என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமானுவேல் மேக்ரான்"

    • இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டரை மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் வடக்கு காசா சீர்குலைந்துள்ளது. பழைய நிலைக்கு வர அது நீண்ட காலம் எடுக்கும். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்காக உடனடியான போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில எப்படியாவது போர் நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றிட முயற்சி செய்து வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் காசாவை அழிக்க நினைக்கிறது. ஒரு இனத்திற்கு எதிராக இனப்படுகொலை செய்கிறது என போர்க்கொடி எழுந்துள்ளது.

    ஆனால், காசாவில் இருந்து இனிமேல் இஸ்ரேல் மண்ணுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஆயுத உதவி செய்து வரும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுறித்து இமானுவேல் மேக்ரான் கூறுகையில் "பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதை, காசாவை தரைமட்டமாக்குவது என பொருள் கொள்ளக்கூடாது" என்றார்.

    அதேவேளையில் "இஸ்ரேல் இந்த பதிலடி தாக்குதலை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தாக்குதல் பொருத்தமானது அல்ல. அனைத்து உயிர்களும் ஒரே மதிப்பிலானவை. அவர்களை நாங்கள் பாதுகாக்கிறோம். தன்னை பாதுகாத்து கொள்வதும், பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதும் இஸ்ரேலுடைய உரிமை. பொதுமக்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் வழிவக்கும்" என்றார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    • கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார்.
    • பிரான்ஸின் ராணுவ அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

    குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். மேலும், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.

    இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2020-ல் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019-ல் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013-ல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்திய பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.

    • குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
    • கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அல் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். நாட்டின் கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.

    இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம்.

    இதற்கிடையே, குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என எல்சி பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அல் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம்
    • நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தியும், பாவெல் துரோவின் கைதை கண்டித்தும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

     

    பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்டவையும் சிலரால் தவறாக பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ஆனால் அதற்காக மார்க் ஸுகேர்பேர்கையோ எலான் மஸ்க்கையோ யாரும் கைது செய்யப் போவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ரஷியர் என்ற காரணத்தால் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.

     

    இந்நிலையில் பாவெல் துரோவின் கைது அரசியல் ரீதியிலானது அல்ல என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'பாவெல் துரோவின் கைது குறித்த தவறான தகவல்கள் இணையத்தில் பரவுவதை நான் கவனித்தேன், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி நீதித்துறையின் கையில் தற்போது உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தான் முடிவெடுக்க முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது.
    • இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும்.

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்டார்.

    செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் கிடத்தட்ட 20 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    இந்நிலையில் இந்தியாவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட டெலிகிராம் செயலி தடையை எதிர்கொள்ளக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்ட விசாரணையை மத்திய அரசு தொடங்கிய நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் டெலிகிராம் ஈடுபடுவதை அமைச்சகங்கள் குறிப்பாக கவனித்து வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார். இதுவரை, டெலிகிராம் விசாரணை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

    • ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
    • இவை என்னை சிரிக்க செய்தன.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.

    இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.

    • அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.
    • அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பாரிஸ்-இல் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க சென்றிருக்கும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார். இதன்பிறகு நடந்த இரவு விருந்தில் பிரான்ஸ்-இல் உள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.

    பிரான்ஸ்-இல் அதிபர் மேக்ரானை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ""எனது நண்பர் அதிபர் மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி பாரிசில் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் உரையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளது.

    இரு நாடுகள் சுற்றுப் பயணமாக முதலில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்துபேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    பாரிசில் AI உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். பிறகு வணிகத் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

    • ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது.
    • எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் வளர்ச்சி பாதை வழங்கும் எண்ணற்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    பாரிஸ்-இல் நடைபெற்ற 14-வது இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன். ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு சிறந்த உதாரணம் ஏவியேஷன் துறையில் தெளிவாக காணப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ளன. மேலும், நாங்கள் தற்போது 120 புதிய விமான நிலையங்களை திறக்க இருக்கிறோம். இதை வைத்து எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்."

    "இந்தியாவின் வேகமும் பிரான்சின் துல்லியமும் இணையும் போது; பிரான்சின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணையும் போது... வணிக நிலப்பரப்பு மட்டுமல்ல, உலகளாவிய மாற்றமும் ஏற்படும். இந்தியாவும் பிரான்சும் ஜனநாயக முறையில் மட்டுமே இணைக்கப்படவில்லை. நமது நட்பின் அடித்தளம் ஆழ்ந்த நம்பிக்கை, புதுமை மற்றும் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது. நமது கூட்டாண்மை இரண்டு நாடுகளுக்கு மட்டும் குறுகி இருக்கவில்லை," என்று கூறினார்.

    • இந்தோ-பசிபிக், ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல சிக்கலான விசயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.
    • பாதுகாப்பு, அணு எரிசக்தி, விண்வெளித்துறையில் இருநாட்டின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.

    இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக, பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.

    பிரான்சில் நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மார்செய்ல்ஸில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணை தூதரகத்தை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் இணைந்து திறந்து வைத்தனர். பின்னர் மஸார்குஸில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடியும், இமானுவேல் மேக்ரானும் மரியாதை செலுத்தினர்.

    அதன்பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் இந்திய பிரதமர் மோடி இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மூலோபாய கூட்டாண்மை, உலகளாவிய விவகாரம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும பாராட்டு தெரிவித்தனர். மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டனர்.

    பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்புக்குப் பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "இந்தோ-பசிபிக், ரஷியா- உக்ரைன் போர் உள்ளிட்ட பல சிக்கலான விசயங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.

    பாதுகாப்பு, அணு எரிசக்தி, விண்வெளித்துறை ஆகியவற்றில் இருநாட்டின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் இணைந்து செயல்படுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

    இந்த பேச்சுவார்த்தை இந்தியா- பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் இது தொடர்பாக 14-வது இந்தியா- பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தின் அறிக்கையை வரவேற்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×