search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது பெண்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்- உச்ச நீதிமன்றம்
    X

    மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது பெண்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்- உச்ச நீதிமன்றம்

    • மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும்.
    • மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.

    மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். "மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும். அதை நாங்கள் விரும்பவில்லை. பெண்களைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இது அவர்களுக்குப் பாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    மேலும் "மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடுங்கள்" என்று கூறி வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் முடித்து வைத்தார்.

    Next Story
    ×