என் மலர்
நீங்கள் தேடியது "புல்டோசர் நடவடிக்கை"
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மும்பையில் ஊர்வலம் நடைபெற்றது.
- ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்கியதில் சிலர் காயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மதக்கலவரம், வன்முறையில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியதும் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வசிப்பவர்கள்தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் அப்பகுதிகள் இடிக்கப்படுகிறது என உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்தது.
அதேபோல்தான் அரியானா மாநிலத்தில் இந்து அமைப்பினர் நடத்திய பேரணியில் கல்வீச்சு நடைபெற்றது. அப்போது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் காரணம் என அரியானா அரசு புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கியது.
பா.ஜனதா அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் புல்டோசர் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்த நிலையில்தான் ராமர் கோவில் கும்பாபிஷேகம் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்து அமைப்பினர் ஸ்ரீராம் ஷோப யாத்திரையில் ஈடுபட்டனர். ஊர்வலம் மிரா சாலை நயா நகர் பகுதியை கடந்தபோது ஒரு கும்பல் பைக் மற்றும் காரில் காவி கொடியுடன் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். கல் மற்றும் கம்புகளால் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில் இந்த கல்வீச்சு சம்பவத்திற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பு இடங்களில் வசித்து வருபவர்கள்தான் என அரசு சார்பில் சட்டவிரோதமான 15 இடங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது. இதனால் அப்பகுதிக்கு புல்டோசர் கொண்டு வரப்பட்டது.
புல்டோசர் மூலம் சட்டவிரோத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன.
- இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள் , இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
- ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீசும், அவர்கள் பதிலளிக்க நேரமும் வழங்கவில்லை
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் BR கவாய் [Gavai], KV விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில், அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார்.
ஆனால் கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக வீட்டையோ காட்டத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும்பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத் தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தாவே மற்றும் CU சிங் ஆகியோர், தங்களது கட்சிக்காரர்கள் 50- 60 வருடங்களாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரரின் மகன் சரியில்லை என்பதற்காகவோ அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதனாலோ அடாவடியாக எடுத்தவுடனே அவரின் வீட்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை செப்டெம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்துவைத்தனர்.
- ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும்.
- கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்று இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹொசைன்மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் BR கவாய், KV விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டோ அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலோ ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டையோ கட்டடத்தையோ எப்படி இடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய நீதிபதி சுவாமிநாதன், ஏன் இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், அவர்கள் பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும் பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் ஏன் இடிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராகத் தான் பேசவில்லை என்றும் இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்றே கூறுவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக ஆளும் மாநிலங்களில், குற்ற வழக்குகளில் கைதாவோரின் வீடுகளை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் பொதுஇடம், நடைபாதை, ரயில்வே தடம் மற்றும் நீர்வழிப்பாதை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
- அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை அமலில் உள்ளது
- நாட்டின் குடிமக்களுக்கு உறைவிடமும் வாழ்வாதாராமும் மறுக்கப்படுவது அடிப்படை உரிமையை மீறும் செயல்
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் அக்டோபர் 1 வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இந்த உத்தரவை மீறி ஆங்காங்கே புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் தாராவி பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என்று அங்கிருந்த மசூதியை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் கிளம்பினர். ஆனால் தாராவி மக்கள் பெரிய அளவிலான போராட்டம் நடத்தியதை அடுத்து அந்த முடிவு கைவிடப்பட்டது.
இதற்கிடையே அசாமில் காம்ரூப் [Kamrup] மாவட்டத்தில் கட்சுதொலி பதார் [ Kachutoli Pathar] கிராமத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. ஆனால் அந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் பல வருடங்களுக்கு முன்பே அனுமதி பெற்றுத்தான் தாங்கள் அங்கு வசித்து வருகிறோம் என்று அம்மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காம்ரூப் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அதே போல மக்கள் வசிக்கும் வீடுகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளன.
எனவே வீடுகளை இழந்த கட்சுதொலி பதார் கிராமத்தை சேர்ந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் இருப்பதற்கான இடத்தையும், வாழ்வாதாரத்தையும் மறுப்பது சட்டப்பிரிவு 14, 15, 21 ஆகியவற்றின் கீழ் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
- குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிக்கிறது
- அது குருதுவாராவாக, மசூதியாக, இந்து கோவிலாக எதுவாக இருந்தாலும் ஒன்றுதான்
மதத் தளங்களை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அசாம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதுதொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதின்மன்றதால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நேற்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்ஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதிபர் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நோடீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது [நீதிபதிகளது] பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும், நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.
நடு ரோட்டில் ஒரு மதத் தளம் இருக்குமாயின், அது குருதுவாரா [சீக்கியர்களின் புனித கோவில்] ஆக இருந்தாலும் மசூதியாகி இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்த்தோ இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
- வழக்கு விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
- டி.ஒய்.சந்திரசூட் பதவிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.
சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக மாநில அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனோஜ் திப்ரேவால் ஆகாஷ் என்பவரது பூர்வீக வீடு கடந்த 2019-ம் ஆண்டு உரிய முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேவி பார்த்திவலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
விசாரணையின்போது பேசிய சந்திரசூட், புல்டோசர் மூலம் நீதி என்பது நாகரீகமடைந்த மனித சமுதாயத்தில் இல்லாத ஒன்று. புல்டோசர் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையை அனுமதித்தால் பழிவாங்கும் நடவடிக்கைக்காகக் குடிமக்களின் சொத்துக்கள் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது. மக்களின் குரலை அவர்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை அழிக்கும் அச்சுறுத்தலால் ஒடுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதிப் பாதுகாப்பு வீடுதான்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். புல்டோசர் நீதி அனுமதிக்கப்படுமானால், சொத்துரிமைக்கான அரசியலமைப்பு சட்டத்தின் 300ஏ பிரிவு ஒரு உயிரற்ற காகிதமாக மாறிவிடும்.
இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்ட அல்லது அதற்கு அனுமதியளித்த மாநில அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார்.
இவரது பதவிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11-ந்தேதி(நாளை) பதவி ஏற்க உள்ளார்.
- குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பின் கீழ் உள்ளது.
பா.ஜ.க. ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது.
* குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய வீடுகள் இடிக்கப்படுவது முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பின் கீழ் உள்ளது. அதேபோல் கிரிமினல் சட்டத்தின் கீழும் உள்ளது.
* ஒரேநாள் இரவில் பெண்கள், குழந்தைகள் தெருவிற்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இல்லை.
* வீடுகள் இடிக்கப்படும் நடவடிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்.
* பலவருடங்கள் கடினமாக உழைத்து சராசரி மனிதன் வீடு கட்டுகிறான். இது அவனுடைய கனவு, அபிலாசைகள். பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக கட்டுகிறான். அதை அவர்களிடம் இருந்து பறித்து விட்டால், அது அதிகாரிகளை திருப்பிப்படுத்துவதற்காக மட்டுமே.
- நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது.
- பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் இந்த உத்தரவு செல்லாது.
குற்றவாளிகள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை புல்டோசர்களை கொண்டு இடிப்பதை உத்தர பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளன.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. புல்டோசர்களை கொண்டு சொத்துகளை இடிக்கும் விவகாரத்தில், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்களை வகுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் விசாரணையின் போது தெரிவித்து இருந்தது.
மேலும், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும். அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம்' என்றும் தெரிவித்து தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தது.
இந்த நிலையில் புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்தது. புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்க தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் சொத்துகளை இடிப்பதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகள் என்பதற்காக மட்டுமே மக்களின் வீடுகள் இடிக்கப்படுமானால் அது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதித்துறையின் பணிகளை அதிகாரிகள் கைகளில் எடுப்பதை ஏற்க இயலாது. வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தாலும் கூட வீடுகளை இடிக்கக் கூடாது.
குற்றம் சாட்டினாலே வீடுகளை எப்படி இடிக்கலாம்? குற்றம் சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே ஒருவரின் வீட்டை இடிப்பது சட்டவிரோதம். வீடுகளை இடிப்பது, ஒரே இரவில் தெருவில் பெண்கள், குழந்தைகளை பார்ப்பது மகிழ்ச்சியான காட்சியாக இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு சில உரிமைகள், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தின் வெளிச்சத்தில் பாதுகாப்புகள் உள்ளன.
பொது நிலத்தில் அனுமதியின்று கட்டிடம் கட்டப்பட்டாலோ அல்லது கோர்ட்டால் இடிப்பு உத்ரதரவு பிறப்பிக்கப்பட்டாலோ அதன் உத்தரவுகள் இதற்கு பொருந்தாது.
முன் அறிவிப்பு இல்லாமல் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 15 தினங்களுக்குள் இடிப்புகளை மேற்கொள்ள கூடாது. இடிப்பு நடவடிக்கைகளை வீடியோவாக எடுக்க வேண்டும்.
சொத்துக்களை இடிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்தியா முழுவதற்கும் வகுத்துள்ளோம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
- குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு பாஜக அரசு இடித்து வருகிறது.
- புல்டோசரால் வீடுகளை இடிக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.
இந்நிலையில், பிரயாக்ராஜில் ஒரு வழக்கறிஞர், ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று பேரின் வீடுகளை இடித்ததற்காக உத்தரபிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளை இடிக்கும் பாஜக அரசுகளுக்கு எதிரான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மனுதாரர்களான வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது மற்றும் 3 பேர் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது "பாஜக அரசால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு உத்தரவிடுவோம், இதைச் செய்வதற்கான ஒரே வழி அதுதான்" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.