என் மலர்
நீங்கள் தேடியது "கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்"
- பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது.
வண்டலூர்:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதனிடையே, பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். டெண்டருக்கு பிப்ரவரி 14-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
- கிளாம்பாக்கத்தில் பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் ரெயில் சேவை இல்லை.
- விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. வெளியூர் செல்லும் அனைத்து விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் கிளாம்பாக்கம் செல்ல மாநகர பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் ரெயில் வசதி இல்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி மாநில அரசு மற்றும் ரெயில்வே இணைந்து சுமார் ரூ.120 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பஸ்நிலையத்திற்கு நேர் எதிராக உள்ள இடத்தில் இந்த ரெயில் நிலையம் அமைய உள்ளது.
மேலும் ரெயில் நிலையத்தில் இருந்து நேரடியாக கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு செல்லும் வகையில் உயர்மட்ட நடை மேம்பாலமும் ரூ.79 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய ரெயில்நிலையம் அமைப்பதற்கு இடத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்ததாமல் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து நேற்று முதல் புதிய ரெயில் நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிய ரெயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் வர உள்ளன. இதில் 2 நடைமேடைகள் மின்சார ரெயில்களுக்கும், ஒருநடைமேடை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, `நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெயில் நிலைய கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டடது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அது சரி செய்யப்பட்டது.
தற்போது ரெயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டுதல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நடைமேடைக்கு மண் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது பயணிகளின் போக்குவரத்து வசதி மேலும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம்:
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், கிண்டி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில் நிலையம் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. இதனால் ரெயில் நிலையம் எப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் நிலையம், மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 500 மீ. தொலைவில் 3 நடைமேடைகளுடன் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு உள்ள சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது.
ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே புதிய ரெயில் நிலைய பணி வருகிற மே மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையப்பணியில் 50 சதவீதத்திற்கு மேல் முடிந்து விட்டது. வருகிற மே மாதத்திற்குள் முழு பணியையும் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது என்றார்.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த பணியும் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வர முடியும்.