என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆப்கானிஸ்தான் தொடர்"

    • இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது.
    • ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதற்கான முதல் டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் டிசம்பர் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் டிசம்பர் 10 முதல் அடுத்த வருடம் ஜனவரி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி சொந்த நாட்டுக்கு திரும்புகிறது.

    அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதுவரை இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் தற்போது முதன் முறையாக இரு தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது. 

    • ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
    • இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணி விவரம் வருமாறு:

    இப்ராகிம் ஜட்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப், ரஷித் கான்.

    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மொகாலியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். இந்த அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.
    • பயிற்சியில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.

    மொகாலி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கடும் குளிரில் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.

    அந்த வீடியோவில் பேசிய கில், -7 டிகிரி என்று நினைக்கிறேன். அதனால் எனது கைகளை பாக்கெட்டில் விட்டு கொண்டேன். மேலும் குளிருக்கு எதிராக பயிற்சியில் இடுபடுகிறோம் என தெரிவித்தார். ரொம்ப குளிராக இருக்கிறது என டிராவிட்டு மட்டுமன்றி அனைத்து வீரர்களும் இதனை பற்றி தெரிவித்தனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார்.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, குல்படின் நைப் அல்லது கரிம் ஜனத், முஜீப் ரகுமான், கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இதற்கான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் ரோகித் மற்றும் கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மற்றும் விளையாடி வந்தனர்.

    இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது.
    • இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    இந்தூர்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதிய முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணி மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    இந்நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி 2-வது போட்டிக்கு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி 430 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். 

    இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளதால் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆப்கானிஸ்தான் ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை.

    இந்தூர் மைதானத்தில் இந்திய அணி முன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து இருக்கிறது. கடைசியாக இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட்கோலி, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார். 

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், கரிம் ஜனாத், குல்படின் நைப், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி, நூர் அகமது.

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று உள்ளார்.

    இதுவரை எந்த வீரரும் ரோகித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியை பொருத்தளவில் ரோகித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவர் 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார். 

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. போட்டியில், கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்தனர்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதனால், ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக குல்பாடின் நைப் அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, நஜ்புள்ளா சத்ரான் 23 ரன்களும், கரிம் ஜனாட் 20 ரன்களும், குர்பாஜ் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 14 ரன்களும், எடுத்தனர்.

    இறுதியில் முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி குல்படின் நைப்-ன் அதிரடி அரை சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - ஜெய்வால் களமிறங்கினர். ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் முதல் போட்டியிலும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய துபே ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். அதிரடியாக விளையாடி 2 பேரும் அரை சதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 68 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில் இந்திய அணி 15.4 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 63 ரன்னிலும் ரிங்கு சிங் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    • கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார்.
    • நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2-போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோரும், பந்துவீச்சில் அக்ஷர் படேல், அர்ஷ்தீப்சிங் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் இந்த போட்டியில் ரன்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜிதேஷ் சர்மா இடத்தில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ், ஆவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். முகேஷ்குமார், பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.

    இப்ராகிம் சர்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும 7 முறை மோதிய போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ்-18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் டி20 போட்டி பெங்களூருவின் நாளை நடக்கிறது.
    • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகிறது. இதில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். அவர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஆகியோருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக விலகி உள்ளார். ஆனாலும் அவர் அடிக்கடி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் மைதானத்திற்கு வந்து சக வீரர்களுடன் பேசி மகிழ்வார். அந்த வகையில் இப்போது இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார். 

    ×