search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகந்தா மஜும்தார்"

    • மேற்கு வங்க மக்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
    • மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

    பெண் டாக்டர் கொலை தொடர்பாக நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது மற்றும் கடைசி கட்ட பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

    ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குதல் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்குவது தொடர்பான மம்தா பானர்ஜியின் முடிவு தொடர்பாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா முஜும்தார் கூறியதாவது:-

    ஜூனியர் டாக்டர்களின் சில நிபந்தனைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரை நீக்கமாட்டேன் எனத் தெரிவித்தார். மேற்கு வங்க மக்கள் நிபந்தனைகள் வைத்த நிலையில், அவர்களிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இது திட்டமிட்ட தோல்வி என்பது பாஜக-வுக்கு தெரியும். இதற்கு யாராவது ஒருவர் பொறுப்பு என்றால், அது போலீஸ் கமிஷனரோ, மற்ற ஒருவரோ அல்ல. முக்கியமான குற்றவாளி மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மக்கள் மம்தா மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதனால்தான் பாஜக, மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

    மக்கள் விரும்பினால் ராஜினாமா செய்வதாக அவரே தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மக்களின் வலியுறத்தலை நிறைவேற்றும் வகையில் பாஜக தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.

    • 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு.
    • போலீசார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதால் கைது.

    மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காளியில் பழங்குடியின பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதாகவும், மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்கள் மூலம் பெறும் பணத்தை முறைகேடாக பறித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவர் தலைமறைவாக உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக்கோரி வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்கள் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதால் விவகாரம் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

    சந்தேஷ்காளி சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் முடிவு செய்தார். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதையும் மீறி பா.ஜதனா தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு செல்ல முயன்றார். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியபின் அவரை விடுவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சந்தேஷ்காளில் நடந்த முழு சம்பவம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தேன். அதை கேட்டு கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜனதாவிற்கு எதிராக மட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. 50 பேருடன் அப்பகுதியில் சுற்றி வருகிறார். இது பா.ஜனதா தலைவருக்கும், தொண்டர்களுக்கும் மட்டும் பொருந்தும் வகையிலான 144 தடை உத்தரவின் ஒரு பகுதி.

    ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர்கள் ஜமின்தார் போன்று நடந்து, மக்களை துன்புறுத்துகிறார்கள். மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இந்த விவகாரம் வெளியில் தெரியாத வண்ணம் குரலை ஒடுக்குகிறது. தற்போது பெண்கள் அவர்களுடைய குரலை எழுப்பியுள்ளனர். அனைத்து விவகாரத்திலும் ஆளுநர் கவனம் செலுத்துகிறார். உள்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்" என்றார்.

    ×