என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலகாபாத் உயர் நீதிமன்றம்"

    • இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
    • யஸ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் 10 கோடி ரூபாய்க்கு அதிகமாக பணம் தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக கூறப்படுகிறது.

    உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    இதற்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தனர். இந்நிலையில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

     

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், குடியரசுத் தலைவர், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே யஷ்வந்த் வர்மா மீது எப்ஐஆர் பதவு செய்யகோரிய பொதுநல மனுவை இன்று விசாரணையின்போது உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    ஏற்கனேவே உள்ளக விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுவது அல்லது இந்த விஷயத்தை பாராளுமன்றத்துக்கு பரிந்துரைப்பது உள்ளிட்டவை குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

    • 1984ல் ம.பி. உறுப்பினராக பதிவு செய்து கொண்டார் ப்ரிதிங்கர் திவாகர்
    • அதிர்ஷ்டவசமாக எனக்கு சாபமே வரமானது என்றார் திவாகர்

    உத்தர பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம், பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்) நகரில் உள்ளது.

    இங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ப்ரிதிங்கர் திவாகர் (Pritinker Diwaker).

    திவாகர், கடந்த 1984ல் மத்திய பிரதேச பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். பிறகு 2005 ஜனவரி மாதம் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார். கடந்த 2009ல் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2018 அக்டோபர் மாதம் பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2023 அன்று தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    கடந்த மார்ச் 26 அன்று பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனமானார்.

    பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ப்ரிதிங்கர் திவாகரின் பணிக்காலம் முடிவடைந்து அவர் விடைபெற்று செல்வதால், நேற்று அவருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

    அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:

    இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம், என்னை துன்புறுத்துவதற்காகவே பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றல் வழங்கியது. அது ஒரு கெட்ட நோக்கத்தில் வழங்கப்பட்ட பணி மாறுதல். ஆனால், அதிர்ஷ்டவசமாக, சாபமே வரமானது போல் எனக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பும், பார் கவுன்சில் உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தற்போதைய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சரி செய்தார். அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் உயர் நீதிமன்ற மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பே முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகாரம் கொண்டது. இந்த அமைப்பில் முழுவதும் நீதிபதிகளே உள்ளதால், "நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பது" எனும் வழிமுறை சரியல்ல என பலர் விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பின் நியமன முடிவை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியே விமர்சித்திருப்பதற்கு சட்ட நிபுணர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதரசா சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக என கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
    • மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது

    2004-ம் ஆண்டு முதல் உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை கற்றுத் தரும் பள்ளிகளுக்கு என, உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் அமலில் உள்ளது.

    இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாகவும், மதரசா வாரியத்தை மத்திய, மாநில சிறுபான்மையின நலத்துறை நிர்வகிப்பதும் தவறு என்றும் கூறி, அன்சுமான் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விவேக் சவுத்ரி மற்றும் சுபாஷ் வித்யார்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய சட்டம் 2004, அரசியலமைப்புக்கு எதிரானது. அத்துடன் இது மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுகிற வகையில் உள்ளது என்று கூறி அந்த சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மார்ச் 22 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

    மேலும், தற்போது மதரசாக்களில் கல்வி பயிலும் மாணவர்களை, வழக்கமான கல்வி நிறுவனங்களில் சேர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி மதரசாவில் படிக்கும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, மதரசா கல்விச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

    அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசு, உத்தரபிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அரசியலமைப்பின் 25-வது பிரிவு மத பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கிறது.
    • ஆனால் ஒரு நம்பிக்கையில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

    மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் ஜாமின் கேட்டவரின் வழக்கு விசாரணையில் உத்தர பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதிமன்றம் மதமாற்றம் நடைபெறும் மதக் கூட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில் ஒருநாள் மெஜாரிட்டி மக்கள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இருந்த டெல்லியில் நடைபெறும் மதக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மதமாற்றம் செய்யப்படுவதாக கைலாஷ மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ராம்காளி பிரஜாபதி என்பவர் தனது சகோதரர் ராம்பாலை கைலாஷ் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை என புகார் அளித்தார்.

    ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருக்கு டெல்லியில சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பி விடுவார் எனவும் கைலாஷ் தெரிவித்தார். ஆனால் ராம்பால் திரும்பவில்லை. இது தொடர்பாக ராம்காளி கைலாஷிடம் கேட்டபோது, அவர் திருப்தி அளிக்கும் வகையிலும் பதில் அளிக்கவில்லை என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஹமிர்பூர் கிராமத்தில் இருந்து ஏராளமான மக்களை டெல்லி மதக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் கைலாஷ் மீது கடத்தல் மற்றும் மதமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.கே. கிரி, இதுபோன்ற மதக் கூட்டங்களில் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைலாஷ் ஹமிர்பூரில் இருந்து மக்களை அழைத்து சென்று, அதற்குப் பதிலாக பணம் பெற்றுள்ளார் என வாதிட்டார்.

    அதேவேளையில் கைலாஷ் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சாகேத் ஜெய்ஸ்வால் "ராம்பால் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்யப்படவில்லை. அவர் கிறிஸ்தவ மதக் கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். சோனு பாஸ்டர் இதுபோன்ற கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

    அப்போது நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் "அரசியலமைப்பின் 25-வது பிரிவு மத பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால் ஒரு நம்பிக்கையில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

    பிரசாரம் என்ற வார்த்தை ஊக்குவித்தல் என்று அர்த்தம். ஆனால், ஒரு நபரை அவரது மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றுவது என்று அர்த்தம் அல்ல.

    இதுபோன்ற செயல்முறைக்கு அனுமதி அளித்தால், இந்த நாட்டின் மெஜாரிட்டி மக்கள் ஒருநாள் மைனாரிட்டி ஆகிவிடுவார்கள். இந்திய மக்கள் இதுபோன்ற மதக் கூட்டம் மூலம் மதமாற்றம் செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

    உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் எஸ்சி/எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் உள்ளிட்ட பிற சாதியினரை கிறிஸ்தவர்களாக மாற்றும் சட்ட விரோதச் செயல்கள் நடைபெற்று வருகிறது என்பது பல வழக்குகளில் இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது" என்றார்.

    அத்துடன் கைலாஷுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    • நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வாழ்ந்து வந்ததார்

    கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

    ×