என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்னி டெஸ்ட்"

    • பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட் ஆனார்கள்.
    • 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியதுடன் தொடரில் 2-0 முன்னிலை விக்கிறது.

    பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக், சாய்ம் ஆயுப் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

    ஐந்து விக்கெட் வீழ்த்தி கம்மின்ஸ்

    ஷான் மசூத் 35 ரன்னிலும், பாபர் அசாம் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. சிறப்பாக ஆடிவந்த முகமது ரிஸ்வான் 88 ரன்னில் அவுட் ஆனார். ஆகா சல்மான் 53 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு ஆமிர் ஜமால் உடன் மிர் ஹம்சா ஜோடி சேர்ந்தார். மளமளவென விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசி விக்கெட்டை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தானை 250 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தனர்.

    ஆனால், ஹம்சா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஜமால் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்தையும், லயனின் சுழற்பந்தையும் இந்த ஜோடி திறமையாக எதிர்கொண்டது. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் 250, 275, 300 என உயர்ந்து கொண்டே சென்றது. அதேவேளையில் ஜமால் அரைசதத்தை கடந்தார்.

    என்னடா... கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லையே... என ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர்.

     

    அரைசதம் அடித்த ஜமால்

    ஜமால் சதம் அடிப்பார்... பாகிஸ்தான் 325 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். ஜமால் 82 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 77.1 ஓவரில் 313 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.

    ஜமால்- ஹம்சா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • போதிய வெளிச்சம் இல்லாததால் (Bad Light) ஆட்டம் நிறுத்தப்பட்டது.
    • 46 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இன்றைய ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா 1 ஓவரில் 6 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டேவிட் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கவாஜா உடன் லபுசேன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 47 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.



     


    ஆஸ்திரேலியாவில் தற்போது கோடைக்காலம். இருந்தபோதிலும் திடீரென கருமேகம் சூழ்ந்ததால் போட்டி தொடர்ந்து நடைபெறவில்லை. இன்றைய ஆட்ட நேரம் முடியும்வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இதனால் 2-வது நாள் ஆட்டம் 47 ஓவருடன் முடிவடைந்தது.

    ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • லபுசேன், மிட்செல் மார்ஷ் அரைசதம் அடித்தனர்.
    • ஆமிர் ஜமால் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்களும், ஆமிர் ஜமால் 82 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 47 ரன்னில் வெளியேறினார். ஆஸ்திரேலியா 47 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது லபுசேன் 23 ரன்னுடனும், ஸ்மித் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அத்துடன் 2-வது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 38 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த மிட்டிசெல் மார்ஷ் அரைசதம் அடித்து 54 ரன்னில் வெளியேறினார். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர். இந்த ஜோடி ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியா மளமளவென விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது.

    பின்னர் கடைநிலை பேட்ஸ்மேன்களை ஆமிர் ஜமால் அடுத்தடுத்து வீழ்த்த ஆஸ்திரேலியாவால் ரன் சேர்க்க முடியாமல் 299 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜமால் கடைசி ஏழு பந்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் மொத்தம் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பாகிஸ்தான் தற்போது 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினால் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 313 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 88 ரன்னும், ஆமிர் ஜமால் 82 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. லபுசேன் 60 ரன்னும், மிட்செல் மார்ஷ் 54 ரன்னும் எடுத்து வெளியேறினர். அலேக்ஸ் கேரி 38 ரன்னில் அவுட்டானர்.

    பாகிஸ்தான் சார்பில் ஆமீர் ஜமால் 6 விக்கெட்டும், அகா சல்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    14 ரன்கள் முன்னிலையில் உள்ள பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். அயூப் 33 ரன்னும், பாபர் அசாம் 23 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 14 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
    • 2-வது இன்னிங்சில் 115 ரன்னில் சுருண்டதால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் சிட்னியில் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தது. பின்னர் நேர்த்தியான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை 299 ரன்னில் சுருட்டியது. ஜமால் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் 14 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் சொதப்பியது. ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. முகமது ரிஸ்வான் 6 ரன்களுடனும், ஜமால் ரன்ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் 28 ரன்னிலும், ஜமால் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் 115 ரன்னில் சுருண்டது. ஹேசில்வுட் 4 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

    லபுசேன்- டேவிட் வார்னர்

    130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது அவரின் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும்.

    லபுசேன் 62 ரன்களும, ஸ்மித் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. ஆமிர் ஜாமல் ஆட்டநாயகன் விருதும், பேட் கம்மின்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

    • கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோகித் சர்மா அதில் கலந்து கொள்ளவில்லை.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோகித் சர்மா அதில் கலந்து கொள்ளவில்லை. 

    வேகப்பந்து ஸ்லிப் கேட்ச் பயிற்சியின் போது முதல் ஸ்லிபில் விராட் கோலி அடுத்து கேஎல் ராகுல் அதனை தொடர்ந்து நிதிஷ் ரெட்டி ஆகியோர் கேட்ச் பயிற்சியில் ஈடுபட்டனர். 

    மேலும் சுழற்பந்து வீச்சுக்கான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் சுப்மன் கில் ஈடுபட்டார். ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். பெஞ்சில் இருக்கும் வீரர் கூட பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.


    இதனால் ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. கடைசி டெஸ்ட்டில் கேப்டனாக பும்ரா செயல்படவும் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த பயிற்சி புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

    முன்னதாக அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிட்ச்சை பார்த்த பிறகு தான் ஆடும் லெவனை அறிவிப்போம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் நாளைய டெஸ்டில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • 5 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது.
    • இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் நாளைய டெஸ்டில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பும்ரா மற்றும் பயிற்சியாளர் கம்பீருடன் இணைந்து ரோகித் சர்மா சிட்னி மைதானத்தை பார்வையிடும் வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரோகித்தும் கில்லும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதனால் நாளைய போட்டியில் ரோகித் விளையாடுவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • இந்திய அணியில் ரோகித்துக்கு பதிலாக சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

    இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

    கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

    ஏற்கனவே இந்தப் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்.

    இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக கேட்ச் செய்த வீரர்களில் இரண்டாவது இடத்தை ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவின் லட்சுமண், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார்.

    இவர்கள் மூவரும் தலா 36 கேட்ச் பிடித்துள்ளனர்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 46 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.

    • தற்போது நடைபெறும் ஒரு போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன்.
    • எப்போது ஓய்வுப்பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.

    இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது பேட்டி அளித்த ரோகித் சர்மா,

    சிட்னி போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. ஓய்வு தேவைப்பட்டதால் விலகினேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது. ஃபார்மில் இல்லாததாலேயே. சிட்னி போட்டியில் இருந்து விலகினேன். மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. நான் எங்கும் செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறேன். பும்ராவின் கேப்டன்ஷிப் பாராட்டத்தக்கதாக சிறப்பாக தான் உள்ளது.

    மைக், லேப்டாப் அல்லது பேனா வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்கள் வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்பொழுது செல்ல வேண்டும், எப்பொழுது விளையாட கூடாது, எப்பொழுது Dugout-ல் உட்கார வேண்டும், எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரு குழந்தைகளின் தந்தை, என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

    முன்னதாக, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரங்களில் ஆல் அவுட் ஆனது. 

    • இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    சிட்னி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் மற்றும் பும்ரா விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 6 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    ×