என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை புறநகர் ரெயில்"

    • தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அரசு விடுமுறையாகும்.
    • அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகர் ரெயில் சேவை இயக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையன்று (மார்ச் 31ஆம் தேதி) புறநகர் ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாகும்.

    • பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக தண்டவாளங்கள் வெள்ளம் தேக்கம்.
    • 8 மணிக்குப் பிறகு சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்க பரிசீலனை.

    மிச்சாங் புயல் சென்னையை நெருங்குவதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் மெதுவாக ஊர்ந்து சுமார் 6 மணிக்குத்தான் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. தண்டவாளங்களில் வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருந்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக மெதுவாக இயக்கப்பட்டது. காற்று மற்றும் மழையின் வேகம் அதிகமாக இருப்பதால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என அனைத்து மின்சார ரெயில்களும் காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மழை மற்றும் சேத விவரங்களை பொறுத்து ரெயில்கள் இயக்குவது குறித்த பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் அனைத்து வழித்தடத்திலும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி பகுதிகளில் பிரதான ரெயில்பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக கோவை, பெங்களூர் செல்லக்கூடிய 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் மழை வெள்ளம் தேக்கம்.
    • சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

    15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதில் 2 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. திருமங்கலம் எஸ்டேட் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

    • புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
    • ஆவடியில் அதிகபட்சமாக 28 செ.மீ. கொட்டித்தீர்த்துள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    புழல் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 5,777 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:

    ஆவடி - 28 செ.மீ.

    சோழவரம் - 20 செ.மீ

    பொன்னேரி -19 செ.மீ

    செங்குன்றம் - 17 செ.மீ

    தாமரைப்பக்கம் - 17 செ.மீ

    கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ

    ஊத்துக்கோட்டை - 15 செ.மீ

    திருவள்ளூர் - 15 செ.மீ

    பூந்தமல்லி - 14 செ.மீ

    ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ

    திருத்தணி - 12 செ.மீ

    பூண்டி - 12 செ.மீ

    திருவாலங்காடு - 10 செ.மீ

    பள்ளிப்பட்டு - 6 செ.மீ

    ஆர்கே பேட்டை - 4 செ.மீ

    • சென்னை ஐசிஎஃப் 8 ரெயில்களை தயாரித்து வருகிறது.
    • இதில் இரண்டு சென்னை- செங்கல்பட்டு வழித்தடத்திற்காக சென்னை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் முக்கிய நகரங்களின் தலைநகரில் புறநகர் ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் புறநகரில் இருந்து வேலை பார்க்க வருபவர்கள் இந்த ரெயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    வேலைக்கு செல்லும் நேரம், வேலை முடிந்து புறப்படும் நேரத்தில் (PeaK Hours) முண்டியடித்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் புறநகர் ரெயிலில் பயணம் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது.

    இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் ஏ.சி. ரெயில்களை விட முன்வந்தது. மும்பையில் ஏற்கனவே புறநகர் ரெயில்களில் ஏ.சி. வசதி உள்ளது.

    சென்னையில் சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. ரெயில்கள் இயக்க தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டது. இதற்கான பிரத்யேக ரெயிலை சென்னை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. மொத்தம் 8 ரெயில்கள் தயாரித்து வருவதாகவும், அதில் இரண்டு சென்னை புறநகர் சேவைக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ரெயில்வேத்துறை இரண்டு ரெயில்களை தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு புறநகர் வழித்தடத்தில் பயணிப்போர் ஏ.சி. பெட்டியில் பயணிக்கலாம். இதனால் வியர்வையின்றி, சோர்வின்றி வேலைக்கு செல்லலாம். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லலாம். இதில் பயணிப்பதற்கான கட்டணம் தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி இயங்கும்.
    • சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்.

    கிறிஸ்துமஸ் பண்டியை நாளை மறுதினம் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறையாகும்.

    இதனையொட்டி புதன்கிழமை சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி/சூளுர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரெயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    அதேபோல் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ஞாயிறு போன்று ஒரு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் ரெயில் சேவை நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது.

    இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், சூளுர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. 

    • கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை புறநகர் ரெயில் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நாளையும் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில்கள் ரத்து செய்யப்படுவதை அடுத்து சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் கணிசமான அளவில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 9.55, 11.25, மதியம் 12.00, 1.00, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ர ரெயில் நிலையம் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து நாளை காலை 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    • சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும்.
    • பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் சார்பில் 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

    சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், நாளை காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    இதுகுறித்த்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.

    மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×