என் மலர்
நீங்கள் தேடியது "மக்களவைத் தேர்தல்"
- மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக்கணிப்புகளை முறியடித்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக அருகில் வந்துள்ளது.
முக்கியமாக இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் கைகள் ஓங்கியுள்ளது. மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளை இந்தியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி கைப்பற்றியுள்ளது. 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக வந்துள்ள இந்த தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணாமாக அகிலேஷ் யாதவ் உள்ளார். முக்கியமாக இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவுடன் அவரது குடும்பத்திலிருந்து 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கன்னோஜ் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவ் வெற்றிபெற்றுள்ளார்.
மணிப்பூரி தொகுதியில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளரை விட 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அகிலேஷ் யாதவின் உறவினர்களான அக்ஷய் யாதவ் அயோத்தி ராமர் கோவில் உள்ள பிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் ஆசாம்கர் தொகுதியிலும், ஆதித்யா யாதவ் பதவுன் தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற எம்.பியாக செல்ல உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், " இந்திய கூட்டணியின் வெற்றி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தலித்-பகுஜன் மக்களின் நம்பிக்கையின் வெற்றியாகும்.
ஒடுக்கப்பட்டோர், உயர் சாதியினரிடையே பிற்படுத்தப்பட்டோர், சமத்துவம், மரியாதை, சுயமரியாதை, கண்ணியமான வாழ்க்கை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான உரிமையை வழங்கும் அரசியலமைப்பைக் காப்பாற்ற தோளோடு தோள் நின்ற மக்களின் வெற்றி இது" என்று தெரிவித்துள்ளார்.
- கவனிக்கத்தக்க வகையில் 13 அமைச்சர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே தலா 2 அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
கூட்டணி கட்சிகளின் தயவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதால் புதிய அமைச்சரவை குறித்த எதிர்பார்ப்புகள் ஆரம்பம் முதலே உச்சத்தில் இருந்தது. அதிகபட்சமாக 78 முதல் 82 அமைச்சர்கள் வரை ஒரு அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று இருக்கும் சூழலில் தற்போது அமைத்துள்ள அமைச்சரவையில் 72 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இதில் கவனிக்கத்தக்க வகையில் 13 அமைச்சர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக அந்த13 பேரில் 5 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் பாஜக - குமாரசாமியின் ஜனதா தளம் கூட்டணி 28 இல் 19 இடங்களைப் பிடித்தது. இதற்கிடையில் குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, ஷோபனா கரண்த்லாஜே ஆகியோரும் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16 சீட்களும், பவன் கல்யாணின் ஜன சேனா 5 சீட்களும் வைத்துள்ளதால் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து இக்கட்சிகளை சேர்ந்த மொத்தம் 3 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையே தலா 2 அமைச்சர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து எல்.முருகன் மீண்டும் இணை அமைச்சர் ஆனார். அதிகபட்சமாக இந்த முறை பாஜக சறுக்கிய உத்தரபிரதேசத்தில் இருந்து 9 அமைச்சர்களும், அதனைத்தொடர்ந்து பீகாரில் இருந்து 8 அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மொத்தமாக கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சராக பதவியேற்றவர்களுள் 7 பேர் பெண்கள் ஆவர்.
மொத்தம் உள்ள 72 அமைச்சர்களில் 30 கேபினட் அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள், 5 தனிப் பொறுப்பு பதவி உடையோர் இடம்பெற்றுள்ளனர். இதில் 61 அமைச்சர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 11 பேர் கூட்டணிக் கட்சிகளை சேர்த்தவர்கள் . மேலும் புதிய அமைச்சர்களில் 7 பேர் முன்னாள் முதலமைச்சர்கள் ஆவர். ஓபிசி வகுப்பு அமைச்சர் 27 பேரும், எஸ்.சி சமூக அமைச்சர்கள் 10 பேரும், எஸ்.டி சமூக அமைச்சர்கள் 7 பேரும் ஆவர்.
- புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது
- பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோடி 3 வது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இந்த 72 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம், கலவரத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சு ஆகிய கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்கம் [ ADR ] அறிக்கை வெளியிட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாந்தனு தாக்கூர் மற்றும் தென் கிழக்கு பகுதிகளின் கல்வி - மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க எம்.பி சுகந்தா மஜூம்தார் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி குற்றம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
28 அமைச்சர்களில் பந்தி சஞ்சய் குமார், தாக்கூர், மஜூம்தார், சுரேஷ் கோபி ஜூசால் ஓரம் ஆகிய 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. 8 அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆக புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் 39 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- ராகுல் காந்தி பிரச்சாரங்களில் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது.
- ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தல் வழக்கம்போல பரபரப்புக்கும் ஆரவாரத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத வகையில் நடந்து முடிந்துள்ளது. வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பிரச்சாரத்தின்போது மக்களை வசீகரிப்பதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் மினி முதல் மெகா அரசியல் தலைவர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பிரச்சாரத்தின்போது செய்து வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தியும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.
இந்த மொத்த தேர்தலிலும் ராகுல் காந்தி பேட்டிகளிலும் பிரச்சாரங்களிலும் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த சிவப்பு அட்டையிடப்பட்ட பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் ராகுல் காந்தியின் மைக்கின் அருகே அந்த சட்டப் புத்தகம் இருந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தியால் கவனம் பெற்ற இந்த சிறிய சைஸ் பாக்கெட் சட்டப்புத்தக எடிஷனை அதிகம் பேர் வாங்கிவருவதால் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. லக்னோவைச் சேர்ந்த EBC புத்தக நிறுவனம் தயாரித்த இந்த 624 பக்கங்கள் கொண்ட சட்டப்புத்தக 16 வது எடிஷன் கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்பக்கட்டு மொத்தமாக தீர்ந்துள்ளது. கோபால் சங்கரநாராயணன் தொகுத்த இந்த புத்தகத்துக்கான முன்னுரையை முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடரமுடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி யாக தொடர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு ராகுலின் தங்கையும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடி கடந்த தேர்தலை விட குறைத்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளதை விமர்சித்திருந்த ராகுல் காந்தி, வலுவான எதிர்ப்பு இல்லாமலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற மோடி, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
- புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வலுவான போட்டியை வழங்கிய காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்ப்பாளர்களும் அதிகம் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.
ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர், அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடியாக உள்ளது. குறிப்பாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகியுள்ள சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக புதிய அமைச்சரவையில் இடப்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.
இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
- வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார்.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.

வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.
- நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.
நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வடக்கில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.
இதைத்தொடர்ந்து நடக்க உள்ள மறு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். ராகுல் காந்தி நம்பி வாக்களித்த வயநாடு மக்களை ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்ட்டை பாஜக தொடர்ந்து முனைவைத்து வருகிறது.
இந்நிலையில் தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் எல்லையற்ற அன்பையும் நிபந்தனைகளற்ற பாசத்தையும் நீங்கள் என்னிடத்தில் காட்டினீர்கள். அரசியல் கட்சி சார்பு, சமுதாயம், மதம், மொழி ஆகிய்வற்றைத் தாண்டி எனக்கு நீங்கள் எனக்கு ஆதரவளித்தீர்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

நீங்களே எனக்கான அடைக்கலம், எனது வீடு மற்றும் எனது குடும்பமும் நீங்கள் தான். என்னை ஒரு நொடி கூட நீங்கள் சந்தேகித்தாக நான் கருதவில்லை. இதுபோலவே மறு தேர்தலில் நிற்க உள்ள பிரியங்கா காந்திக்கு நீங்கள் எம்.பி வாய்ப்பு வழங்கினால் உங்களுக்காக சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார்.
- மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான வடிகால் கட்டுமானம் செய்யப்படவில்லை
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்த அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது தொடக்கத்திலிருந்தே இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் லாபத்துக்காகவே பாஜக ராமர் கோவிலை காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றமாசாட்டி வருகின்றன.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சத்துடன் நடத்தப்பட்ட ராமர் கோவில் திறப்பு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாத நிலையில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலும், விமான முனையமும் அந்த பகுதிக்கு புதிய பளபளப்பை கொடுத்தாலும் அங்குள்ள மக்களின் மனநிலை தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாகவே இந்த முடிவுகளை பார்க்கமுடிகிறது.
இதற்கிடையில் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சமபவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.



மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் கட்டி முடிக்கப்படும் முன்னதாகவே அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் இன்னும் அங்கு கட்டுமனாப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன.

- மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று [ஜூன் 30] ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று [ஜூன் 30] ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய மோடி, நண்பர்களே கடந்த பிப்ரவரி முதல் வந்த ஒவ்வொரு ஞாயிற்றுஇக்கிழமையும் உங்களுடன் பேசும் இந்த வாய்பபு கிடைக்காமல் நான் தவித்தேன்.

தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நான் மீண்டும் எனது குடும்ப உறுப்பினர்களான நாட்டுமக்கள் மத்தியில் வந்துள்ளேன் என்று கூறினார். அவரது உரையில், 2024 மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் இன்று கொண்டாடப்படும் ஹூல் நிவாஸ் இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச யோகா தினம் குறித்தும், அடுத்த வருடம் நடக்க உள்ள பாரீஸ் ஒலிம்பிக் குறித்தும் அவர் பேசினார். தொடர்ந்து அவரது இன்றைய உரையில் டி20 கோப்பையில் இந்தியா அணியின் வெற்றி குறித்து பேசுவார் என்றும் தெரிகிறது.
- குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.
- இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இஸ்லாமிய சமூகத்தினரின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ட சமூக உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான [APCR] வெளியிட்டுள்ள அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். இந்துத்துவ சித்தாந்தத்தை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடைய பாஜகவின் ஆட்சியில் சிறுபான்மையினர்களுக்கு குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாக கொண்ட APCR வெளியிட்டுள்ள அறிக்கையில், '2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு சமயங்களில் இஸ்லாமியர்கள் மீது தனிநபர் மற்றும் குழு தாக்குதல்கள் நடந்துள்ளன. மேலும் இஸ்லாமியர்களின் கட்டடங்கள் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இஸ்ரலாமியளார்ளுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை அறிக்கையில் APCR மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும் தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது கலெறிந்தது, கடைக்கு தீவைத்தது, மதராசாவில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பசு வதை, மாட்டிறைச்சியை வைத்திருந்தது, மதம் தொடர்பான கொடிகளை நிறுவியது, பசு பலியிடப்படும் காட்சிகளை இணையத்தில் பகிர்ந்தது உள்ளிட்டவற்றை காரணங்காட்டி இந்த தாக்குதல்கள் நடத்துள்ளதகாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மத்தியப் பிரேதசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகரிகளாலேயே இஸ்லாமியர்களின் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாண்டலா மற்றும் ரத்தலம் பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்களின் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மிகவும் தீவிரமான பிரச்சனையான இதுபோன்ற தாக்குதலைகளை தடுத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை APCR வலியுறுத்தியுள்ளது.