என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதவிடாய் விடுப்பு"

    • மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு பீகார்.
    • கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு.

    இந்தியாவில் பீகார் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புகள் அறிவிக்கப்பட்டது. பீகார் அரசின் இந்த அறிவிப்பு அன்றைய காலத்தில் பெரும்புரட்சியாக பார்க்கப்பட்டது. மேலும் இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமையையும் பீகார் பெற்றது.

    அதேபோல் ஜன 19, 2023 கேரள அரசு, உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுப்பு அறிவிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றது.

     


    இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்புகளை வழங்குவதற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது,

    'இன்றைய நிலையில் பெண்கள் அதிகளவிலான பொருளாதார வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். இந்த விஷயத்தில் நான் எனது தனிப்பட்ட கருத்தை மட்டும் பதிவு செய்கிறேன். மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு அல்ல, அது ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தின் இயல்பான பகுதியாகும்.'

    'மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது தேவையற்றது'என்று அவர் கூறினார்.

    மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைக்கு ஒரு பெண் மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும்.
    • மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.

    மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். "மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும். அதை நாங்கள் விரும்பவில்லை. பெண்களைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இது அவர்களுக்குப் பாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மேலும் "மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடுங்கள்" என்று கூறி வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் முடித்து வைத்தார். 

    • மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
    • ஏற்கனவே கேரளா மற்றும் பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது என கூறினார்.

    அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளது.

    • பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.
    • வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன.

    மாதவிடாய் காலமம் சங்கடமான நேரமாக இருக்கலாம். மாதவிடாய் பல விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும், மேலும் மாதவிடாய் கால வலி என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். அது பெண்களின் அன்றாட நடைமுறைகளை சீர்குலைக்கும்.


    மாதவிடாய் வலியை குறைக்க மருந்துகள் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் போன்றவை உதவுகின்றன. மாதவிடாய் காலங்களில் நாம் உண்ணும் உணவுகள் மூலமாக கூட வலியை நீக்க முடியும். மாதவிடாய் காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.


    பழங்கள்

    பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மாதவிடாய் வலியை நீக்க உதவுகின்றன அவை:

    * பெர்ரி

    * வாழைப்பழங்கள்

    * தர்பூசணிகள்

    * பப்பாளிகள்

    * ஆப்பிள்கள்

    * அத்திப்பழம்

    * ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்


    காய்கறிகள்

    வீக்கத்தை நிர்வகிக்க காய்கறிகள் சிறந்தவை. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக திகழ்கிறது. மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சில காய்கறிகள்:

    * ப்ரோக்கோலி

    * சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    * காலிஃபிளவர்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மாதவிடாய் வலியை நேரடியாகத் தடுக்காது என்றாலும், அவை மாதவிடாயின் போது ஏற்படும் செரிமான அறிகுறிகளில் இருந்து வலியைப் போக்க உதவும்.

    * முழு தானியங்கள்

    * பீன்ஸ்

    * நட்ஸ்

    * விதைகள்

    கொழுப்பு மீன்

    கொழுப்பு நிறைந்த மீன் உடலில் வீக்கத்தைக் குறைத்து மாதவிடாய் அறிகுறிகளை மேம்படுத்தும். இதற்கு அதன் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.

    * சால்மன் மீன்

    * சூரை மீன்

    * மத்தி மீன்கள்

    * கானாங்கெளுத்தி

    • 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
    • மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

    எல்&டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் சமீபத்தில் 90 மணி நேரம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சுப்ரமணியன் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொறியில் துறையில் பிரபலமான எல்&டி நிறுவனத்தின் சார்பில் மும்பையில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. 350 பெண் ஊழியர்கள் பங்கேற்ற கொண்டாட்ட விழாவில் எல்&டி நிறுவன தலைவர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.



    இருப்பினும், இந்த அறிவிப்பானது நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் பிரிவுகளைத் தவிர்த்து, நிறுவனத்தின் முக்கிய பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.

    மேலும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான விவரங்கள் மற்றும் அதன் தொடக்க தேதி, உட்பட எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், எல்&டி-யின் இந்த நடவடிக்கை இந்திய நிறுவனங்களிடையே வளர்ந்து வரும் போக்குடன் ஒத்துப்போகிறது.

    ஜொமாடோ, ஸ்விக்கி மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி போன்ற நிறுவனங்களும், பீகார், கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களும் ஏற்கனவே பெண்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்க இதே போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

    மாதவிடாய் விடுப்பு குறித்து இந்தியாவில் தற்போது தேசிய சட்டம் இல்லை என்றாலும், இந்த விஷயத்தில் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×