என் மலர்
நீங்கள் தேடியது "பைரன் சிங்"
- சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
- இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்
மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது. கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
- முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் லிலாங் சிங்காவ் பகுதிக்குள் காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி நடத்திய திடீர் துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தௌபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் மூன்று நான்கு-சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.
- மிக முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம்.
- அரசு விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது.
மாநில மக்களின் நலன் கருதி மத்திய அரசு விரைவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த பிறகு, முதலமைச்சர் பைரன் சிங் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பின் போது, மாநிலம் தொடர்பாக மிக முக்கிய விஷயங்களை பற்றி விவாதித்தோம். மணிப்பூர் மக்கள் நலன் கருதி மத்திய அரசு விரைவில் மிக முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இது தொடர்பான தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்றும் இந்த மோதல் நிலை முடிவுக்கு வராத நிலையில், அவ்வப்போது அம்மாநிலத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.
இதனிடையே கலவரம் ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நான்கு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். எனினும், அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தான் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் உள்துறை மந்திரி இடையேயான சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.
- பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின.
- கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.
மத்திய அரசு தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்த நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தன்னை பேச விடவில்லை எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மோடியை தனியாகச் சந்தித்து மாநிலத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்துப் பேசாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்த்தேய் குக்கி இனக்குழுக்களுக்கிடையில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கலவரம் வெடித்தது.

கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது, பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின. இந்த கலவரத்தில் சுமார் 221 பேர் உயிரிழந்துள்ளனர் 60,000 பேர் தங்களின் வீடுகளை இழந்து ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
ஒரு வருடம் ஆகியும் மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த கலவரங்கள் குறித்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மவுனம் காத்து வந்ததது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மோடியின் மணிப்பூர் மவுனம் பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் மோடி இன்னும் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்காதது விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.
அதுவும் நிதி நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும்,, பாஜக முதல்வர்கள் கூட்டத்திலுமே பைரன் சிங் பங்கேற்றுள்ளார். மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவில்லை. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ், நமது பயலாஜிக்கலாக பிறக்காத பிரதமர் பங்கேற்ற நிதி ஆயோக்கிலும், அதே கடவுளின் முன் நடந்த பாஜக முதல்வர்கள் கூட்டத்திலும் பைரன் சிங் பங்கேற்றார்.
எங்களது கேள்வியெல்லாம், மே 3 2023 இரவு முதல் எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் குறித்து மோடியை தனியாகச் சந்தித்துப் பேசி, அங்கு வந்து பார்வையிடுமாறு ஏன் பைரன் சிங் அழைக்கவில்லை. சமீபத்தில் ரஷியா செல்வதற்கு முன்னால்தான் வரவில்லை. தற்போது உக்ரைன் செல்வதற்கு முன்னாலாவது மணிப்பூரை வந்து பாருங்கள் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளது.

- 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதை விமர்சித்தார்.
- இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் நாடு முழுவதும் மணிப்பூர் கலவரம் அதிர்வலையை ஏற்படுத்தியதை போல தற்போதைய மணிப்பூர் சூழல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மணிப்பூர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
தனது பதிவில், மணிப்பூர் சூழலுக்கு முதல்-மந்திரி பைரோன் சிங் திறமையின்மைதான் காரணம் என்றும் தற்போது 5000 துணை ராணுவத்தினர் அனுப்பப்பட்டதையும் விமர்சித்து இருந்தார்.
இதற்கு மணிப்பூர் முதல்-மந்திரி பைரோன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு ப.சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகளே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தார். அப்போது மணிப்பூரில் இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப.சிதம்பரம் மியான்மரை சேர்ந்த வெளிநாட்டவரான தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜோமி மறு ஒருங்கிணைப்பு ஆர்மி என்ற இயக்கத்தின் தலைவர் ஆவார்.
தற்போது மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்ட விரோதமாக மியான்மரில் இருந்து குடியேற்றங்கள் நடந்ததுதான். இதற்கு காரணமாக இருந்தது ப.சிதம்பரம்தான். அவர் தடை செய்யப்பட்ட அந்த இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று மணிப்பூர் முதல்வர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரியான ஒக்ராம் இபோபி சிங்கும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கார்கேவிடமும் புகார் கூறினார். இதையடுத்து கார்கேவும் தலையிட்டார். எனவே ப.சிதம்பரம் தனது பதிவை நீக்கினார்.
- குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
- பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.
மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்ற குரலை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மணிப்பூரின் வன்முறைக்கு முழு பொறுப்பேற்று பைரன் சிங் தலையாயினாலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

மிசோரம் முதல்வர் லால்துஹோமா
இதற்கு மத்தியில் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று மிசோரமில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது. MNF பொதுச் செயலாளர் VL Krosehnehzova, மாநில அரசாங்கத்தின் தோல்வியால் தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் இதை கூறி சில மணிநேரங்களுக்குப் பிறகே MNF கட்சியை தேச விரோத கட்சியாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரின் உள் விவகாரங்களில் MNF தொடர்ந்து தலையிடுவதை ஏற்கமுடியாது.தேச விரோத மியான்மர் அகதிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் செய்வது மற்றும் மணிப்பூருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது MNF.

சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக அண்டை நாடான மியான்மர் அருகே இந்திய எல்லைகளை வேலி அமைக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் MNF தேச விரோதக் கட்சியாக அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்று மணிப்பூர் அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
- அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் குண்டுகளை வீசினர்
மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் கிராமத்தில் குண்டு வீசி தாக்குதல்
இந்த ஆண்டு [2024] முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த வருடம் மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன் என்று பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி - மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரம் 250 பேர் வரை காவு வாங்கியது. இன்னும் கலவரம் ஓயாத சூழலில் கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில் நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் முகாந்திரமாக பாஜகவின் பைரன் சிங் மன்னிப்பு கேட்டு வாயை மூடும் முன் இன்று மீண்டும் கிளர்ச்சியாளர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தின் கடங்பண்ட் பகுதியில் இன்று [புதன்கிழமை] அதிகாலையில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கும் நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிளர்ச்சியாளர்கள், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தாழ்வான கடங்பண்ட் பகுதியில் உள்ள கிராமத்தின் மீது அதிகாலை 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களால் பல ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் குண்டுகளை வீசியும் தாக்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது .
நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். கிராமத்தினருடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 2023 மே மாதம் மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து கடங்பண்ட் பகுதி கிளர்ச்சியாளர்களால் அதிக தாக்குதலை சந்தித்துள்ளது.
- விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
- சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 இல் குக்கி மெய்தேய் இங்குளுக்குக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வயலயை ஏற்படுத்தியது.
பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
- மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மணிப்பூரில் முதல்வர் பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 இல் குக்கி மெய்தேய் இங்குளுக்குக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
- மாநிலத்தில் நடந்த கலவரத்தில் முதல் மந்திரிக்கு தொடர்புள்ளதாக சர்ச்சை எழுந்தது.
- இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:
மணிப்பூரில் முதல் மந்திரி பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பா.ஜ.க. முதல் மந்திரி பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இதற்கிடையே, மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை மற்றும் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றால் முதல் மந்திரி பைரன் சிங்கின் ராஜினாமா செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.