search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் வாகனங்கள்"

    • லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.
    • சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன

    சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார [எலெக்ட்ரிக்] வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலக சந்தையில் தங்களை நிலைநிறுத்தி லாபம் பெறுவதற்காகச் சீனா நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றம் சாட்டினார்.

     

    இதுதவிர்த்து சீனாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக சீன மின்சார வாகனங்களுக்கு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிக வரி விதித்திருந்தன. தற்போது கனடாவில் இறக்குமதி ஆகும் சீன எலக்ட்ரிக் வாகனங்கள் ஷாங்காயில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து மட்டுமே அதிகம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.
    • பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

    உலகம் முழுக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவிலும், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்குவதற்கான பணிகளில் மும்முரம் காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கடந்த வாரம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,

    மின்சார வாகனங்களை நோக்கிய மாற்றத்தை வலியுறுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை ஒழிக்கும் அரசின் திட்டத்தை அறிவித்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் போக்குவரத்துக்கான நீர் மின்சாரத்தின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த அவர், பிஜிலி மகாதேவ் ரோப்வே திட்டம் குறித்தும், அதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

    இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

    • அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முயற்சி.
    • உற்பத்தி மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரிப்பு.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஐ.சி. என்ஜின் மாடல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

    எலெக்ட்ரிக் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் எதிர்காலத்தில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டி.வி.எஸ். நிறுவனம் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டிலேயே டி.வி.எஸ். நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    ×