search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் தூதரகம்"

    • தேவையில்லாமல் நகரத்தை விட்டு வெளியிடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.

    ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான் அரசு, அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

    மறுபுறம், ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், கடந்த வியாழன் அன்று தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் நகரின் டெல் அவிவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த பதற்றமான சூழலில் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெல் அவிவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும். தேவையில்லாமல் நகரத்தை விட்டு மற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். இந்தியத் தூதரகம் நிலவரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். இதுவரை தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளாத இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம். 24x7 உதவி எண்கள் 

    +972-547520711

    +972-543278392

    • தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
    • நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.

    தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.

    இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.

    • இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு பணியில் இருந்து வீரர் மீது தாக்குதல்.
    • தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மர்ம நபர் உயிரிழப்பு.

    செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அதிகாரியின் கழுத்தில் இரும்பு போல்ட் (Bolt) ஆல் பயங்கரமாக தாக்கினார்.

    இதனால் அந்த அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். கழுத்தில் காயம் அடைந்த அதிகாரி, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான மர்ம நபரை துபாக்கியால் சுட்டார். இதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதற்கிடையே காயம் அடைந்த அதிகாரி மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆபரேசன் செய்து போல்ட் நீக்கப்பட்டது.

    தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் கானும் பணி நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்துவதற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் செர்பியா உள்துறை மந்திரி இவிகா டேசிக் தெரிவித்துள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவை செர்பில் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்.
    • படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் (வயது 25) காசா மீதான போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும், இனப்படுகொலைக்கு துணைபோகமாட்டேன் என்று கோஷம் எழுப்பியபடி அவர் திடீரென்று தீக்குளித்தார்.

    அதை சமூகவலைதளத்தில் அரோன் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்தார். படுகாயமடைந்த அரோன் புஷ்னெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விமானப்படை வீரர் அரோன் புஷ்னெல் உயிரிழந்தார்.

    • அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
    • இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.

    காசாவில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது. தொடர்ந்து காசாவில் குண்டுகளை வீசி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் அவர் மீது பற்றிய தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர் எதற்காக இந்த முடிவை மேற்கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் தீக்குளிப்பதற்கு முன்பு பேசியது இடம் பெற்றுள்ளது. அவர் இனிமேலும் நான் இனப்படு கொலைக்கு (காசாவில்)உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபட உள்ளேன் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரம் அருகே பயங்கர சத்தம் கேட்டதாக தூதரக அதிகாரி தகவல்.
    • டெல்லி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, கடிதம் ஒன்றை கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக, தூதரக அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக மோப்ப நாய்களுடன் டெல்லி போலீசார், வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காலியான நிலத்தில் கொடியுடன் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலின் துணை தூதர் ஒஹாத் நகாஷ் கெய்னர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் "5 மணிக்குப் பிறகு சில நிமிடங்களில் தூதரகத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது. தூதரக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்களுடைய பாதுகாப்பு குழு டெல்லி போலீசாருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது" எனத் தெரித்துள்ளார்.

    இதற்கிடையே பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என இந்தியா செல்ல இருக்கும இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், இந்தியாவில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், மார்க்கெட்கள் போன்ற இடங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ரெஸ்டாரன்ட், ஓட்டல், பப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்ரேல் நாட்டினர் என அடையாளப்படுத்தும் போன்ற அடையாளங்களை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சகம் "இஸ்ரேல் பாதுகாப்பு குழுவுடன் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 140 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ×