என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜ்கோட் டெஸ்ட்"

    • சுப்மன் கில் 9 பந்தில் ரன்ஏதும் சேர்க்காமல் டக்அவுட்.
    • ஜெய்வால் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சர்பராஸ் கான், த்ருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டார்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். கடந்த போட்டியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் இந்தியா 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. வலது கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜாவை களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    டக்அவுட் ஆகி சோகமாக வெளியேறும் சுப்மன் கில்

    ரோகித் சர்மாவின் திட்டம் கைக்கொடுத்தது. ரோகித் சர்மா ஒரு பக்கம் நிலையாக நின்று அரைசதம் அடித்தார். மறுபக்கம் ஜடேஜா ஆதரவாக விளையாடி வந்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் வீசியுள்ளது. மார்க் வுட் 2 விக்கெட்டும், ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    ரோகித் சர்மா 52 ரன்களுடனும், ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • ஜெய்ஸ்வால், கில், ரஜத் படிதார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா களம் இறங்கினார்.
    • ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 125 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை வலது கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், அடுத்து இரண்டு அறிமுக வீரர்கள் இருப்பதால் ஜடேஜாவை முன்னதாக களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    ரோகித் சர்மாவின் கணக்கை ஜடேஜா வீணடிக்கவில்லை. சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டார். ரோகித் சர்மா உடன் சரியான முறையில் ஜோடி அமைத்தார்.

    ஜடேஜா 97 பந்தில் ஐந்து பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அத்துடன் ரோகித் சர்மா உடன் இணைந்து இந்திய அணிக்கு (158/3) 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளார்.

    • 79 சிக்ஸ் உடன் டோனியை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
    • இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் கண்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜடேஜா 68 ரன்களுடனும், ரோகித் சர்மா 97 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ரேஹன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலும், 3-வது பந்திலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவர் 157 பந்தில் சதத்தை எட்டினார். சொந்த மண்ணில் அவரது 9-வது சதம் இதுவாகும்.

    மேலும், இந்த ஆட்டத்தில் இதுவரை இரண்டு சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

     சேவாக் 90 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார். டோனி 78 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா 79 சிக்ஸ் உடன் டோனியை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும், இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கி 3 சதங்கள் அடித்துள்ளார். முரளி விஜய், கேஎல் ராகுல், விஜய் மெர்சன்ட் ஆகியோரும் 3 சதங்கள் அடித்துள்ளனர். கவாஸ்கர் 4 சதங்கள் அடித்துள்ளார்.

    • இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
    • 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 196 பந்துகளில் 131 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

    அதன் பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது அவரின் தந்தையும், மனைவியும் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்.

    ஹர்திக் பாண்டியா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சர்பராஸ் கான் 48 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த அணியில் அவர் இடம்பிடிக்க போராடி வந்தார்.

    இந்த நிலையில்தான் தற்போது ராஜ்கோட் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 26 வயதாகும் சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். 301 நாட்அவுட் அதிகபட்ச ஸ்கோராகும்.

    • ரோகித் சர்மா, ஜடேஜாவின் அபார சதத்தால் இந்தியா முதல் நாளில் 326 ரன்கள் எடுத்தது.
    • 4வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் இந்திய அணி திணறியது. 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடி சதமத்த ரோகித் சர்மா 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா-ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜடேஜா 198 பந்தில் சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.

    ஜுரேல்

    அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இன்னிங்ஸ்-இல் ஜடேஜா 112 ரன்களை குவித்தார்.
    • இங்கிலாந்து சார்பில் டக்கெட் 133 ரன்களை குவித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

     


    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்வின் மற்றும் ஜூரேல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. அஸ்வின் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் ஆடிய ஜூரேல் 46 ரன்களில் ஆட்டமிழக்க பும்ரா 26 ரன்களையும், சிராஜ் 3 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-இல் 445 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரேஹன் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

     


    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தது. அந்த அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் 118 பந்துகளில் 133 ரன்களை குவித்துள்ளார். இவருடன் களமிறங்கிய கிராவ்லி 15 ரன்களையும், போப் 39 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் 9 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் டக்கெட் 153 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை எடுத்தது. பென் டக்கெட் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் குவிப்பு, இங்கிலாந்து 319 ரன்னில் ஆல்அவுட்.
    • நேற்றைய ஆட்டத்தின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போதுதான் கடந்த 13-ந்தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமானார்.

    அதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    நேற்று இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். சாதனையை கொண்டாடுவதற்குள் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக இந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    தலைசிறந்த வீரருக்கான இந்திய வீரர்கள் முதல்நாள் ஆட்டத்தின்போது இதை செய்திருக்க வேண்டும். இது மிகவும் காலதாமதம் என தனது அதிருப்தியை முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆல் அவுட்டானது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.

    முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    • இந்திய அணியின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் சதமடித்தார்.
    • மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 196 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியில் இறங்கினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஜெஸ்ய்வால் பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். சுப்மன் கில்லும் அரை சதமடித்தார்.

    104 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெய்ஸ்வால் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய ரஜத் படிதார் டக் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • 25 டெஸ்டில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 28.54 ஆகும். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.
    • 41 ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.79 ஆகும். 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக முகமது சிராஜ் திகழ்கிறார். இவரது பந்து வீச்சு எடுபட்டால் அந்த குறிப்பிட்ட போட்டியில் அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்.

    அந்த வகையில்தான் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இவருடைய முக்கியமான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்னில் சுருண்டது. இந்தியா 126 ரன்கள் முன்னணி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

    முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அரங்கில் 76 போட்டிகளில் 152 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    25 டெஸ்டில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 28.54 ஆகும். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.

    41 ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.79 ஆகும். 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.

    10 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 27.83 ஆகும். 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு வெற்றித் தேடிக் கொடுக்கம் வகையில் அட்டகாசமான ஸ்பெல் வீசி அசத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

    ×