search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹவுதி"

    • சரக்குகளை கையாளும் முக்கிய போக்குவரத்து பாதையாக செங்கடல் உள்ளது.
    • 10 லட்சம் பேரல்களுடன் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் கப்பல்களை ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கடந்த 21-ந்தேதி சௌனியான் என்ற சரக்கு கப்பல் மீது சிறிய வகை ஆயுதம் மற்றும் டிரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் லேசான காயம் அடைந்தது.

    இதற்கிடையே கப்பலில் இருந்த ஊழியர்களை பிரான்ஸ் படைகள் காப்பாற்றியது. இதனால் கப்பல் கைவிடப்பட்டது. செங்கடலில் தனியாக நின்ற கப்பலில் ஹமாஸ் அமைப்பினர் இறங்கு துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தினர். மேலும் கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கும் டேங்கர்களை குண்டு வைத்து தாக்கினர். சுமார் ஆறு இடங்களில் குண்டு வைத்து தகர்த்தனர். இது தொடர்பான வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

    அந்த கப்பலில் ஒரு மில்லியன் (10 லட்சம்) கச்சா எண்ணெய் பேரல்கள் இருக்கிறது. இந்த எண்ணெய் உடன் கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கடலில் கச்சா எண்ணெய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    செங்கடல் வழியாக ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. முக்கியமாக ஐரோப்பிய உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்வதற்கு இந்த வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
    • சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஏமன்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.

    மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ஒரு கப்பலை சிறைப்பிடித்த நிலையில், ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டியில் செயல்பட்டு வரும் ஹவுதி குழு செயல்பட்டு வருகிறது.

    இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹவுதி குழுவினருக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி தனது தாக்குலை தொடர்கிறது.

    அப்படித்தான் கீரிஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.

    இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது. கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. மற்றொரு கப்பலை மூழ்கடித்தது.

    நேற்று ஏமன் மீது பறந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க விமானப்படை டிரோன் ஏதும் மாயமாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துகிறது ஹவுதி.
    • ஹவுதி தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து முறியடித்து வருகின்றன.

    செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்குகிறது.

    இதனை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செங்கடலில் ஹவுதி கிளர்ச்சி குழு தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஒரு டிரோன் செங்கடலில் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றொரு டிரோன் தாக்குதலுக்கு புறப்பட தயாராக இருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்கா, "எங்களுடைய படைகளை பாதுகாக்கவும், கடற்பயணம் சுதந்திரமாக மேற்கொள்ளவும், சர்வதேச கடற்பகுதி பாதுகாப்பானது என்பதை உருவாக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அதிகபட்ச பாதுகாப்பிற்காகவும் தேவையான நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளது.

    ஏமனின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருக்கின்றன. மேலும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன.

    • 1990களில் ஏமனில் உருவானது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு
    • எந்த வணிக கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை என அமெரிக்க அறிவித்தது

    கடந்த அக்டோபர் 7 அன்று, தெற்கு இஸ்ரேல் பகுதியில், வான்வழியாகவும், தரை வழியாகவும் நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்களை கொன்றனர்; பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இந்த பயங்கரவாத செயலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய ராணுவப் படை (Israeli Defence Forces) வேட்டையாடி வருகிறது. மேலும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களை, ராணுவம் தேடி வருகிறது.

    இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.

    ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், லெபனான், கத்தார் போன்ற அரபு நாடுகள் ஆதரவளிக்கின்றன.

    இந்நிலையில், 1990களில் ஏமன் பகுதியில் உருவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, கடந்த நவம்பர் மாதம் முதல் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, செங்கடல் (Red Sea) பகுதியில், இஸ்ரேலுடன் வர்த்தக போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வணிக கப்பல்களை குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

    ஹவுதிகளுக்கு பதிலடி தரும் விதமாகவும், வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 20 மேற்கத்திய நாடுகளின் கப்பல் படை, செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செங்கடல் பகுதியில், "புரொபெல் ஃபார்ச்சூன்" (Propel Fortune) எனும் கப்பலை தாக்க வந்த ஹவுதி அமைப்பினரின் 28 டிரோன்களை, அமெரிக்க கூட்டுப்படை சுட்டு வீழ்த்தியது.

    இந்த நடவடிக்கையில் வணிக கப்பல்களுக்கோ அல்லது அமெரிக்க கூட்டுப்படையின் கப்பல்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ஹவுதிக்களின் தாக்குதல்களினால், செங்கடல் பகுதி வழியாக பயணித்த பெரும்பாலான வணிக கப்பல்கள் தென் ஆப்பிரிக்கா வழியாக சுற்றிச் செல்கின்றன.

    ஹவுதிக்கள் இயங்கும் பகுதிகளை குறி வைத்து அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப்படை தாக்குதல் நடத்தி தாக்கி வருகின்றது. ஆனாலும், ஈரானின் மறைமுக உதவியுடன் ஹவுதி அமைப்பினர் செங்கடல் பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் சரக்கு கப்பல்கள் குறிவைக்கப்படும்- ஹவுதி
    • அமெரிக்கா- இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதிக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளில் சரக்கு கப்பல்களை செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் ஈரான் ஆதரவுடன் ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    சரக்கு கப்பலை நோக்கி அடிக்கடி ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் கூட்டாக பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் லைபீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பார்படோஸ் கொடியுடன் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    இதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கப்பலை அங்கேயே விட்டுவிட்டு பணியாளர்கள் வெளியேறிவிட்டனர்.

    மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் சம்பவம், அதேவேளையில் சர்வதேச கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் என ஏமனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ஐந்து ஏவுகணைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதோடு சேர்த்து இரண்டு ஏவுகணைகள் சரக்கு கப்பல்களை தாக்கியுள்ளன. மூன்றில் ஒரு ஏவகணையை அமெரிக்க கப்பல் தாக்கி அழித்துள்ளது.

    • கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
    • முதன்முறையாக ஊழியர்கள் கப்பலை விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியார்கள் செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் நேற்று செங்கடலில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளனர். இதனால் கப்பலில் இருந்து ஊழியர்கள் வெளியேறிய நிலையில், அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய அமெரிக்கா நாடான  பெலீஸ் நாட்டின் கொடியுடன் ரூபிமார் கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிய வகை வணிக கப்பலான ரூபிமாரில் இருந்த பணியாளர்கள் உடனடியான பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பலை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கப்பலில் இருந்து பணியாளர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள உரிமையாளரால் பதிவு ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஹவுதி செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அடையாளம் தெரியாக இங்கிலாந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கப்பல் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த அகமது அவாத் பின் முபாரக் புதிய பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சவுதி அரேபியாவுடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏமனின் ஆட்சிக்குழு பிரதமரை மாற்றியுள்ளது. ஆனால், நீக்கத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.

    ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுவான ஹவுதி, செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிரதமர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அகமது அவாத் பின் முபாரக்

    ஏமன் கடந்த 2014-ல் இருந்து உள்நாட்டு சண்டையில் சிக்கி தவித்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் உள்ளிட்ட இடங்களை பிடித்து. பின்னர் 2015-ல் சவுதி அரேபியா தலைமையிலான குழு ஏமன் நாட்டின் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த சண்டையில் இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதி தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைந்துள்ளன.

    ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்த போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

    இதனால கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றாக இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

    அமெரிக்க போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள், டிரோன்கள், லாஞ்சர்கள் போன்வற்றை சேமித்து வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு உளவு மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, நெதர்லாந்து நாடுகள் பங்களிப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் செங்கடலில் பதற்றம் தணிய வேண்டும். நிலைத்தன்மை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் உலகின் முக்கிய கடல் போக்குவரத்து வழியான செங்கடலில் எளிதான வணிக போக்குவரத்து நடைபெறுவதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஹவுதிக்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளது.

    • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.
    • தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையே ஹவுதி இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுதி தாக்குதல் நடத்தியது.

    இந்தநிலையில் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனை ஏவுகணை, குண்டுகள் வீசப்பட்டன போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தாக்குதலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹமாஸ் அமைப்புக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது.
    • செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

    சனா:

    இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

    இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

    அதேவேளை, காசா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.
    • இந்தியா வரும் கப்பல்களுக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிப்பு.

    இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் 7-ந்தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் புகுந்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பிலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த போரில் மேற்கத்திய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் வெவ்வேறு சார்பு நிலைகளை எடுத்துள்ளதால் போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பின்னணியில் ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

    கடந்த நவம்பர் 19-ந்தேதிக்கு பிறகு 20-க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். செங்கடல் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கத் தொடங்கி இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தொடர்ந்து தாக்குகிறார்கள். இதுவரை 60-க்கும் மேற்பட்ட டிரோன்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் வழிமறித்து அழித்துள்ளன.

    கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் நீடிப்பதால் இந்தியாவுக்கு செங்கடல் வழியாக வரும் பெட்ரோலிய பொருட்கள் வருகையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்திய கடற்படை போர் கப்பல்கள் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல், செங்கடல் பகுதிகளுக்கு அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன. 10 முக்கிய போர் கப்பல்கள் அந்த கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றன.

    இந்த போர் கப்பல்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி இந்திய கப்பல்கள் சிரமமின்றி வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ×