என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு குண்டு வெடிப்பு"

    • ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வெடித்து 9 பேர் காயம்.
    • உபா மற்றும் குண்டு வெடிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை.

    பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. முதலில் சிலிண்டர் வெடித்ததாக கூறப்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது உறுதி செய்யப்பட்டது.

    குண்டு வெடிப்பு தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தப்ப முடியாது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் பா.ஜனதாவினர் கர்நாடகா அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில், இந்த சம்பவத்தை தடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கார்நாடகா மாநில பாரதிய ஜனதா தலைவர் வி.ஓய. விஜேந்த்ரா கூறுகையில் "இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்க வேண்டம். முதலமைச்சர் சித்தராமையா இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்றார்.

    • லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    • தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    பெங்களூருவில் ராமேசுவரம் கபே ஓட்டலில் நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதை தொடர்ந்து தென் மாநிலங்களில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழகத்திலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை மாநகரில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

    லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெங்களூருவில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை போன்று தென் மாநிலங்களில் வேறு எங்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் மாநில போலீசார் முழுமையான கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • குண்டு வைத்த நபர் பேருந்தில் வந்துள்ளார்.
    • டைமர் செட் செய்து வெடிகுண்டடை வெடிக்கச் செய்துள்ளார்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா போலீசார் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தடவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலழிக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

    பா.ஜனதா தலைவர்கள் சித்தராமையான தலைமையிலான அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர், சித்தராமையாக இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்த சம்பவத்தை கர்நாடாக அரசு நடத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்த நியைியில் சித்தராமையாக இது தொடர்பாக தெரிவிக்கும்போது "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்து வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை மந்திரி சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். நான் மருத்துவமனைக்கும், சம்பவ நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறேன்.

    மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பா.ஜனதா இதை அரசியலாக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே குண்டு வைத்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவரின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒரு பையுடன் 30 முதல் 39 வயதிற்கு உட்பட்ட ஒருவர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

    • முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது.
    • ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள குந்தலஹள்ளியில் இயங்கிவரும் பிரபல ஓட்டல் ராமேஸ்வரம் கபேவில் நேற்று மதியம் 1 மணி அளவில் 250-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குண்டுவெடிப்பில் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் வேறு குண்டுகள் ஏதாவது இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தினர். ஓட்டலில் வெடித்த குண்டு ஐ.இ.டி வகை வெடிகுண்டு என்றும் வீரியம் குறைவான வெடிகுண்டு என்றும் தெரியவந்தது.

    குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு டைமர் கருவி, நட்டுகள், போல்டுகள், டிபன் பாக்ஸின் உடைந்த துண்டுகள் மற்றும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தொழில் போட்டி காரணமாக யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த ஓட்டலின் நிர்வாக இயக்குனர் திவ்யா கூறும்போது:-

    தொழில்போட்டியில் வாடிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தீவிரவாத அமைப்புகள் யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை.

    எனவே ஓட்டலில் குண்டு வைத்தது யார் என்று போலீசார் துப்பு துலக்கினர். அப்போது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்துகொண்டு முககவசம் அணிந்தபடி குண்டுவெடிப்பு நடந்த ஓட்டல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி காலை 11.30 மணியளவில் ஓட்டலுக்கு நடந்து வரும் காட்சிகளும், பின்னர் அந்த நபர் கேஷ் கவுண்டரில் பணம் செலுத்தி ஒரு தட்டில் ரவா இட்லியை வாங்கி கொண்டு காலை 11.45 மணியளவில் அவர் குப்பை தொட்டி அருகே ஒரு பையை வைத்துவிட்டு மீண்டும் பஸ்சில் புறப்பட்ட காட்சிகளும் பதிவாகி இருந்தது. அவர் சென்ற பின்புதான் அந்த பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்தது இந்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் என்பது உறுதியானது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் எப்படியும் கேமரா மூலம் சிக்கிவிடுவோம் என்று தெரிந்தும் அந்த நபர் மிகவும் தைரியமாக வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்துள்ளார்.

    இதற்கிடையே சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வாலிபரை ஏ.ஐ. தொழில் நுட்பம் (ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட்) மூலம் கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது முக அம்சங்கள் சிசிடிவி மூலம் கைப்பற்றப்பட்டு அவரது முகத்தை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். மேலும் ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஓரிரு நாட்களில் அவரை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்தார்.

    குண்டு வெடிப்பில் காயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த கெலாட் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் குண்டு வெடித்த இடத்தையும் பார்வையிட்டனர். மேலும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட சம்பவத்தை மாநில அரசு முன்னரே தீவிரமாக எடுத்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.      

    • தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்தில் வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்
    • இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காங்கிரஸ் அரசு ஏற்கும்

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று (மார்ச் 1) குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா காவல்துறையினர் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தடயவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.

    குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த பின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்தில் வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.


    மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாஜக ஆட்சியின் போதும் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது, ஆகவே பாஜக இதை அரசியலாக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காங்கிரஸ் அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார்.

    • ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. ஓட்டலில் கை கழுவும் இடத்திற்கு அருகே ஒரு பையில் இந்த குண்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும், பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் மற்றொரு புறம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடித்தது எந்த வகையான வெடிகுண்டு?, என்னென்ன பொருட்களை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்பட்டது?, இந்த குண்டு எந்த பயங்கரவாத அமைப்பினர் தயாரித்தது? என்பது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நிபுணர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும், மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அதுபோன்று, பெங்களூரு சர்ச்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கிய வெடிப்பொருட்களே, ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக சிவமொக்கா மாவட்ட ஆற்றுப்பகுதியில் பயங்கரவாதி ஷாரிக் மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து பயிற்சி பெற்றிருந்தனர். இந்த சம்பவத்திற்கும், தற்போது ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த ஆதாரங்கள் மூலமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்திற்கு சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் ஓட்டல் குண்டுவெடிப்பில் சிக்கிய டெட்டனேட்டர்கள், பேட்டரி, நட்டு, போல்ட்டுகள் ஆகியவையும், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் ஒன்று போல் இருப்பதை தடய அறிவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்யும் முன்பாகவே வெடித்திருந்தது.

    ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குக்கர் வெடிகுண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி வெடிகுண்டை தயாரித்து, டைமர் மூலம் வெடிக்க செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவரில் 2 குண்டுகளை வைத்து, அதற்கு டைம் செட் செய்து வெடிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையான வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நிபுணத்துவம் பெற்றதும், அவர்கள் தான் ஓட்டலில் குண்டுகளை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • நான் வழக்கமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுவேன்.
    • நான் வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தேன்.

    பெங்களூரு:

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி அங்கு தினமும் உணவு சாப்பிட செல்லும் குமார் அலங்கிரித் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் தனது எக்ஸ் தள பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் வழக்கமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுவேன். அதுபோல் குண்டு வெடிப்பு நடந்த சமயத்திலும் உணவு சாப்பிட ராமேஸ்வரம் கபே ஓட்டலுக்கு சென்றிருந்தேன். நான் எப்போதும் உணவை வாங்கிக்கொண்டு கைகழுவும் இடத்தின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிடுவேன். வழக்கம்போல் நான் சாப்பிட்டு கொண்டிருந்தபோது எனது அம்மா எனக்கு திடீரென்று போன் செய்தார். உள்ளே வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் போன் பேச வெளியே வந்தேன்.

    நான் வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் முதல் குண்டு வெடித்தது. குண்டு வெடித்து கரும்புகை வெளியேறியது.

    காதை பிளக்கும் அளவுக்கு டமார் என குண்டு வெடித்த சத்தம் இருந்தது. காயம் அடைந்த பலரது காது, கை, கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் வேதனையில் துடித்தனர். இதுபோன்ற பயங்கர சம்பவத்தை இதுவரை நேரில் பார்த்ததில்லை.

    எனது அம்மா போன் செய்ததால் தான் நான் உயிர் தப்பினேன். அவர் போனில் அழைக்கவில்லை என்றால், குண்டு வெடித்து சிதறிய பகுதியில் தான் நான் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பேன். எனது அம்மாவால் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக முதல் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரியது பற்றி கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த சிவகுமார், அவர்கள் ராஜினாமாவை விரும்புகிறார்களா? அவர்கள் கேட்கும் ராஜினாமாவை அவர்கள் விரும்பியபடி அனுப்புவோம். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் வெறும் அரசியல் செய்து வருகின்றனர். பெங்களூருவின் இமேஜை கெடுக்கின்றனர். அவர்கள் காலத்தில் கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.

    அவர்கள் கர்நாடகாவை காயப்படுத்தவில்லை. மாறாக நாட்டையும், தங்களையும் காயப்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

    • பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார்.
    • கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் ஓட்டல், அரசு பஸ்களில் மர்மநபர் பயணம் செய்த போது சிக்கிய வீடியோ காட்சிகள் மூலமாக, அவரது உருவப்படங்கள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மர்மநபர் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் குண்டுவெடிப்பு நடந்து 11 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

    பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார். அதன்பிறகு, மர்மநபர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. கல்யாண கர்நாடக மாவட்டங்களான ராய்ச்சூர், கலபுரகியில் மர்மநபர் பதுங்கி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மர்மநபர் கலபுரகியில் இருந்து ஐதராபாத் அல்லது மும்பைக்கு தப்பித்து சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றாரா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களிலும் குண்டுவெடிப்பு குற்றவாளியை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்திய மர்மநபர் யார்? என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர், கர்நாடகத்தை சேர்ந்தவர் தான் என்றும், பிற மாநிலங்களை சேர்ந்தவர் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    இதற்கு முன்பு கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மூலமாக வந்த உத்தரவை தொடர்ந்து ஓட்டல் குண்டுவெடிப்பை மர்மநபர் அரங்கேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி குண்டுவெடிப்பு நடந்திருந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குண்டுவெடிப்பை நடத்தியது யார்?, அந்த நபருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட பிற தகவல்களை வைத்து குண்டுவெடிப்பை நிகழ்த்திய மர்மநபர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அடையாளத்தை வைத்து குண்டு வெடிப்பு குற்றவாளி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கூடிய விரைவில் குண்டு வெடிப்பு குற்றவாளி கைது செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
    • சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில், சபீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

    • ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.
    • தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார்.

    சென்னை:

    பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளான ஷாசிப், தாஹா ஆகிய இருவரும் சென்னை திருவல்லிக்கேணி லாட்ஜில் ஒரு மாதம் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களில் ஷாசிப் தான் தொப்பி அணிந்து கொண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த ராமேஸ்வரம் கபே ஓட்டலில் இருந்து வெளியேறுவது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் முதலில் தெரிய வந்துள்ளது.

    அவர் தவற விட்டுச்சென்ற தொப்பி, அதில் ஒட்டி இருந்த தலைமுடி ஆகியவற்றை வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும், கர்நாடக மாநில போலீசாரும் துப்பு துலக்கி வந்தனர். இந்த நிலையில்தான் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

    ஷாசிப், தாஹா இருவரும் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர்.

    அதுதொடர்பான தகவல்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக தெரிய வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதேபோன்று இருவரும் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பலரை சந்தித்தும் பேசி இருக்கிறார்கள். இதன் மூலம் ஷாசிப், தாஹா இருவருக்கும் சென்னையில் பலர் அடைக்கலம் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்-யார் என்பது பற்றி அறிய விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இருவரும் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது பற்றிய தகவல்களை கண்டறிய 1000-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக துப்பு துலக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

    ஷாசிப், தாஹா இருவரும் பெங்களூருவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது போல சென்னையிலும் சதி திட்டத்தில் ஈடுபட திட்டம் வகுத்தார்களா? என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் பற்றி உளவுப்பிரிவு போலீசாரும் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று இருவரும் தொப்பி ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இந்த தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு தான் ஷாசிப் பெங்களூரு சென்றுள்ளார். அவருடன் தாஹாவும் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வணிக வளாகத்திற்கு சென்று தொப்பியை வாங்கியதுபோல சென்னையில் வேறு எங்காவது சென்று குண்டுவெடிப்பு சதி செயலுக்கு தேவையான பொருட்கள் ஏதாவது இருவரும் வாங்கினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பெங்களூரு குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் எந்தவித தங்குதடையுமின்றி குறிப்பிட்ட லாட்ஜில் தங்கி சென்றிருப்பது சென்னை போலீசாரை கடும் அதிச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதன் மூலம் சென்னைக்கு குற்றச்செயல்களில் தொடர்புடைய யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கலாம் என்கிற நிலை உள்ளதா? என்கிற அச்சம் மேலோங்கி இருப்பதை மறுப்பதற்கில்லை.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    • இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பனைக்குளம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேசுவரம் கபே உணவகத்தில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று 5 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

    சேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆயுதங்கள் வைத்திருந்தால், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகளில் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

    மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×