என் மலர்
நீங்கள் தேடியது "பட்ஜெட் தொடர்"
- 2026 நிதியாண்டில் விலைவாசி உயர்வால் ஏற்படும் பணவீக்கம் ஆபத்து குறைவாகவே இருக்கும்.
- 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.
பாராளுமன்றத்தில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதன்பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 6.3 சதவீதத்தில் இருந்த 6.8 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-
* பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
* நிலையான தனியார் நுகர்வு உள்ளிட்டவைகளால் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. 2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் சமநிலையில் உள்ளன.
* அடிமட்ட அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும்.
* காய்கறிகள் சீசன் மற்றும் காரிஃப் அறுவடை ஆகியவற்றால் 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது.
* 2026 நிதியாண்டில் பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கம் ஆபத்து குறைவாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது. உலகளவிலான புவிசார் அரசியல் பதட்டங்கள் பணவீக்கத்தில் இன்னும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
* 2024-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க தேர்தலைச் சுற்றியிருந்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் அமெரிக்க டாலர் வலுவான நிலையை பெற்றதாகும்.
- ஜனாதிபதி உரையில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விசயங்கள் இடம்பெறவில்லை.
- பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, மணிப்பூர் விவகாரம் ஆகியவை இடம் பெறவில்லை.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பாராளுமன்ற இருஅவைகளின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, மற்ற கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் காங்கிரஸ் கட்சிக்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக ஜனாதிபதி உரையாற்றுவார். இந்த உரை எதிர்காலத்தில் அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை பற்றியது. ஆனால் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, மணிப்பூர் விவகாரம் ஆகியவை ஜனாதிபதி உரையில் இடம் பெறவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா கே. சுரேஷ் கூறுகையில் "ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிப்பு மற்றும் பட்ஜெட் விவாத்தின்போது எழுப்பக்கூடிய பல்வேறு விவகாரங்கள் குறித்து முழுமையாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜனாதிபதி உரையின்போது மக்கள் தொடர்பான பல விசயங்கள் குறிப்பிடப்படவில்லை. அரசு அவர்களுடைய வேலைகளை மட்டுமே செய்ய விரும்புகிறது. மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை. ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மக்கள் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுக்க விரும்புகிறோம். என்றார்.