search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேப்பர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார்.
    • சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்

    மகாராஷ்டிராவில் 9 வயது மகனின் வாயில் பேப்பரை திணித்து தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கணவன் குடிபோதைக்கு அடிமையானதால் அவரைப் பிரிந்து தனது பிறந்த வீட்டில் 9 வயது மகனுடன் மனைவி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சிறுவன் காணாமல் போகவே அவனை உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர்.

    நேற்று காலை 8 மணியளவில் வாயில் பேப்பர் அடைக்கப்பட்டபடி சிறுவனின் உடல் அவனது தந்தையின் வீட்டில் அருகில் கிடந்துள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த திங்கள்கிழமை இரவு மகனை வீட்டுக்கு அழைத்துவந்து நோட்டுப் புத்தகத்தில் இந்த பேப்பர்களை கிழித்து அதை ஒன்று சேர்த்து பந்தாக செய்து மகனின் வாயில் திணித்துள்ளார்.

    இதனால் சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துள்ளான்என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த கொலைக்கு காரணம் இன்னும் தெரியவராத நிலையில் சம்பவத்தின்போது சிறுவனின் தந்தை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரைக் கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    • மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.
    • ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    தஞ்சாவூர்:

    நாட்டில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து இறங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று வி.வி.பேட் கருவியில் பொருத்தப்படும் பேப்பர் ரோல் பெட்டிகள் பெங்களூரில் இருந்து லாரியில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.

    இந்த பேப்பர் ரோலானது வி.வி.பேட் எந்திரத்தில் பொருத்தப்பட்டு யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை காண்பிக்கும் ஒப்புகை சீட்டாகும்.

    மொத்தம் 21 பெட்டிகளில் பேப்பர் ரோல் வந்தது.

    ஒவ்வொரு பெட்டியிலும் 20 ரோல்கள் என 4320 பேப்பர் ரோல்கள் இருந்தது.

    இவைகள் லாரியில் இருந்து இறக்கி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    ×