என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷர்துல் தாகூர்"

    • ஷர்துல் தாகூர் அடுத்தடுத்து பந்தில் விக்கெட் வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
    • டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் ஐதராபாத் 2.2 ஓவரில் 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்கோர் 7.3 ஓவரில் 76 ரன்னாக இருக்கும்போது டிராவிஸ் ஹெட் 28 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை பிரின்ஸ் யாதவ் வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய கிளாசனும் அதிரடியாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக 17 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் ரெட்டி 32 பந்தில் வெளியேறினார். இவரை ரவி பிஷ்னோய் க்ளீன் போல்டாக்கினார்.

    இதனால் 14.1 ஓவரில் 128 ரன்கள் அடிப்பதற்குள் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 200 ரன்னைத் தொடுவது சந்தேகமானது. ஆனால் அனிகெட் வர்மா 13 பந்தில் 36 ரன்களும், பேட் கம்மின்ஸ் 4 பந்தில் 18 ரன்களும் அடித்தனர். என்றபோதிலும், பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்கும்போது 17.3 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.

    இறுதியாக 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் சேர்த்தது. ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ பேட்டிங் செய்து வருகிறது.

    • இந்திய அணியில் ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • தென்ஆப்பிரிக்கா அணியில் மகாராஜ், லுங்கி நிகிடி இடம் பிடித்துள்ளனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீல் எல்கர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம:-

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.

    தென்ஆப்பிரிக்கா அணி:

    டீன் எல்கர், மார்க்கிராம், ஜோர்சி, ஸ்டப்ஸ், பெடிங்காம், வெர்ரைன், யான்சென், மகாராஜ், ரபாடா, பர்கர், லுங்கி நிகிடி.

    • பெர்த் டெஸ்டில் நிதிஷ் குமாரை களம் இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
    • ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? என ஹர்பஜன் சிங் கேள்வி.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோ எங்கே என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    உங்களுக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் தேவை. நிதிஷ் ரெட்டியை களம் இறக்குவதை விட உங்களுக்கு வேறு ஆப்சன் இல்லை. ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? அவர்களை ஒயிட்பால் கிரிக்கெட் வடிவத்திற்குள் சுருக்கிவிட்டோம். இரண்டு மூன்று வருடங்களுக்காக ஷர்துல் தாகூரை உருவாக்கினோம். தற்போது அவரை எங்கே? திடீரென இந்த தொடரில் நிதிஷ் குமார் போன்ற பந்து வீச அழைக்கிறீர்கள்.

    சவுரவ் கங்குலி போன்று ஒன்றிரண்டு ஓவர்கள் நிதிஷ் ரெட்டியால் வீச முடியும். அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினால் அது அவருக்கு போனஸ்ஆக இருக்கும். பந்து வீச்சில் கங்குலி இந்திய அணிக்கு செய்தது போன்று நிதிஷ் ரெட்டி செய்ய முடியும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

    ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன் ஆவார்.

    ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்திருந்தார்.

    • ஜடேஜா, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் அரை சதமும் 2-வது இன்னிங்சில் சதமும் விளாசியுள்ளார்.

    ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் சௌராஷ்ட்ரா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி முதல் இன்னிங்சில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் படோனி 60, யாஷ் துள் 44 ரன்கள் எடுத்தார்கள். சௌராஷ்ட்ரா அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.

    அதற்கடுத்ததாக களம் இறங்கிய சௌராஷ்ட்ரா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 271 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 38 (36) ரன்கள் எடுத்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியை ரவீந்திர ஜடேஜா தனியாளாக சுருட்டி வீசினார். அவர் மொத்தம் 12.2 ஓவரில் 38 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடைய அற்புதமான பவுலிங் காரணமாக டெல்லி அணி 94 ரன்களில் சுருண்டது.

    இதனால் 12 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை எளிதாக வென்ற சௌராஷ்ட்ரா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மொத்தம் 12 விக்கெட்டுகள், 38 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் மும்பை- ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதி வருகிறது. முதல் இன்னிங்சில் மும்பை அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் அய்யர், துபே, ரகானே ஆகியோர் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அந்த அணியில் அதிக பட்சமாக ஷர்துல் தாகூர் அரை சதம் விளாசினார்.

    இதனால் மும்பை அணி 120 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து விளையாடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 206 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை மீண்டும் தடுமாறியது. 54 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த மும்பை 101 ரன்னில் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஷர்துல் தாகூர் - தனுஷ் கோட்டியன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் சதம் விளாசியும் தனுஷ் கோட்டியன் அரை சதம் விளாசியும் அசத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 274/7 என்ற நிலையில் உள்ளது.

    ரஞ்சிக் கோப்பையில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், துபே உள்ளிட்ட நட்சத்திர இந்திய வீரர்கள் சுமாராக விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

    • முதலில் பேட்டிங் செய்த மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ரஞ்சி டிராபி தொடரில் இன்று தொடங்கிய ஆட்டம் ஒன்றில் மும்பை- மேகாலயா அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய மேகாலயா அணிக்கு தொடக்கம் முதலே திணறியது. அந்த அணி 2 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து பிரிங்சாங் சங்மா- ஆகாஷ் சவுத்ரி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    பிரிங்சாங் 19 ரன்னிலும் ஆகாஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனிஷ் சரக் 17, ஹிமான் புக்கான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் மேகாலயா அணி 86 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் ஷர்துல் தாகூர், ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 5-வது மும்பை வீரராக ஷர்துல் சாதனை படைத்துள்ளார்.

    மும்பைக்காக ரஞ்சி டிராபியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த வீரர்கள்:-

    ஜஹாங்கீர் கோட் (மும்பை) vs பரோடா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1943-44)

    உமேஷ் குல்கர்னி (மும்பை) vs குஜராத் - ஆனந்தில் சாஸ்திரி மைதானம் (1963-64)

    ஏ.எம். இஸ்மாயில் (மும்பை) vs சவுராஷ்டிரா - மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியம் (1973-74)

    ராய்ஸ்டன் டயஸ் (மும்பை) vs பீகார் - பாட்னாவில் மொயின்-உல்-ஹக் ஸ்டேடியம் (2023-24)

    ஷர்துல் தாக்கூர் (மும்பை) vs மேகாலயா - மும்பையில் பி.கே.சி மைதானம் (2024-25)

    • ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஷர்துல் தாகூர் விளையாடி வருகிறார்.
    • கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அரையிறுதியில் மும்பை, விதர்பா, கேரளா, குஜராத் அணிகள் முன்னேறியுள்ளனர். ஒரு அரையிறுதியில் குஜராத் -கேரளா அணிகளும் மற்றொரு அறையிறுதியில் மும்பை- விதர்பா அணிகளும் மோதுகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்துள்ள ஷர்துல் தாகூர் விளையாட உள்ளார்.

    கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் 7 கவுண்டி போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வரும் ஜூனில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான பயிற்சியாக கவுண்டி போட்டிகள் அமையும் என பார்க்கப்படுகிறது.

    ×