதுறை"

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
    • ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கினர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சுப்பையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சக்திகாந்த். சமூக ஆர்வலர். இவரது மகன் ஜெய்குரு (வயது 14). அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

    இந்நிலையில் ஜெய்குரு பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள முருகையா ஓட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக பாத்திரங்களும் எடுத்துச் சென்று ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கிக் கொண்டு ஓட்டல் பார்சல் கட்டுமிடத்திற்கு சென்று சாப்பாடு கேட்டுள்ளார் .

    ஓட்டல் ஊழியர் பாத்திரத்தில் சாப்பாடு தரமாட்டோம். பிளாஸ்டிக் பைகளில் தான் தருவோம் என்று கூறினார்.

    அதற்கு சிறுவன் ஜெய்குரு பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கூறியுள்ளார். உடனே ஓட்டல் கேஷியர் சிறுவனிடமிருந்து டோக்கனை திரும்பி வாங்கிக் கொண்டு சாப்பாடு தரமறுத்து சிறுவனை திருப்பி அனுப்பிவிட்டார்.

    இதையடுத்து சிறுவன் ஜெய்குரு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகாவிடம் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

    14 வயதுள்ள ஒரு பள்ளி மாணவன் கொடுத்த புகாரினைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு பெரிய தெருவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி, டீக்கடை, பழக்கடைகளுக்கு சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    அப்போது பார்சல் உணவை பாத்திரத்தில் தர மறுத்த ஓட்டலுக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஒட்டல் கேஷியரிடம் பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டியது தானே. பார்சலுக்கு என்ன அளவு கொடுப்பீர்களோ அந்த அளவுதானே பாத்திரத்தில் கொடுக்கப் போகிறீர்கள்.

    பாத்திரத்தில் சாப்பாடு கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ள சமையல் அறைக்கு சென்று ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சமையல் அறையில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் கேப் அணிந்தும், கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்ள வேண்டும். தயார் செய்து வைத்துள்ள உணவுகளை எப்போதும் இலையைப் போட்டு மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து பழக்கடைகள், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பூஞ்சானம் பிடித்து சாப்பிட தகுதியற்ற 5 கிலோ கேக்குகளை எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர். அதேபோல் 3 கிலோ அழுகிய பழங்களையும் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டு அழித்தனர்.

    இந்த அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ்ம் வழங்கினர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த அதிரடி ஆய்வால் பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • சமீப ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் பாஸ்ட் புட் தயாரித்து விற்பது மற்றும் ஓட்டல், டீக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • பயன்படுத்தி எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கென உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    சமீப ஆண்டுகளாக சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் பாஸ்ட் புட் தயாரித்து விற்பது மற்றும் ஓட்டல், டீக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சில நேரங்களில் உணவின் தரமும் கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே உணவு தரத்தை உறுதிப்படுத்த, உணவு பாதுகாப்பு துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் உணவு பதார்த்தம் தயாரிக்க மீண்டும், மீண்டும் பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என, அறிவுறுத்தி வருகின்றனர்.அவ்வாறு பயன்படுத்தி எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கென உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும் இத்திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பெரும்பாலான கடைக்காரர்கள் பயன்படுத்திய எண்ணெய்யை உணவு பாதுகாப்பு துறையினரிடம் வழங்க தயங்குகின்றனர்.இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர், ஆங்காங்கே ஓட்டல் உரிமையாளர், தள்ளுவண்டிக் கடைக்காரர்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ×