என் மலர்
நீங்கள் தேடியது "தனிநபர் வருமானம்"
- டெல்லி அரசு அனைத்து வீடுகளுக்கும் 24X7 மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்தது.
- 100,000 புதிய தண்ணீர் இணைப்புகளைச் வழங்கியது.
டெல்லியில் தனிநபர் வருமானம் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து ரூ.4,44,768 ஆக உயர்ந்துள்ளது. இது, 2023ம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையில் மிக அதிகமாகும் என டெல்லி அரசு வெளியிட்ட புள்ளி விவர கையேடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வளர்ச்சியின் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணிகள் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குதல், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத இடங்களை முறைப்படுத்துதல் போன்றவை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு, பொதுச் சேவைத் துறையை, குறிப்பாக போக்குவரத்து, மின்சாரம், நீர் மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் மேம்படுத்தியுள்ளதாகக் கூறியதுடன், தினசரி 4.1 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் 1,300 மின்சார பேருந்துகளைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக டெல்லி திகழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அனைத்து வீடுகளுக்கும் 24X7 மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்தது. 100,000 புதிய தண்ணீர் இணைப்புகளைச் வழங்கியது. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியது.
மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள், முதியவர்கள் மற்றும் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கி ஆதரவளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடந்த காலங்களில் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சந்தித்த சவால்களைக் காட்டிலும் எதிர்காலம் சற்று மிகுந்த சவால்களையே கொண்டிருக்கும்.
- மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கடன் சுமை, உலகளவில் நடக்கும் மோதல்கள் போன்றவை வளர்ச்சியில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
அடுத்த சில தாசப்தங்களில் இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதிக வருமானம் ஈட்டும் தனி நபர்களைக் கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகள் எழலாம். அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால்பங்கை எட்டுவதற்கு இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகலாம் என்று உலக மேம்பாட்டு அறிக்கை 2024: நடுத்தர வருவாய் அமைப்பு என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் 108 நாடுகள் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் என வரையறுக்கப்பட்டன. ஒவ்வொரு நாடும் ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறியீட்டில், தனிநபர் வருவாயானது 1,136 அமெரிக்க டாலர் முதல் 13,845 அமெரிக்க டாலர்களைக் கொண்டிருக்கும்.
இந்த நாடுகள் கிட்டத்தட்ட 600 கோடி மக்களின் நாடாக உள்ளது. இங்குதான் உலக மொத்த மக்கள் தொகையில் 75 சதவீத மக்கள் வாழ்கிறார்கள். இங்கு, ஒவ்வொரு மூன்று பேரிலும் இரண்டு பேர் மிக மோசமான ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள்.
கடந்த காலங்களில் இந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சந்தித்த சவால்களைக் காட்டிலும் எதிர்காலம் சற்று மிகுந்த சவால்களையே கொண்டிருக்கும். மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, கடன் சுமை, உலகளவில் நடக்கும் மோதல்கள் கணிக்க முடியாத வணிகம் போன்றவை வளர்ச்சியில் பிரச்சனைகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியில் பெரும் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இன்னமும் பல நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், பழைய வரவு செலவு கணக்குகளையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, முதலீடுகளை விரிவுபடுத்தும் கொள்கைகளை வகுப்பதிலும் இதே நிலை தொடர்கிறது. இது கிட்டத்தட்ட முதல் கியரில் காரை மேலும் வேகமாக இயக்க முயல்வதற்கு சமம் என்கிறது உலக வங்கி அறிக்கை.
- ஸ்மார்ட் சிட்டி அமைப்பு ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றி வருகிறது.
- புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் கைலாஷ் நாதன் உரையாற்றினார். இதற்காக அவர் காலை 9.25 மணிக்கு புதுவை சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்று சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து சென்றார். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தார். காலை 9.30மணிக்கு தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கியது. தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் தமிழில் உரையாற்றினார். அவரது உரையில் கூறியிருப்பதாவது:-
ஏ.எப்.டி. உதவி திட்டம், நபார்டு வங்கிகள் மூலம் தற்போது நடைபெறும் பணிகளுக்கு ரூ.659 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 467 கோடிக்கான புதிய பணிகளும் மேற்கொள்ளப்படும். பிரதமர் ஏக்தா மால் ஏற்படுத்த ரூ.104 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
புதுவை விமான நிலையத்தின் ஓடுதளத்தை 3 ஆயிரம் மீட்டராக விரிவுபடுத்தவும், ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி அமைப்பு ரூ.620 கோடிக்கான திட்ட பணிகளை பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றி வருகிறது. இதில் ரூ.175 கோடிக்கான பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரூ.445 கோடிக்கான பணிகள் நடைபெற உள்ளது.
புதிய ஒருங்கிணைந்த பஸ் வளாகம் விரைவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதேபோல ரூ.99 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மக்கள் சேவைக்கு முன்னோடியாக அமையும்.
அரசு எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் 2020-21ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 418.96 கோடியிலிருந்து மாநில வருவாய், 2023-24ம் ஆண்டில் ரூ.11 ஆயிரத்து 311.92 கோடியாக உயர்ந்து 34.36 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
நமது பொருளாதாரத்தின் அளவு கடந்த 5 ஆண்டில் 46.44 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு சராசரி வளர்ச்சி வீதமான 9.56 சதவீதத்தை எட்டியுள்ளது. 2020-21ம் ஆண்டில் 2.21 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 2024-25ம் ஆண்டில் 8.81 சதவீதத்தை எட்டியுள்ளது.
தற்போதைய நிலையில் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டின் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 354ல் இருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 680ஐ அடைந்துள்ளது. ஒவ்வொரு தனிநபரிடமும் கூடுதலாக ரூ.15 ஆயிரம் வருவாய் தரவுகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.