search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குக்கி"

    • மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியானது.
    • மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும். மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் அங்கு மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.

    மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    • நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
    • கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

    பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா செய்தி ஊடக நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்தது வருகிறது.

    மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

     

     இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கலவரக்காரர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி போலீஸ் உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

     

    இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு இடையில் PTI செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமித்ஷா, மணிப்பூரில் மெய்தேய் - குக்கி இனக்குழுக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

     

    தொடந்து பேசிய அவர், இதை மோதல் மற்றும் கலவரமாக மட்டும் பார்க்கக்கூடாது. இது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்சனை, இதற்கு வலுக்கட்டாயமாக எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்த முடியாது. மிகவும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சனை இது. மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

     

    • 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.

    2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

    அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.





    ×