search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றிக்கழகம்"

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார். 

    • சிகிச்சை பலன் இன்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சீராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை அரசு சரி செய்ய வேண்டும்.
    • அதிமுக வலிமையான கட்சி என்பதால் அவதூறு பரப்புகின்றனர்.

    சேலம்:

    சேலம் நரசோதிப்பட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டினேன். குறைகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. இதற்கு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ அதை சரிசெய்தால் பரவாயில்லை. அதை விட்டு விட்டு நான் சொன்ன கருத்துக்கு எதிர்மறை கருத்து என்பது எந்த விதத்தில் நியாயம்.

    கேள்வி: வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் 99 சதவீதம் சாதி பாகுபாடுகள் தமிழகத்தில் அப்படியே தான் இருக்கிறது என சொல்லியுள்ளார்?

    பதில்: ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

    கே: அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் பரவியுள்ளது குறித்து?

    ப: இதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வேண்டும் என்று இதுமாதிரி புரளியை கிளப்பி விடுறாங்க. அ.தி.மு.க. என்பது ஒரு கடல். இதில் அவரை மாதிரி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கட்சியில் அங்கம் வகிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்து கொண்டிருக்காங்க. அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த இயக்கம். பொன்விழா கண்ட கட்சி. அதனால் வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் வதந்தியை கிளப்பிக்கிட்டு இருக்கு. இது கண்டிக்கத்தக்கது.

    கே: பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து?

    ப: அரசாங்கம் அவர்களை அழைத்து முறையாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காண வேண்டும். அந்த மக்களின் பிரச்சினை என்ன? அவர்கள் என்ன? என்ன? கோரிக்கை வைக்கிறாங்க? என அதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலமாக தீர்வு காண வேண்டும். அதுதான் என்னுடைய நிலைபாடு.

    கே: தமிழகத்தில் மருந்து தட்டுபாடு நிலவி இருப்பதாக கூறப்படுவது குறித்து?

    ப: நேற்று கூட ஊடகத்தில் வந்த செய்தி. கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி துர்நாற்றம் வீசுவதாக ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். தமிழகத்தினுடைய பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட நிலை தான் உள்ளது. ஏற்கனவே நான் இந்த மருத்துவமனையில் உள்ள இந்த குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினேன். அதற்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்களே தவிர அதை சரி செய்யாமல் விட்டுவிட்டு வேண்டும் என்றே எடப்பாடி பழனிசாமி தவறான கருத்து சொல்கிறார் என கூறுகிறார்கள்.

    நாங்கள் அங்கு இருக்கிற நிலைபாட்டை எடுத்து சொல்கிறோம். குறைபாடுகளை தீர்ப்பது அரசினுடைய கடமை. மக்கள் எங்களிடம் விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்கிறாங்க. இப்படியெல்லாம் குறைபாடு இருக்கிறது, இதையெல்லாம் நீங்கள் வெளியே தெரிவிக்க வேண்டும். சரி செய்ய வேண்டும் என சொல்றாங்க. அதன் அடிப்படையில் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஊடகத்தின் வாயிலாக பேசுகிறோம். அரசாங்கம் எந்தெந்த மருத்துவமனையில் குறைபாடுகள் இருக்கிறதோ? அதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘வி.சாலை’ என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

    சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'வி.சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மாநாடு நடத்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கேட்கப்பட்டது. அவர்கள் 21 கேள்விகள் கேட்டு புஸ்சி ஆனந்துக்கு கடிதம் அனுப்பினார்கள். அவரும் பதில் கடிதம் கொடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டது. விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் இதற்கான அனுமதி கடிதத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, வக்கீல் அரவிந்த் ஆகியோரிடம் வழங்கினார்.

    • அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துபேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு புதுக்கோட்டை அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வந்த அவர் நிருபர்ளை சந்தித்தார்.

    அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்றவர்களில் 3 ஆயிரம் பேரின் டாக்டர் கனவு ஆண்டு தோறும் நனவாகி வருகிறது. இதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான்.

    2018-19ம் ஆண்டில் அரசு பள்ளியில் பயின்ற 30 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட பிறகு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு வருகின்றனர்.

    அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதன் காரணத்தால்தான் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 70 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இதனை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை அவசியம் குறித்து நன்கு அறிவேன். எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். ஏனெனில் இத்திட்டம் நிறைவுற்றால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

    40 மாத கால தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்று சட்ட, ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு, சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். 2026 வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும். தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக மாறினால்தான் பொருளாதாரம் மேன்மை அடையும். 2015ம் ஆண்டு ஜெயலலிதா தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தினார். 2019ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் கோடி தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

    தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் முதலீட்டை ஈர்த்து வருவதாக கூறுகிறார்கள். நான் உள்பட எதிர்கட்சிகள் கேட்பதை போல இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

    விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் ஆட்சியில் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தினாலும் அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பும் கொடுப்போம். ஆனால் தற்போது அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த கூட தி.மு.க. அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. நீதிமன்றம் சென்று அனுமதி பெறக்கூடிய நிலைஉள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.
    • கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

    அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில். பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.

    இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

    தடைகளைத் தகர்த்தெறிந்து. கொடி உயர்த்தி. கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.

    வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்!

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

    சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

    இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

    திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

    மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    போலீஸ் அதிகாரிகளின் கடிதம் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மூலமாக புஸ்சி ஆனந்திடம் வழங்கப்பட்டது. மாநாட்டு பந்தலின் நீளம், அகலம், பங்கேற்போரின் எண்ணிக்கை, மேடையில் அமர்பவர்கள் யார் யார்? முக்கிய பிரமுகர்கள் வரும் நேரம், வழி, அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்ட வசதிகள் என்னென்ன? எந்தெந்த பகுதியில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    எத்தனை வாகனங்கள் நிறுத்தலாம்? குடிநீர் வசதி, உணவுக்கூடம், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், நிலத்தின் உரிமையாளரிடம் பெறப்பட்ட அனுமதி கடித விபரம், மாநாட்டு இருக்கைகள் வசதி என்பது உள்பட 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர்.

    இந்த 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் நடிகர் விஜய் கட்சி தரப்பில் பதில் தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    போலீசாரின் 21 கேள்விகள் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்துவதில் ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரின் 21 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பான போலீசாரின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்க கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள இட வசதி பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், மாநாடு நடக்கும் இடத்தில் மேடை அரங்கு எத்தனை சதுர அடி நீளம் அகலத்தில் அமைகிறது என்ற விவரம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேடை அமைக்கப்படும் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் வசதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களுக்கு எந்தெந்த இடங்களில் எப்படி உணவு வழங்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு தொகுதி தொண்டர்கள் வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் நிறுத்துவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் உள்ள ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வருவார்கள் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் விளக்கமான பதில்களை அளித்துள்ளார்.

    இந்த பதில்கள் அடங்கிய கடிதத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து 21 விளக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தை கொடுத்தார்.

    விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீசார் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் விக்கிரவாண்டி அருகே மாநாடு நடக்கும் இடத்துக்கு மீண்டும் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

    அதன் பிறகு முறைப்படி விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ கடிதம் போலீஸ் தரப்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநாட்டுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடனும், உற்சாகத்துட னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    • நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம்.
    • தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்னகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி மதுரையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

    கட்டுமான பராமரிப்பு மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 212 பணிகளை 1015 கோடி ரூபாயில் 281 கிலோமீட்டர் பராமரிப்பு பணிகளை எடுக்கப்பட்டு தற்போது 200 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

    அதேபோல் இந்த நிதியாண்டில் 116 கோடி ரூபாய் மதிப்பில் 30 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் சிறப்பாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும். மதுரை மாவட்டத்தில் மட்டும் தரைமட்ட பாலங்கள், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருவழி சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று இருக்கிறது.

    தி.மு.க. அரசு 234 தொகுதிகளிலும் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக மதுரை மாவட்டம் இருக்கிறது.

    பெரிய மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி திகழ்கிறது. மதுரையில் முக்கிய சந்திப்புகளாக இருக்கக் கூடிய கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் ஒரு பாலம். அதேபோல் அப்பல்லோ மருத்துவமனை அருகே ஒரு பாலம் என 2 பாலங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பால கட்டுமான பணிகள் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும்.

    நடிகர் விஜய் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை தடுக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் செயல்படுகின்றன. பல கட்சிகள் காணாமல் போய்விட்டது.

    விஜய் கட்சியை தடுப்பது தி.மு.க.வின் நோக்கமல்ல. நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம். தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். புதிய கட்சிகளை தொடங்குவது ஜனநாயக உரிமை. தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 23-ந் தேதி விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

    மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்தார்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழகம் மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழகத்தினை தொடங்கி உள்ள நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் வருகின்ற 23-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு 6 நாட்களை கடந்த நிலையில், விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் மாநாடு நடைபெறும் இடத்தில் மாநாட்டு மேடை எவ்வளவு நீளம், அகலத்தில் அமைக்கப்படுகிறது. எந்த பகுதியிலிருந்து எவ்வளவு பேர் வருகை புரிவார்கள் அவர்களுக்கு இருக்கைகள் எவ்வளவு அமைக்கப்பட உள்ளது.

    பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு மாநாட்டில் வாகனங்கள் நிறுத்த எந்த பகுதிகள் ஒதுக்கி பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பார்கிங் வசதி எவ்வாறு செய்யப்படுகிறது.

    வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது. 85 ஏக்கர் நிலம் குத்தகை பெறப்பட்டுள்ளதால் அவர்களிடம் உரிய அனுமதிக்கான கடிதம் எத்தனை நபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என 21 கேள்விகள் அடங்கிய நோட்டீசை டி.எஸ்.பி. சுரேஷ் விக்கிரவாண்டி காவல் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீசில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் விளக்கமளித்த பின் மாநாட்டிற்கான அனுமதி அளிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

    மாநாட்டிற்கு அனுமதியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆராய்ந்து தெரிவிப்பார் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
    • விஜய் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சி, மதுரையில் ஏற்கனவே இடம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்.

    இதையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்டமான முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் மாநாட்டை நடத்துவதற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கலெக்டரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த 28-ந் தேதி அன்று மனு அளித்தார்.

    இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், துணை சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விஜய் மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி உள்ளதா? மாநாட்டுக்கு அனுமதி அளித்தால் போக்குவரத்து பாதிக்கப்படுமா? என்பது பற்றியெல்லாம் ஆலோசித்தனர்.

    விஜய் மாநாட்டுக்கு 1½ லட்சம் பேர் வர வாய்ப்புள்ளதாக அனுமதி கேட்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதைவிட அதிகம் பேர் வருவதற்கே வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். அதே நேரத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இடத்தை தேர்வு செய்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதனால் விஜய் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுபோன்ற காரணங்களால் விக்கிரவாண்டியில் விஜய் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விஜய் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு அளிக்கப்பட்டுள்ள மனுவை பரிசீலனை செய்து வருகிறோம். விரைவில் முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், விஜய் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பழனியிடம் கேட்ட போது, அதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முடிவெடுத்து அறிவிப்பார் என்றார்.

    விஜய் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற தேர்தலையொட்டி நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இடத்தையும் சுத்தம் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு நடத்தப்படவில்லை.

    இதுபோன்ற சூழலில்தான் விஜய் மாநாட்டுக்கு அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் நிச்சயம் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஜய் மாநாட்டை நடத்துவதற்கு திருச்சி, மதுரையில் ஏற்கனவே இடம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார்.
    • விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விஜய் மும்முரம் காட்டி வருகிறார்.

    இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று காலை திடீரென சீரடி புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் அவர் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.

    விஜய் தனது தாயாருக்காக சென்னை அம்பத்தூரில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×