என் மலர்
நீங்கள் தேடியது "விமான சேவை தொடக்கம்"
- சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.
- இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.
2 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. உதான்-5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டது.
மதியம் 1.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 34 பயணிகள் வந்தனர். தொடர்ந்து இங்கிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமான சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து 16 பயணிகள் கொச்சின் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஓசூர் பிரகாஷ், சேலம் கலெக்டர் கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, செல்வகணபதி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறும்போது விமானம் கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29-ம் தேதி பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்த டத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என கூறினார்
பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த பயணி வக்கீல் மணிகண்டன் கூறும்போது, முதல் நாள் விமானத்தில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உதான் திட்டத்தின் மூலம் விமான சேவையை சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார். மேலும் விமான சேவை மீண்டும் செயல்படுத்திய விமான நிறுவனம், எம்.பி. உள்ளிட்டவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
- விமானத்தில் 176 பயணிகள் பயணம் செய்தனர்.
- ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை முதல் துவங்கியது.
இந்த விமானம் ஆனது நேரடியாக திருச்சியில் இருந்து பேங்காக்கிற்கு இயக்கப்படும். இதன் முதல் சேவை துவக்கமானது நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது.
இந்த சேவையானது வாரத்திற்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பேங்காக்கிற்கு இயக்கப்பட உள்ளது.

இந்த விமான சேவை துவக்க நாளான நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10:35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்து அடைந்து மீண்டும் இரவு 11 05 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து பேங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு பேங்காக்கில் இருந்து திருச்சி வந்து விமானத்தில் 46 பயணிகளும் மீண்டும் திருச்சியில் இருந்து பேங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் பயணம் செய்தனர்.
- ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் அகற்றம்.
- பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
ஆலந்தூர்:
வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று மாலை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலை யத்தில் உள்ள ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் இன்று (1-ந்தேதி) அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே விமான பயணிகள், தாங்கள் பயணம் செய்ய இருக்கும், விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படும் என்பதை கேட்டு அறிந்து கொண்டு, பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை முழுவதும் நின்றது. லேசான சாரல் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஓடுபாதையில் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மழையும் இல்லாததால் 3 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறு வனங்களின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் புயல் கரையைக் கடந்து வானிலை சீரடைந்து விட்டதால், முன்னதாகவே விமானங்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணி முதல் சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதுபற்றி பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.