search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி ஒழுங்காற்று குழு"

    • குழு பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று தெரிவித்துள்ளனர்.
    • அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவு.

    தமிழகம் - கர்நாடகா இடையிலான காவிரி நீர் பங்கீடு விவகாரம் பல ஆண்டுகளாக பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் தண்ணீர் கேட்பதும், கர்நாடகா மறுப்பதும் வாடிக்கையாகி கொண்டிருக்கிறது.

    பின்னர், டெல்லி சென்று காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றிடம் முறையிட்டு நீதி பெற வேண்டிய சூழல் உள்ளது. இவர்கள் பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தி உள்ளது.

    அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை.
    • அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான்.

    சென்னை:

    இன்று (மே 1-ந் தேதி) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மே தின நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தலைமை நிலைய செயலாளரான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், தொ.மு.க. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., அமைச்சர் சி.வி.கணேசன், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதிச் செயலாளர் மதன்மோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

     

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபோதும் கர்நாடக அரசு திறக்கவில்லை. என்றைக்காவது கர்நாடகா அரசு நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை. அணைகளில் அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். குறைவாக தண்ணீர் இருக்கும்போதும் அதே பாட்டுதான். காவிரி ஒழுங்காற்று குழு தண்ணீரை திறந்து விடுமாறு கூறியும் திறக்க மாட்டேன் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

    ஆகையால் மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் இருக்கிறது. இதில் கேள்வி கேட்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டுதான். எனவே காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் இருந்து காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், முதன்மை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    • நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    காவிரிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.

    ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.

    இதில் தமிழ்நாட்டில் இருந்து காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், முதன்மை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    இந்த மாதம் கர்நாடகத்தில் இருந்து பருவமழையால் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். ஆனால் தர வேண்டிய பழைய நிலுவை அப்படியே உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை. இந்த டிசம்பர் மாதம் 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதையும் சேர்த்து மொத்தம் 17 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். எனவே அந்த தண்ணீர் கிடைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும்.

    நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

    • காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.
    • காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை மறுதினம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

    இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.

    இந்நிலையில், நாளை மறுதினம் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் 23-ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • பருவ மழை பெய்யும் காலமாக உள்ளதால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் தலைவர் வினித்குப்தா தலைமையில் இன்று காணொலியில் கூடியது.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.

    இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது. இருப்பினும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன. ஆனாலும் மீண்டும் விவசாயிகள் நெற்பயிரிட்டு உள்ளனர்.

    தற்போது பருவ மழை பெய்யும் காலமாக உள்ளதால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் தலைவர் வினித்குப்தா தலைமையில் இன்று காணொலியில் கூடியது.

    இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு இதுவரை திறந்து விட வேண்டிய நிலுவை 14 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

    கர்நாடக மாநில அணைகளில் 50 டி.எம்.சி.க்கும் மேல் தண்ணீர் இருப்பதால் வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் இதை கர்நாடக அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பருவ மழை பெய்வதை பொறுத்து தான் முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்துவிட்டனர்.

    • காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    சென்னை:

    காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து தேவையான தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.

    கடந்த 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டதையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    ×