என் மலர்
நீங்கள் தேடியது "வாலிபர் வெட்டிக்கொலை"
- கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது.
- அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளிதாஸ் (வயது 32). இவருக்கும் பிரம்மதேசம் அடுத்த பழமுக்கலை சேர்ந்த பாபுவிற்கும் (38) இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது வந்தது. இந்நிலையில் முரளி தாசை சந்திக்க பாபு தனது நண்ப ரை அழைத்துக் கொண்டு அச்சரம்பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை வந்தார்.
அப்போது முரளிதாஸ் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாபு, முரளிதாசிடம் பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முரளிதாசின் வலது காலில் வெட்டினார். இதனால் பலத்த காயமடைந்த முரளிதாஸ், கீழே விழுந்து கூச்சலிட்டு கதறினார். இதனைப் பார்த்த பாபு, தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினார். அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் முரளிதாசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முரளிதாசிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்ட காலில் இருந்து ரத்தம் நிற்கவில்லை. இந்நிலையில் முரளி தாஸ் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முரளிதாசை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய பாபு மற்றும் அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 18-வது தெருவில் அண்ணாநகர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து இன்று காலை பயங்கர அலறல் சத்தம் கேட்டது.

உடனே அப்பகுதி மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டின் மாடியில் உள்ள கூரை செட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (வயது 25) என்பதும், அவரை சாந்திநகர், அண்ணாநகரை சேர்ந்த சிம்சோன் என்ற புஷ்பராஜ், அவரது நண்பரான சிவா ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
புஷ்பராஜின் சகோதரி ஒருவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விஜயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் விஜயை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றார். அங்கு விஜயின் குடும்பத்தினரிடம் திருமணம் செய்வதற்காக சம்மதம் கேட்டுள்ளார்.
அப்போது விஜயின் குடும்பத்தினர் இருவீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற வேண்டும் கூறி அந்த பெண்ணை மீண்டும் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் மனம் உடைந்த அந்த பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை காப்பாற்றி அறிவுரை கூறினர்.
இந்நிலையில் தனது சகோதரியின் இந்த முடிவுக்கு விஜய் தான் காரணம் என கருதிய அவரது அண்ணன் புஷ்பராஜ் விஜயை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி விஜயிடம் சமாதானம் பேசலாம் எனக்கூறி நெல்லைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனை நம்பிய விஜய் இன்று காலை ரெயில் மூலம் நெல்லை வந்துள்ளார்.
நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து விஜயை புஷ்பராஜ் தனது நண்பரான சிவா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் மாடியில் சமாதானம் பேசிய போது விஜய்க்கும், புஷ்பராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த புஷ்பராஜ், சிவா ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயை வெட்டினர்.
மேலும் அங்கு கிடந்த கட்டிட கழிவுகள் மூலமும் விஜயை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புஷ்பராஜ், சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
- இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது.
நெல்லை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெனிபரின் சகோதரர் சிம்சன் என்ற புஷ்பராஜ் செல்போனில் பேசி விஜயகுமாரை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.
நேற்று காலை ரெயிலில் நெல்லைக்கு வந்த விஜயகுமாரை சிம்சன் தனது நண்பரான பாளை அண்ணா நகரை சேர்ந்த சிவாவுடன் (35) சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து கொலை செய்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சனையும், சிவாவையும் கைது செய்து நடத்திய விசாரணையில் சிம்சன் கூறியதாவது:-
எனது தங்கையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். பின்னர் அவர் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விஜயகுமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்து நாங்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டோம். இதனால் சமீபத்தில் ஜெனிபர் கள்ளக்குறிச்சியில் விஜயகுமாரை தேடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து பாளை மகளிர் போலீசில் சமாதானம் பேசி மீண்டும் ஜெனிபரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனாலும் எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது. எனது தங்கையை இவ்வளவு கஷ்டபடுத்தும் விஜயகுமாரை கண்டிக்க வேண்டும் என்று நினைத்து அவரை நைசாக பேசி நெல்லைக்கு வரவழைத்தேன்.
ஆனால் அவர் முன் எச்சரிக்கையாக அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். இதனால் அவரை நம்பும்படி பேசி கழட்டிவிட்டுவிட்டு விஜயகுமாரை மட்டும் அழைத்து வந்தேன். எனது நண்பன் சிவா வீட்டில் வைத்து சமாதானம் பேசினோம். அப்போது அவர் எங்களது சமாதானத்தை கேட்கவில்லை. காதலை கைவிட மறுத்தார். இதனால் நான் அவரை தாக்கினேன். ஆத்திரம் அதிகரித்ததில் நாங்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.