என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை இலங்கை பயணிகள் கப்பல்"

    • நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
    • இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    • வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
    • மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.

    நாகப்பட்டினம்;

    இந்தியா-இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14-ந் தேதி காலை நாகையில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

    இந்த கப்பலில் 150 பேர் பயணம் செய்யலாம். முதல் நாளில் 50 பயணிகள் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர். தொடர்ந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 30 பயணிகள் நாகைக்கு வந்தடைந்தனர்.

    இந்நிலையில், 7 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாலும், நிர்வாக காரணங்களாலும் நேற்று இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து, இன்று 2-வது நாளாக முன்பதிவு செய்திருந்த 15 பயணிகளுடன் காலை 7 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் புறப்பட்டது.

    பின்னர், மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.

    • 18-ந்தேதிக்கு பிறகு தொடங்க கப்பல் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
    • சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை நேற்று நிறுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

    ஆரம்பத்தில் தினமும் இயங்கி வந்த பயணிகள் கப்பல் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் வாரத்தில் 3 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பட்டது.இந்நிலையில், பயணிகளின் வருகை அதிகரித்த காரணத்தால் கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி முதல் சனிக்கிழமைகளிலும் இயக்கப்பட்டது.

    பின்னர், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 8-ந்தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் என செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை நேற்று (சனிக்கிழமை) நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இந்த கப்பல் சேவையை அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந்தேதிக்கு பிறகு தொடங்க கப்பல் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. மேலும், இந்த பயணத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் பின்னர் தெரிவிக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
    • கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு(2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம்(ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    பிரச்சனைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) மீண்டும் தொடங்கப்படும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    ×