என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண்களுக்கு"

    • 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அமைச்சர் முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், வெள்ளோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகி த்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், சென்னிமலை யூனியன் தலைவர் காயத்ரி இளங்கோ, குமாராவலசு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டணர்.

    • கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது.
    • வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் செயல்படுத்தி வரும் 'அன்னசுரபி' திட்டத்தின் கீழ் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அவித்த முட்டையுடன் சரிவிகித மதிய உணவு வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க அன்னசுரபி திட்ட தன்னார்வலர்கள் சிவனேசன், விஸ்வநாதன் மற்றும் செவிலியர்கள் உணவு பரிமாறினர். தொடர்ந்து வாரம் இருமுறை பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அன்னசுரபி திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுமென அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், மோதிலால் ஆகியோர் தெரிவித்தனர்.

    ×