search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு தரிசனம்"

    • அக்டோபர் 3 முதல் 12-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.

    பிரம்மோற்சவத்தின் போது சாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3-ந்தேதி (அங்குரார் ப்பணம் ) முதல் 12-ந் தேதி (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) வரை தினமும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வி.ஐ.பி. தரிசனம் அதிகாரி பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவிழா நாளை முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம்.

    சென்னை:

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, மற்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் நடைபெறும் திருப்படி திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை (27-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கடந்த 23-ந்தேதி அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய 2 திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200-யை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட கோவில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணம் ரூ. 200-ஐ குறைத்து ரூ.100 ஆக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • தினமும் வழங்கப்படும் உணவு, மோர், டீ, காபி, பால் ஆகியவற்றின் தரம் மற்றும் ருசியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

    மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.

    கடந்த சில மாதங்களாக நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஸ்கேன் செய்வது நிறுத்தப்பட்டன.

    இதனால் சில பக்தர்கள் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு நடந்து செல்லாமல் முறைகேடாக வாகனங்களில் சென்று தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் செய்தனர். திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலராக புதியதாக பதவி ஏற்ற சியாமளா ராவ் நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் வசதியை மீண்டும் நடைமுறை படுத்த உத்தரவிட்டார்.

    நேற்று முதல் நடைபாதையில் வரும் பக்தர்களின் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்ததால் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தினமும் வழங்கப்படும் உணவு, மோர், டீ, காபி, பால் ஆகியவற்றின் தரம் மற்றும் ருசியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உணவின் தரம், ருசி அதிகரிக்க உணவு ஆலோசனை நிபுணர் ஒருவரை பணியமர்த்த முடிவு செய்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து தற்போது வழங்கப்படும் உணவை விட ருசியான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்.
    • பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது.

    இதை முன்னிட்டு அதி காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தை திருநாளை கொண்டாடும் வகையில் அதற்கு முன்பாக கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து வந்தும் அலங்கார செய்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

    தற்போது பருவ மழை பெய்து ஒய்ந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்தவாறு உள்ளனர்.

    ×