என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ruby Manokaran MLA"

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரப்பாடி, காரியாண்டி, ராமகிருஷ்ணாபுரம், தினையூரணி உள்ளிட்ட கிராமங்களில் திடீரென்று டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது
    • நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் வலியுறுத்தி இருக்கிறேன் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரப்பாடி, காரியாண்டி, ராமகிருஷ்ணாபுரம், தினையூரணி உள்ளிட்ட கிராமங்களில் திடீரென்று டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பரப்பாடி அரசு மருத்துவமனையிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட–வர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    காய்ச்சலின் பரவல் வேகமாக இருப்பதால், மேற்கொண்டு பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும், கலெக்டரையும் தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று ெசய்தியாளர்களிடம் கூறுகையில், டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த தகவல் எனக்கு கிடைத்ததும், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை உடனடியாக தொடர்பு கொண்டு பேசினேன். நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாக கூறப்படுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருக்கிறேன். பொதுமக்களையும் இந்த நேரத்தில் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    • களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ ஆய்வு மேற்கொண்டார்
    • சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. களக்காடு ஒன்றியம், களக்காடு தெற்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் களக்காடு நகராட்சி பகுதியில் உள்ள நாடார்புதுதெரு, கோட்டை யாதவர் தெரு, மூங்கிலடி, பெருந்தெரு, அண்ணா சாலை கீழத்தெரு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அங்கு சாலை வசதி, கழிவுநீர் ஒடை அமைத்தல், மேல்நிலை தண்ணீர் தொட்டி பராமரித்தல், கால்வாய் பாலம் பகுதியில் தடுப்பு சுவர் அமைத்தல், வீட்டிற்கு அருகே அபாயகரமாக இருக்கும் பனை மரங்களை அப்புறப்படுத்துதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். உடனடியாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர், மலையடி புதூர் பஞ்சாயத்து தலைவர் மாவடி ரமேஷ், மாநில மகிளா காங்கிரஸ் இணை செயலாளர் கமலா, களக்காடு தெற்கு மற்றும் மத்திய வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அலெக்ஸ், காளபெருமாள், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்வில்சன், நகராட்சி சேர்மன் சாந்தி சுபாஷ், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நளன், களக்காடு தெற்கு, மத்தியம் வட்டார நிர்வாகிகள் தங்கராஜ், டேனியேல், செல்வராஜா, கணேசன் மற்றும் களக்காடு நகர காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிம்சோன்துரை, மீகா, ராஜா மற்றும் வார்டு தலைவர்கள் துரை, பாக்கியராஜ், அன்னபாண்டி, யோசுவா, மகளிரணி நிர்வாகி ஸ்ரீதேவி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.
    • நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ். ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்ப ட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.

    இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமாகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    உண்ணாவிரத போராட்டம்

    நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

    இதைத்தொ டர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. ஆனால் அதுவும் சரியாக நடைபெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது மட்டும் நடவடிக்கை எடுத்து நீதி சாய்க்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்த கூடாது என்றும் டெல்லியில் இருந்து சிறப்பு குழு வந்துதான் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எந்த நடவடக்கையும் எடு க்க கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

    தினேஷ் குண்டுராவ்

    இது தொடர்பாக மேல்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

    இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துேவாம் என்று கூறி வந்ேதாம். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

    போராட்டம் வாபஸ்

    இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்த காங்கிரஸ் தமிழக மேலிட பொறு ப்பாளர் தினேஷ் குண்டுராவ் வேண்டுகோளுக்கு இணங்க காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 30-ந் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேல தேவநல்லூர் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்புவிழா நடைபெற்றது.
    • பத்மனேரி கிராம பொதுமக்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    களக்காடு வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட தேவநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள மேல தேவநல்லூர் கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பயணிகள் நிழற்குடை வேண்டி மனு அளித்ததன் பெயரில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதியதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். அதன்பின்பு மேலதேவநல்லூர் கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக கூறினார்.

    அதன்பின்பு பத்மனேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி போதுமானதாக இல்லாத காரணத்தால் கூடுதல் கழிப்பறை வசதி கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.பத்மனேரி கிராம பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால், மாவட்ட துணை தலைவர் செல்லப் பாண்டி, களக்காடு,தெற்கு, களக்காடு நகராட்சி, நாங்குநேரி மேற்கு, மற்றும் பாளையங்கோட்டை, தெற்கு ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், அலெக்ஸ், ஜார்ஜ்வில்சன், வாகைதுரை, நளன், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் பால்பாண்டி, பானு, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மாணிக்கம், சித்திரைவேல், நம்பித்துரை, ராஜா, சுந்தர், பொன்ராஜ், யாக்கோபு, இளைஞர் காங்கிரஸ் நாங்குநேரி தொகுதி தலைவர் ராஜ்குமார்,ஒன்றிய கவுன்சிலர் களக்காடு 2-வது வார்டு கவுன்சிலர் வனிதா, அன்னபாண்டி, மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • எதிர்கால வாழ்க்கை பாடத்தை கற்க பள்ளி கூடங்களுக்கு செல்லும் நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்னும் பாடத்தை வீட்டில் இருந்தே எடுக்க வேண்டியது அவசியமாகிறது
    • பெங்களூருவில் கண்டறியப்பட்டுள்ள தவறுகள், நம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையிலும் இனி நடைபெறக்கூடாது. பிள்ளைகளை வழி நடத்துகின்ற முதல் பொறுப்பு, அவர்களது பெற்றோருக்கு த்தான் இருக்கிறது.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திடீர் சோதனை

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பைகளில் நேற்று ஒரேநேரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

    அங்கு கருத்தடை சாதனம், கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள், லைட்டர்கள், ஆணுறைகள், போதைக்காக பயன்படுத்தும் ஒயிட்னர்கள் அவர்களின் பைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கி இருக்கிறது.

    ஒழுக்கம் எனும் பாடம்

    சில மாணவர்கள், தண்ணீர் பாட்டிலில் மதுபானத்தை கலந்து கொண்டு வந்து குடிப்பதும், இந்த சோதனையில் அம்பலமாகி இருக்கிறது. இது பெங்களூருவில் நடந்த விஷயம்தானே என்று நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. இந்த சமூகமும், அனைத்து பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

    எதிர்கால வாழ்க்கை பாடத்தை கற்க பள்ளி கூடங்களுக்கு செல்லும் நம் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்னும் பாடத்தை வீட்டில் இருந்தே எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

    கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, எல்லா மாணவர்களின் கைகளிலும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் இருக்கின்றது. இன்டர்நெட்டில் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கின்றது. நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை மட்டும் தேடிக் கற்க நாம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

    ஊக்கம்

    எது நல்லது, எது கெட்டது என்று பிரித்து பார்க்கிற பக்குவத்தை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தும் முதல் பொறுப்பு பெற்றோர்களையே சாரும். ஒவ்வொரு பெற்றோரும், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளின் திடீர் செயல்பாடுகளை கண்காணிப்பதோடு, அவர்கள் நல்வழியில் செல்லும் அறிவுரைகளையும், ஊக்கத்தையும் தொடர்ச்சி யாக வழங்க வேண்டும்.

    பெங்களூரு போன்று தமிழகத்தில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள், இருக்கக்கூடாது என்று நாம் நம்பும் அதேநேரத்தில், தமிழக அரசும் பள்ளிக்கூடங்களில் மாணவ ர்களின் செயல்பாடுகள் ஆரோக்கிய மாக இருக்கின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய கலாச்சார சீரழிவை இது ஏற்படுத்தும்.

    ஆரோக்கியமான சமூகம்

    பெங்களூருவில் கண்டறியப்பட்டுள்ள தவறுகள், நம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையிலும் இனி நடைபெறக்கூடாது. பிள்ளைகளை வழி நடத்துகின்ற முதல் பொறுப்பு, அவர்களது பெற்றோருக்கு த்தான் இருக்கிறது.

    பிள்ளைகளை கண்காணியுங்கள். அன்போடு கலந்து அறிவுரைகளை வழங்குங்கள். தவறு நடந்தால் உடனே கண்டியுங்கள். நல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள். நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கடம்போடு வாழ்வு நாங்குநேரியான் கால்வாய் கரை பகுதிகளில் நேற்று பனை மர விதைகள் நடப்பட்டது.
    • நாங்குநேரி தொகுதியை செழிப்பாக மாற்ற மரக்கன்றுகளை நடவு செய்வதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    களக்காடு:

    நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபிமனோகரன் நாங்குநேரி தொகுதியில் 1 லட்சம் பனை மர விதைகள் நடும் பணிகளை தொடங்கி உள்ளார். இதன்படி தினசரி பல்வேறு பகுதிகளில் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    அந்த வகையில் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு நாங்குநேரியான் கால்வாய் கரை பகுதிகளில் நேற்று பனை மர விதைகள் நடப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு, தொடங்கி வைத்தார்.

    அதனைதொடர்ந்து களக்காடு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ-மாணவிகளும் பனை மர விதைகளை நட்டனர். அதன் பின்னர் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    1 லட்சம் பனை விதைகள்

    நாங்குநேரி தொகுதியில் பல இடங்களில் வறட்சி காணப்படுகிறது. எனவே நாங்குநேரி தொகுதியில் நிலவும் வறட்சியை நீக்கி, செழிப்பாக மாற்ற மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவில் இந்த பணிகளை தொடங்கி உள்ளோம். இதுவரை 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக 1 லட்சம் பனை மர விதைகளையும் நட்டு வருகிறோம்.

    தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பனை மரங்கள் ஏராளமாக உள்ளன. பனை மர தொழில் அழிந்து வந்தது. இதனால் கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, பனை மர தொழிலை ஊக்குவித்து வருகிறார். இதற்காக பனை மர தொழிலாளர்களுக்கு நல வாரியமும் அமைத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், ஜார்ஜ்வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன்,தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு ஒன்றிய சேர்மன் ஜார்ஜ்கோசல், களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலெக்ஸ், களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ்வில்சன், மலை யடிப்புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன் கார்த்தி கேயன், செல்லப்பாண்டி, மாநில மகளிரணி இணை செயலாளர் கமலா, அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் வட்டார தலைவர் சங்கரநாராயணன், பவன், ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரீமாபைசல், ராசாத்தி அம்மாள்,பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நளன், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பால்பாண்டி, களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், தி.மு.க நகர செயலாளர் மணிசூரியன், கவுன்சிலர்கள் மிகா, வனிதா காமராஜ், கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் காமராஜ், களக்காடு தெற்கு வட்டாரம்,களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டேனியல், காமராஜ், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜா, சுந்தர், ஜெயசீலன், பொன்ராஜ் வட்டார மகளிரணி தலைவி பிரியாமுருகன், களக்காடு வட்டார மகளிரணி நிர்வாகிகள் ராணி, விமலா, பானு, லதா, ஸ்ரீதேவி, சுதா, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள்,களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், அன்வர், ஆபிரகாம் மற்றும் களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • களக்காடு தெற்கு வட்டாரத்தில் உள்ள கோவில ம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பூரில் பகுதி நேர ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, அரசு அதிகாரிகள், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ராஜன், களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு தெற்கு வட்டாரத்தில் உள்ள கோவில ம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தோப்பூரில் பகுதி நேர ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன், அரசு அதிகாரிகள், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ராஜன், மாநில செயற் குழு உறுப்பினர் சித்திக், மழையடிபுதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மற்றும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கமலா, களக்காடு நகராட்சி தலைவர் ஜார்ஜ் வில்சன், தெற்கு, மத்திய வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அலெக்ஸ், காளபெருமாள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வசந்தா, கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம், களக்காடு ஒன்றிய கவுன்சிலர் வனிதா காமராஜ், மற்றும் காங்கிரஸ் மகளிரணி நிர்வாகிகள் வேலம்மாள், விமலா, பாலம்மாள், லெட்சுமி, ஸ்ரீதேவி, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
    • அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

    அதனடிப்படையில் இன்று ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரீமா பைசல், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, ஏர்வாடி தி.மு.க. செயலாளர் சித்திக், ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள், ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
    • நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.

    களக்காடு:

    களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், அமலன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டாரம், நகராட்சி, நாங்குநேரி மேற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் அலெக்ஸ், ஜார்ஜ்வில்சன், வாகைதுரை, களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், வில்சன், துரைராஜ், ராஜன், துரை, ஜெயசீலன், ராஜன், பாக்கியராஜ், பெருமாள், பாஸ்கர், விபின், கண்ணன், அருள், அப்துல், முருகன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த காமிராக்கள் மூங்கிலடி, பச்சையாறு அணைக்கு செல்லும் பாதை, மங்கம்மாள் சாலையில் பொருத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.
    • இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.

    இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட் வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயின் தாக்கம் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வாழைகளை நோய் தாக்கியது எப்படி என்பதை கண்டறிய வேண்டும். களக்காடு பகுதி வாழைகளை நம்பியுள்ள பகுதி ஆகும். மனிதர்களுக்கு நோய் பரவுவது போல் வாழைகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிவாரணம் வழங்குவார் என்றார்.

    அவருடன் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு உதவி இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலைத்துறை அதிகாரி இசக்கிமுத்து, உதவி அலுவலர் கிளாரன்ஸ் ஜோன்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர்,

    கக்கன், செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பித்துரை, திருக்குறுங்குடி பேரூராட்சி, களக்காடு நகராட்சி, பாளை தெற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், நளன், திருக்குறுங்குடி நகர தி.மு.க செயலாளர் கசமுத்து, சுரேஷ், நாங்குநேரி, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுந்தர், ஜெயசீலன், வின்சென்ட் குமார், துரை உள்பட பலர் சென்றனர். 

    • வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
    • மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வடகிழக்கு பருவ மழை பெய்யும் காலத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் திறந்துவிடுவது தாமதமாகி வருகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

    தற்போது மணிமுத்தாறு அணை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த நல்ல மழையால் நிரம்பி இருக்கிறது. அதனால், பானாங்குளம், மூலக்கரைப்பட்டி, விஜயநாராயணம் உள்ளிட்ட நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாசன பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து, நாங்குநேரி தொகுதி விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    ×