search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Bank of India"

    • வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.
    • வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டூர் மைதுகுரு சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.

    இவர் அதே ஊரில் உள்ள 39 நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை தங்கமுலாம் பூசி வங்கியில் அடகு வைத்து ஒரு ஆண்டில் 3.17 கோடி கடன் பெற்று உள்ளார்.

    வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை சரி பார்த்தபோது 39 பேர் பெயரில் வைக்கப்பட்ட நகைகள் முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பதை கண்டுபிடித்தனர்.

    இது குறித்து வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சந்திரமோகன் 3 வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

    ×