என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entrepreneurship"

    • விருதுநகர் அருகே தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் இணைந்து அத்திகுளம் கிராமப்புற மக்களுக்கு தொழில் முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

    முகாமை அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகமூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர்சுதா பெரியத்தாய் வரவேற்றார். யு.பி.ஏ. ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி தொடக்க உரையாற்றினார். விருதுநகரின் டி.ஐ.சி.யின் பொது மேலாளர் ராமசுப்ரமணியன், கிராமப்புற தொடக்கத் தொழில்முனைவோருக்கான டி.ஐ.சி. திட்டத்தை பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து வழக்குறைஞர் ராஜகோபால், விருதுநகர் மார்க்கெட்டிங்கில் சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மார்க்கெட்டிங் மேம்படுத்தும் வழி பற்றி பேசினார்.

    விரிவுரையாளர் பீட்டர் நிர்மல்ராஜ், பி.ராஜசுரேஷ்வரன் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினர். மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் ஒருங் கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினர். இதில் மாணவர்கள் மற்றும் அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பேராசிரி யைகள் அன்னபாக்கியம், பத்மப்ரியா, கலைவாணி மற்றும் மெர்லின்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும்.
    • 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

    "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார்.

    இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

    அவற்றின் பயனாகப் தொழில்கள் தொடங்குவதற்காக மொத்தம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டது.

    மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், முனைவு

    பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் ௨௮௮ மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கித் தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர்.

    இதுபற்றி சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற எஸ்.அஞ்சலி கூறுகையில், "அண்ணல் அம்பேத்கர் தொழில்

    முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்து சிவகங்கை மாவட்டத் தொழில் மையம், அலுவலகம் சென்று எனது நார் இழை பைகள் நெய்யும் தொழில் தொடங்குவது குறித்துத் தெரிவித்தேன்.

    அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் வங்கி கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நார் இழை பைகள் நெய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

    இதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் வருவாயும், ரூ.70 ஆயிரம் லாபமும் பெறுகிறேன். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்திய முதல்-அமைச்சருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

    • நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
    • அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட் அப்களை கொண்ட நகரமாக பெங்களூரு இருந்து வருகிறது. தங்களின் வருமானம் தருகின்ற நிலையான வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்க பலர் ஆர்வமாக முன்வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான சமாச்சாரம். அதுவும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.

     

    புதிய தொழில் தொடங்குவதால் பல சமயங்களில் பொருளாதார சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். எனவே அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது புதிதாகத் தொழில்முனைவோர் அன்றாட செலவுகளைப் பற்றி யோசிக்காமல் தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்த உதவும்.

    ஆனால் இந்த திட்டம் எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதை அது செயல்படுத்தப்பட்ட பிறகே பார்க்க முடியும். உதவித்தொகை உரிய தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும். யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இது சென்று சேர வேண்டும். இதைத்தவிர்த்து தொழில் சார்ந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
    • அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்

     இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

    தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

     

    2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

    ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.

    அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.

    சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

     

    கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×