search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண் குழந்தை பலி"

    • பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சி.
    • திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    பீகாரை சோ்ந்தவர் அங்கஸ்குமார் (வயது 29). இவரது மனைவி அம்சிகுமாரி (23). இவர்களது 9 மாத ஆண் குழந்தை அசிஸ்.தம்பதி இருவரும் தங்களது குழந்தையுடன் திருப்பூர் எம்.எஸ்.நகர் அருகே செல்வலெட்சுமி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அங்கஸ்குமார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி அம்சிகுமாரி சமையல் அறையில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை அசிஸ் விளையாடிக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் குழந்தையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அம்சிகுமாரி குழந்தையை தேடி வெளியே ஓடிவந்த போது அங்குள்ள தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பக்கெட்டிற்குள் குழந்தை தலைகுப்புற கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையல் அறையில் அம்சிகுமாரி வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தை அசிஸ் தவழ்ந்து சென்று அருகில் பட்கெட்டில் இருந்த தண்ணீரில் தலைக்குப்புற விழுந்தபோது, யாரும் கவனிக்காததால் மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீரில் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • இது குறித்து பேரூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் செங்கணம்பள்ளி ஆதிநாராயணன். இவர் பேரூர் அருகே உள்ள கோவை- சிறுவாணி ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது செங்கணம்பள்ளி ருசிக் (வயது 2).

    சம்பவத்தன்று சிறுவன் வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற சித்ரைசாவடி வாய்க்கால் அருகே சிறுவன் சென்றுள்ளான். வாய்க்கா லில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. அப்போது சிறுவன் சைக்கிளுடன் வா ய்க்காலில் தவறி விழுந்தான்.

    குழந்தையை நீண்ட நேரமாக காணாததால் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது சைக்கிள் வாய்க்காலில் மிதந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அருகில் சென்று பார்த்த போது செங்கணம்பள்ளி ருசிக் நீரில் மூழ்கி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் தங்களது குழந்தையை மீட்டு அந்த பகுதியில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோ தனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×