search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரேஷ்கோபி"

    • ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா?
    • பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, 'முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும்.

    முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? நீதிமன்றம் பதில் சொல்லுமா? அல்லது நீதி மன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது" என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றக்கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா? இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா? பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.

    ஏற்கனவே காவிரி பிரச்சனையில் அண்டை மாநிலமான கர்நாடகத்தோடு உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.
    • சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி. மத்திய இணை மந்திரி பதவியேற்ற இவர், டெல்லியில் இருந்து கேரளா திரும்பியதும் கோழிக்கோடு தாலி கோவில், பழையாங்கடி மாடைக்காவு கோவில் மற்றும் பரசினிக்கடவு கோவில்களுக்குச் சென்றார்.

    தொடர்ந்து அவர், கண்ணூர் கல்லியசேரியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், சி.பி.எம். தலைவருமான ஈ.கே.நாயனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

    சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பாக சாரதா கூறுகையில், சுரேஷ்கோபி, நாயனாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பலமுறை இங்கு வந்துள்ளார். கண்ணூர் வரும்போதெல்லாம், எனக்கு போன் செய்து அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என கூறுவார். இப்போது அவர் பழைய சுரேஷ் இல்லை. மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றார்.

    • தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு அடித்தளமிட்டது.
    • படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள்.

    சென்னை:

    சென்னை கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துகுமரப்பா சாலையில் நடைபெற்ற விழாவில் அனிதா அச்சீவா்ஸ் அகாடமியில் பயின்ற மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினாா்.

    மேலும், பெண்களுக்கு தையல் எந்திரம், மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினாா். விழாவில் அவா் பேசியதாவது:-

    தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் 'நான் முதல்வன்' திட்டத்துக்கு அடித்தளமிட்டது அனிதா அச்சீவா்ஸ் அகாடமிதான். இங்கு 10 குழுக்களைச் சோ்ந்த பெண்களும், 6 குழுக்களைச் சோ்ந்த ஆண்களும் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனா்.


    சிறந்த அடிப்படை கட்டமைப்புகளையும் திட்டங்களையும் நிறைவேற்றி கொளத்தூா் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக, முன் மாதிரி தொகுதியாக ஆக்கி இருக்கிறோம். இதுபோன்று செய்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்களை அழைத்து வந்துள்ளேன்.

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் முன்னேறி வரக்கூடிய தருணங்களில் அவா்களுக்கு தடைகள் பல வரும். அந்தத் தடைகளை நியாயப்படுத்தவும் பலா் இருப்பாா்கள். படித்து முன்னேற ஆசைப்பட்டதைத் தவறு என்றும் கூட சிலா் பேசிக் கொண்டிருப்பாா்கள். இவற்றை கடந்துதான், நாம் முன்னேறியாக வேண்டும்.

    ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பவா்கள் பெண்கள். அத்தகைய பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றமடைய ஊக்கமளிக்கும் நாளாக, மகளிா் தினத்தைக் கொண்டாடுகிறோம்.


    திராவிட மாடல் அரசு என்பது மகளிா் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களைத் தீட்டியும், பல சாதனைகளையும் செய்து வருகிறது. நீங்களும் (பெண்களும்) தமிழ்நாடும் முன்னேற்றம் அடைந்தால்தான் எனக்கும், அரசுக்கும் பெருமை. தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் திட்டங்களை எவ்வளவோ செய்தாலும் மத்திய அரசு ஒத்துழைப்போ நிதியுதவியோ தருவதில்லை. நாம்தான் செய்து வருகிறோம்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத, அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் மத்திய அரசு அமைந்தால்தான் இன்னும் நிறைய திட்டங்களைச் செய்ய முடியும். அதற்கு உங்களுடைய அனைவரின் ஆதரவும் தேவை. நீங்கள் ஒவ்வொருவரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்களுடைய குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிடச் செய்ய, மக்களவைத் தோ்தலில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பி.கே. சேகா்பாபு, சென்னை மேயா் பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    • திருச்சூர் மக்கள் என் தலையில் கிரீடத்தை வைப்பார்கள்.
    • நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை.

    திருவனந்தபுரம்:

    மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்ற நிலை நிலவிவருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.

    கேரளாவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    திருச்சூர் தொகுதி வேட்பாளராக நடிகர் சுரேஷ்கோபி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அவர், தனது தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். நேற்று முன்தினம் திருச்சூர் சென்ற அவருக்கு, பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


    நடிகர் சுரேஷ் கோபி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடியின் தாக்கமும், செல்வாக்கும் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இங்கு இருக்கிறேன். சினிமா நடிகனாக அல்ல. அரசியல் சேவகனாக. நான் தற்போது மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவனாக இருக்கிறேன்.

    தேர்தலில் முதலில் 2019-ம் ஆண்டு போட்டியிட்டேன். அதன்பிறகு 2021-ல் போட்டியிட்டேன். ஆனால் இந்த முறை வெற்றிபெற வந்திருக்கிறேன். திருச்சூர் மக்கள் என் தலையில் கிரீடத்தை வைப்பார்கள். இந்த முறை எனக்கு திருச்சூரை தருவார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் சினிமாவை விட்டு விலகப் போவதில்லை. அது எனது வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும்.

    இவ்வாறு சுரேஷ்கோபி கூறினார்.

    • பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
    • திருச்சூர் சென்ற சுரேஷ்கோபிக்கு பாரதிய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    கேரளாவில் இந்த முறை வெற்றியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அங்கு தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். அந்த மாநிலத்தில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகரும், பாரதிய ஜனதா பிரமுகருமான சுரேஷ்கோபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


    வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு அவர், தேர்தல் பிரசாரத்திற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளார். நேற்று திருச்சூர் சென்ற சுரேஷ்கோபிக்கு பாரதிய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் அணிவகுக்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியினரின் வரவேற்பு உற்சாகம் அளிப்பதாகவும் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். மேலும் திருச்சூரில் நடப்பது போர் அல்ல... போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும்.
    • பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடிகை ஷோபனா, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நடிகை ஷோபனா போட்டியிடவேண்டும் என்று நடிகர் சுரேஷ்கோபி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதே எனது விருப்பம். பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும், நானும் இது தொடர்பாக அவருடன் பேசினோம்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.

    இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.

    • பேரணியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் உள்பட 500 பேர் மீது திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் கடன் மோசடி நடந்தது. இதில் ஏராளமான தனிநபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையினரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் நடந்த இந்த மோசடி சம்பவத்தை கண்டித்து நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான சுரேஷ் கோபி தலைமையில் கடந்த 2-ந்தேதி பேரணி நடைபெற்றது. கருவண்ணூரில் இருந்து திருச்சூர் வரை நடந்த இந்த பேரணியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இந்த பேரணியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் உள்பட 500 பேர் மீது திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கை பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×