search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.பி.எல்"

    • ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
    • பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    கவுகாத்தி:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப்பிடமும் வீழ்ந்து ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4- வது தோல்வியை தழுவியது.

    கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் பஞ்சாப் அணிக்கு 145 ரன் என்ற எளிதான இலக்கு இருந்தது.

    ரியான் பராக் 34 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி ) , அஸ்வின் 19 பந்தில் 28 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்த னர். சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லீஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் சாம் கரண் 41 பந்தில் 63 ரன் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவேஷ் கான், சாஹல் தலா 2 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ச்சியாக 4- வது தோல்வியை தழுவியது. ஐதராபாத், டெல்லி, சென்னை ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற்ற அந்த அணி மொத்தத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. 16 புள்ளிகளுடன் ராஜஸ்தான் தொடர்ந்து 2- வது இடத்தில் உள்ளது.

    தொடர்ந்து 4 போட்டியில் தோற்றதால் பேட்ஸ்மேன் களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சாடியுள்ளார்.இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளும் கொஞ்சம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 144 ரன்கள் போதுமானது கிடையாது. நாங்கள் 160 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். பேட்டிங்கில் தான் தவறு செய்து விட்டோம். அங்கே தான் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைக்கிறேன். பேட்ஸ்மேன்கள் முக்கியத்து வத்தை உணர வேண்டும்.

    கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து இருக்கலாம்.

    நாங்கள் தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் ஒரு அணியாக என்ன தவறு செய்கிறோம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தொடரில் தற்போது முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த சமயத்தில் ஏதேனும் ஒரு வீரர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்ற உணர்வில் விளையாட வேண்டும்.

    இதை செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே சேர்ந்து செய்தால்தான், வெற்றி பெற முடியும். ஏனென்றால் இது தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போட்டி கிடையாது. ஒரு அணியாக சேர்ந்து விளையாடும் போட்டியாகும் . ஆனாலும் இது போன்ற நெருக்கடியான கட்டத்தில் தனிப்பட்ட ஒரு வீரர் அனைவருக்காகவும் போராட வேண்டும்

    இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

    பஞ்சாப் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது. ஏற்கனவே ராஜஸ்தானிடம் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது.

    • பிளே ஆப் சுற்றில் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.
    • கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் போட்டி முக்கியமானதாக இருக்கும்.

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் ஆட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 56 போட்டிகள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் அதிகார பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. பிளே ஆப் சுற்றில் நுழைய கடும் போட்டி நிலவுகிறது.

    2 தடவை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அறிமுக ஐ.பி.எல். லில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து விடும்.

    கொல்கத்தா அணி மும்பை, குஜராத், ராஜஸ்தானுடன் மோத வேண்டும். ராஜஸ்தான் அணி சி.எஸ்.கே., பஞ்சாப், கொல்கத்தாவுடன் விளையாட வேண்டும். கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் போட்டி முக்கியமானதாக இருக்கும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2016-ம் ஆண்டு கோப்பையை வென்ற சன்ரைசர்சஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 4 அணிகள் தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. இதில் டெல்லியை தவிர மற்ற அணிகளுக்கு 3  போட்டிகள் உள்ளன. டெல்லிக்கு 2 ஆட்டமே எஞ்சியுள்ளன.

    சென்னை அணி இனி வரும் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் (10-ந் தேதி) ராஜஸ்தான் (12-ந்தேதி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18-ந்தேதி) ஆகியவற்றுடன் மோதுகிறது. இந்த 3 ஆட்டத்திலும் வெல்ல வேண்டும்.

    18 புள்ளிகளை பெறும் போது உறுதியாக 'பிளே ஆப்' சுற்றுக்குள் நுழைய லாம். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் மற்ற அணிகள் முடிவை பொறுத்து நிலை இருக்கும்.

    ஐதராபாத், லக்னோ அணிகளுக்கு இதே நிலைதான் இருக்கிறது. ஐதராபாத்-லக்னோ அணிகள் இன்று மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 14 புள்ளிகளை பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறும்.

    இதனால் பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ஐதராபாத் மற்ற ஆட்டங்களில் குஜராத், பஞ்சாப்புடனும், லக்னோ அணி டெல்லி, மும்பையுடனும் விளையாடு கின்றன.

    டெல்லி அணி எஞ்சிய ஆட்டங்களில் பெங்களூரு, லக்னோவுடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஆகிய 4 அணிகளும் 8 புள்ளிகளுடன் உள்ளன. இந்த அணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு கடினமே. இதில் மும்பையை தவிர மற்ற அணிகளுக்கு 3 ஆட்டம் உள்ளது. மும்பைக்கு மட்டும் 2 போட்டியே இருக்கிறது. அந்த அணி கிட்டத்தட்ட வெளியேறி விட்டது.

    இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒரு அணியின் வெற்றி-தோல்வி முடிவை பொறுத்து மற்ற அணிகளின் நிலமை இருக்கிறது. இதனால் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். மேலும் நிகர ரன்ரேட் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற முக்கிய பங்கு வகிக்கும்.

    • இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்
    • விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

    மே 1 ஆம் தேதிக்குள் 15 பேர் அடங்கிய அணி வீரர்கள் பட்டியலை வழங்க ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். வாழ்க்கையின் தற்போதைய கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணியில் கோலி (361) மற்றும் டூ பிளசிஸ்க்கு (232) அடுத்தபடியாக அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் தினேஷ் கார்த்திக் (226) 3-ம் இடத்தில் உள்ளார்.

    இந்த சீசனில் சிறந்த பினிஷராக தினேஷ் கார்த்திக் உருவெடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய அவர், 35 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    ஆனால் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரோலுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. காயத்திலிருந்து மெதுனு பார்முக்கு திரும்பிய பண்ட், சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல். ராகுல் ஆகியோர் அந்த போட்டியில் உள்ளனர்.

    பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கார் ஆகியோர் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை மதித்து நடப்பேன். ஆனால் நான் 100% தயாராக உள்ளேன் என்பதை மட்டும் அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

    • ஐபிஎல் தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
    • கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியது.

    கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

    அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் அதன் பின் சற்று தடுமாற்றமாக விளையாடி இதுவரை 6 இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் க்ளீசன் எனும் வீரரை 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்குவதாகவும் சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    36 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2022 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

    • வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
    • இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

    இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    • கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார்.
    • சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவான் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக டேவன் கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் மார்ச் 22-ம் தேதி ஆரம்பமாகும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணியின் இடதுகை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவின் கட்டைவிரலின் காயம் ஏற்பட்டது. இதற்காக வரும் வாரம் அவர் அறுவை சிகிக்சை மேற்கொள்ள இருப்பதாகவும், 8 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக நியூசிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மே மாதம் வரை அவர் கிரிக்கெட் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    ஐ.பி.எல் 2024 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

    கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக டேவன் கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், டேவன் கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    • டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.

    இம்மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

    • இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது.
    • முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.

    ஐ.பி.எல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.

    முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது.


    ×