search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "60 வயது"

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே திருமணிமுத்தாற்றில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

    மூதாட்டி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.
    • மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை சேர்ந்த 60 வயதான பெண் ணுக்கு சூலகப் புற்றுநோய் (ஒவேரியன் கேன்சர்) இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில், திருவனந்த புரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

    வழக்கமான கீமோதெரபி செயல்முறை பயனேது மின்றி தோல்வியடைந்திருந்த நிலையில் சூலக புற்று நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் மூதாட்டிக்கு இருந்தது. எனவே, அவருக்கு சிகிச்சை யளிக்க கிம்ஸ் ஹெல்த்தின் அறுவை சிகிச்சை புற்றுநோ யியல் துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் ஒருங்கி ணைப்பாளரான டாக்டர் ஜெயானந்த் சுனில் தலைமை யின் கீழ் மருத்துவர்கள் குழு, பி.ஐ.பி.ஏ.சி. (பிரஷ ரைஸ்டு இன்ட்ராபெரிட் டோனியல் ஏரோசோ லைஸ்டு கீமோதெரபி) மருத்துவ செயல்முறையை தேர்வு செய்தது.

    சுவாச சிரமம் இருக்கும் போது நுரையீரல்களுக்குள் எப்படி நேரடியாக மருந்துப் பொருளை இன்ஹேலர்கள் உட்செலுத்துகின்றனவோ அதே போன்ற செயல் முறையே இது. இந்த மருத் துவமுறை அதிக பயனளிக்கும் திறன் கொண்டதா கவும், கூடுதல் பாதுகாப்பானதாகவும் செயல்படுகிறது. அத்துடன், வழக்கமான கீமோதெரபி சிகிச்சை முறையில் நிகழும் பக்க விளைவுகளை விட, இதில் மிக குறைவான பக்க விளைவுகளே ஏற்படக்கூடும் என்பது இதன் சிறப்பாகும்.

    மேலும் வயிறு, கருப்பை, பெருங்குடல் மற்றும் சூலக உறுப்புகளில் உருவாகியிருக்கும் முதிர்ச்சியடைந்த புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு மிகச்சிறிய துளை வழியாக அழுத்தப்பட்டிருக்கும் ஏரோசால் (மருந்தை உள்ள டக்கிய கூழ்மம்) வடிவில் கீமோதெரபியை இந்த மருத்துவ முறை வழங்கு கிறது. இது ஒரு புதுமையான சாவித்துளை சிகிச்சை முறை ஆகும்.

    இந்த புதுமையான மருத் துவ செயல்முறை வெற்றியடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் 2 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பிறகு சிஸ்டமிக் கீமோ தெரபியோடு சேர்த்து மருத்துவ செயல்முறையின் அதிக அமர்வுகளில் பங்கேற்குமாறு இவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    புத்தாக்கமான பி.ஐ.பி. ஏ.சி. மருத்துவ செயல் முறையை மேற்கொள்வ தற்கு அங்கீகாரம் அளிக்கப் பட்ட மற்றும் இதற்கான பிரத்யேக பயிற்சி பெற்ற ஒரே மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெயானந்த் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள ஐ.எஸ்.எஸ்.பி.பி. மருத்துவமனையில் இந்த செயல் முறைக்கான நிபுணத்துவ பயிற்சியையும் டாக்டர் ஜெயானந்த் பெற்றிருக்கிறார்.

    ×