search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேபரேலி"

    • உ.பி.யின் ரேபரேலி தொகுதியில் மே 13-ம் தேதி ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.
    • அங்கு பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று அவர் முடிவெட்டிக் கொண்டார்.

    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் கடந்த மே 13-ம் தேதி பிரசாரம் செய்த ராகுல் காந்தி, அங்குள்ள பிரிஜேந்திர நகரில் உள்ள ஒரு சலூனுக்கு சென்று முடிவெட்டிக் கொண்டார்.

    அப்போது தனக்கு முடிவெட்டிய அந்தக் கடை உரிமையாளர் மிதுனிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த வீடியோ பதிவு கவனம் பெற்றது.

    இந்நிலையில், தனக்கு முடி வெட்டிய மிதுனுக்கு 2 நாற்காலிகள், ஒரு ஷாம்பூ மேஜை, இன்வெர்ட்டர் போன்றவற்றை ராகுல் காந்தி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

    ராகுல் காந்திக்கு முடி வெட்டி 3 மாதத்துக்குப் பிறகு இந்தப் பரிசை அவர் அனுப்பி வைத்திருப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, மிதுன் கூறுகையில், மூன்று மாதத்துக்கு பிறகு பரிசு அனுப்பி வைத்துள்ள ராகுல் காந்திக்கு நன்றி என தெரிவித்தார்.

    • வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதியிலும் ராகுல் வெற்றி.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி.

    பாராளுமன்ற தேர்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றாா்.

    விதிகளின்படி ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    வயநாடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது.

    தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி தோ்வு செய்தது.

    இந்நிலையில், தோ்தல் செலவுகளுக்காக ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் தலைமை கட்சி நிதியில் இருந்து வழங்கியது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்த கிஷோரி லால் சா்மா, கேரளத்தின் ஆழப்புழையில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழகத்தின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஆகியோரும் தலா ரூ.70 லட்சம் பெற்றுள்ளனா்.

    இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் நடிகை கங்கனா ரணாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தோ்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் மூத்த தலைவா்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனா்.

    வேட்பாளருக்கான தோ்தல் பிரசார செலவுக்கு உச்சவரம்பு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய வரம்பு இல்லை. வேட்பாளா்களுக்கான செலவு வரம்பை பாராளுமன்ற தோ்தலுக்கு ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டமன்ற தோ்தலுக்கு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் மத்திய அரசு கடந்த 2022-ல் உயா்த்தியது.

    • பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
    • பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.

    நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.

     

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.

    தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

    • வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
    • வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.

     

    வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.

    காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.

    இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
    • ஒரே தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். இரண்டில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும்.

    இதனால் வயநாடு தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? ரேபரேலி தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இன்று தேர்தல் முடிவு வெளியான நிலையில், மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த்தார். அப்போது வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு ராகுல் காந்தி "நான் இரண்டு தொகுதியிலும் எம்.பி.யாக இருக்க முடியாது. ஆனால் இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுகொடுப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். அதேவேளையில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்த முறை அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறி அங்கு வெற்றி பெற்றுள்ளார். பாரம்பரிய தொகுதி கைவிட்டபோது கைக்கொடுத்த வயாநாடு தொகுதி எம்.பி.யாக நீடிப்பாரா? அல்லது பாரம்பரிய தொகுதிக்காக வயநாடு தொகுதியை விட்டுக்கொடுப்பாரா? என்பது ராகுல் கையில்தான் உள்ளது.

    • கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை.
    • ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது, சோனியா காந்தி ரேபரேலியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிபோது தனது மகனை (ராகுல் காந்தியை) தனது தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாக கூறியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-

    சோனியா காந்தி பிரச்சாரத்திற்காக ரேபரேலிக்கு சென்று தனது மகனை அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறினார். ரேபரேலியில் நீண்ட காலமாக பணியாற்றிய ஒரு கட்சிக்காரரையாவது அவர் பார்த்திருப்பாரா?

    அவர், கோவிட் தொற்று காலத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது தொகுதிக்குச் செல்லவில்லை. இப்போது அவர் தனது மகனுக்காக வாக்குகளைக் கேட்கிறார். அவர்கள் அந்த இடத்தை தங்கள் குடும்பச் சொத்தாக நினைக்கிறார்கள்.

    காங்கிரஸ் இளவரசர் தேர்தலில் போட்டியிட வயநாட்டில் இருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். இது என் அம்மாவின் தொகுதி என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிகிறார்.

    எட்டு வயசுக் குழந்தை படிக்கப் போனாலும், அப்பாவே அந்த பள்ளியில் படித்திருந்தாலும் அதை அப்பாவின் பள்ளி என்று சொல்வதில்லை.

    இந்த குடும்பம் சார்ந்தவர்கள் பாராளுமன்ற ஆசனங்களின் உயிலை எழுதுகிறார்கள். ஜார்கண்ட் இதுபோன்ற குடும்பம் சார்ந்த கட்சிகளிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.

    5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய வி.ஜ.பி. வேட்பாளர்களும் அடங்குவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

    மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் முக்கியமானவர்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார்.

    பிஹாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.

    நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 174 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    வாட்டர் கூலர்கள், மின்விசிறிகள், கூடாரங்கள் போன்றவற்றை பொருத்தி வாக்காளர்களை கடும் வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட வக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும் க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்களையும், 30 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இதை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. 7 கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    • நான் பேசுவதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார்.
    • ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் சோனியாவுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை மோடியால் சொல்லாமல் இருக்க முடியாது என்று நான் சமீபத்தில் பேசினேன்.

    2 நாட்கள் கழித்து அதானி, அம்பானி பற்றி மோடி பேசினார். நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி காப்பி அடித்து பேசுகிறார்.

    இதில் என்ன தெரிகிறது? என்னால் அவரை எந்த விசயத்திலும், எப்படியும் பேச வைக்க முடியும்.

    நீங்களும் பிரதமர் மோடி ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் பிரசார மேடைகளில் பேசுகிறேன். அதை அடுத்த நாளே பிரதமர் மோடி எடுத்து பேசுவார்.

    மோடி பிரசாரங்களில் இப்போது இதுதான் நடக்கிறது. புதிதாக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை.

    இன்று இங்கு பேசிய எனது தாயார் ரேபரேலி தொகுதியை என்வசம் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.

    பாரம்பரியமிக்க ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெருமையுடன் நான் இதை சொல்கிறேன். எனது தாயின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டு மக்களுக்காக உழைக்க 20 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.

    இவ்வாறு ராகுல் பேசினார்.

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் இந்த முறை சர்மா என்பவர் போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் காந்தி குடும்பத்தை (ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) சேர்ந்தவர்கள் காலங்காலமாக போட்டியிட்டு வந்தனர்.

    கடந்த மக்களவை தேர்தலின்போது அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிட்டனர். ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

    தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இதனால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதியில் சர்மா போட்டியிடுகிறார்.

    ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி தனது சகோதரருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறார். ரேபரேலி தொகுதி குடும்ப தொகுதி என பிரியங்கா காந்தி அடிக்கடி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் அமித் ஷா அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "ரேபரேலி எந்த குடும்பத்தின் தொகுதியும் கிடையாது. அது மக்களுடைய தொகுதி" என்றார்.

    மேலும், இயற்கை பேரழிவுகள் அல்லது விபத்துகளின் போது காந்தி குடும்பம் ரேபரேலிக்கு சென்றதில்லை என்று பாண்டே கூறியது சரிதான் என்றார்.

    சமாஜ்வாடி எம்.எல்.ஏ. பாண்டே இன்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் காங்கிரஸ் அதை நிராகரித்தது. காங்கிரஸ் ஆட்சியை வந்தால் அயோத்திக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் என்றார்.

    • ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல.
    • தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது.

    ரேபரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ராகுல்காந்தி பற்றி கூறுகையில், ஒரு சகோதரியாக, என் சகோதரர் மகிழ்ச்சியான மனிதராக இருக்க விரும்புகிறேன். அவர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

    ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆக்கினால் மகிழ்ச்சி அடைவீர்களா என்ற கேள்விக்கு, அது ஆட்சிக்கு வந்தால் இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என்று அவர் பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், `நாங்கள் இருவரும் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறோம். நான் 15 நாட்களாக இங்கே இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ரிமோட் கன்ட்ரோல் மூலம் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் அல்ல என்பதால் எங்களில் யாராவது ஒருவர் இங்கு இருக்க வேண்டும்.

    நாங்கள் இங்கு கடுமையாக உழைத்துள்ளோம். இந்த தொகுதி மக்களுடன் எங்களுக்கு குடும்ப உறவு உள்ளது. நாங்கள் சுற்றி இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • 53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.

    அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×